அம்மணி விமர்சனம்

அம்மணி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : லட்சுமி ராமகிருஷ்ணன், சுபுலட்சுமி பாட்டி, நிதின் சத்யா, ரோபா சங்கர் மற்றும் பலர்.
இசை : கே
ஒளிப்பதிவு : இம்ரான் அஹ்மது
படத்தொகுப்பு : ரெஜித் கே.ஆர்.
இயக்கம் : லட்சுமி ராமகிருஷ்ணன்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பாளர் : டேஹ் எண்டர்டெயின்மென்ட் வென் கோவிந்தா

கதைக்களம்…

சினிமாத்தனம் இல்லாத படங்கள் எப்போதாவது அரிதாக வரும். அந்த வகையில் வந்திருக்கும் அரிதான அம்மணி இவள்.

‘ஜீ தமிழ்’ டிவியில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் பங்குபெற்ற வாலாம்பா பாட்டியின் வாழ்க்கையின் பதிவுதான் இது.

ammani movie stills

அரசு பொது மருத்துவமனையில் துப்புறவுத் தொழிலாளி (ஆயா)வாக வேலை பார்க்கிறார் சாலம்மா.

இவருக்கு இரண்டு மகன்கள். ஒரு மகள். மூத்த மகனுக்கு 10 வயதாகும்போதே கணவர் இறந்து விடுகிறார்.

வளர்த்த மகளோ ஒரு ரெளடியை காதலித்து ஓடி விடுகிறாள்.

மூத்த மகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பெயின்ட்டர்.

இளைய மகன் மனைவியின் பேச்சுக்கு ஆடும் ஆட்டோ டிரைவர்.

இப்படியான இவரது வாழ்க்கையில் கடன் வாங்கி ஒரு சொந்த வீடு கட்டுகிறார்.

அதனை கட்டமுடியாமல் தவிப்பதால் வேலையை விட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகையை கொண்டு கட்ட நினைக்கிறார்.

அதன்பின் ஒரு இக்கட்டான சூழநிலையில் சுபுலட்சுமி பாட்டியை சந்திக்கிறார். அவரால் இவரது வாழ்க்கையில் பல மாற்றங்கள் உருவாகிறது.

அதனை படு யதார்த்தமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார் சாலம்மா லட்சுமி ராமகிருஷ்ணன்.

?????????????????????????

கதாபாத்திரங்கள்…

பெரிய நட்சத்திரங்களின் அம்மாவாக நடித்தவர் என்ற போர்வையில்லாமல், தன்னால் எப்படியும் நடிக்கமுடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.

குடிசைப் பகுதி ஜனங்களின் வாழ்க்கையை ஜெராக்ஸ் எடுத்திருக்கிறார் லட்சுமி.

பணம்தான் இன்றைய வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்பதையும் நாசுக்காக சொல்லியிருக்கிறார்.

இந்த சாலம்மாவுக்கே சவால் விடும் கேரக்டரில் நடித்துள்ளார் 80 வயதான பாட்டி சுபுலட்சுமி.

பாட்டு பாடிக் கொண்டு சின்ன சின்ன விஷயங்களை இவர் செய்யும்போது, ஒரு குழந்தைத்தன்மை இவரிடம் நிழலாடுகிறது.

இவரது துறு துறு நடிப்பு, பலருக்கு தங்கள் பாட்டியை நினைவு படுத்தலாம்.

எமதர்மன் ‘ரோபோ’ சங்கரின் குத்துப் பாடலுக்கு தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ் கிடைக்கும்.

நிதின்சத்யாவும் நிறைவான நடிப்பை தந்திருக்கிறார்.

?????????????????????????????????????????

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இம்ரானின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

“மழை இங்கில்லையே வெயிலும் இல்லையே…. வானவில் வந்ததே…”, “நன்றி உள்ள உயிர்கள் எல்லாம் பிள்ளைகள் தானடா…”, “லைப்பு மச்சான் மச்சான்…”, ஆகிய பாடல் வரிகளில் இன்றும் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கே-யின் இசை உணர்வு பூர்வமான காட்சிகளுக்கு உயிரூட்டியிக்கிறது.

Ammani-movie-poster

இயக்குனர் பற்றிய பார்வை…

ஒரு இயக்குனராகவும் லட்சுமி ராமகிருஷ்ணன் படத்திற்கு படம் மெருகேறி வருகிறார்.

படத்தின் வசனங்கள் பல இடங்களில் பலத்த கைத்தட்டலை பெறுகிறது. அவற்றில் சில…

  • “வலையில மீன் மாட்டட்டும் அப்புறம் குழம்பு, வறுவல பத்தி முடிவு பண்ணலாம்…”
  • “கண்ண மூடி போயிட்டா அமைதியா போறமா, ஆரவாரமா போறமா…ன்னு யாருக்குத் தெரியும்…?”
  • “நம்ம நாட்டு பிரதமரே குப்பை பொறுக்கதான் சொல்றார்டி….”
  • இந்த வெளிச்சம் போன நிழல் கூட சொந்தமில்லை…”

?????????????????????????????????????????

அரசு ஆஸ்பத்திரிகளில் பிறந்தாலும் இறந்தாலும் கைநீட்டும் ஊழியர்களின் அவல நிலையை அப்பட்டமாக காட்டியிருக்கிறார்.

இவைகளை விட பெற்ற பிள்ளைகளை மலைபோல நம்பும் பெற்றோருக்கு சரியான பாடம் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

அம்மணி… அவசிய கண்மணி

ரெமோ விமர்சனம்

ரெமோ விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், கேஎஸ். ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, ஆடுகளம் நரேன், கல்யாணி நட்ராஜன், ஸ்ரீதிவ்யா மற்றும் பலர்.
இசை : அனிருத்
ஒளிப்பதிவு : பி.சி. ஸ்ரீராம்
படத்தொகுப்பு : ரூபன்
இயக்கம் : பாக்யராஜ் கண்ன்
பிஆர்ஓ : சுரேஷ் சந்திரா
தயாரிப்பாளர் : 24ஏஎம் ஸ்டூடியோஸ் – ஆர்.டி.ராஜா

remo 3

கதைக்களம்…

சினிமாவில் நடித்து, சூப்பர் ஸ்டார் ரஜினியை போல வரவேண்டும் என துடிக்கும் சிவகார்த்திகேயன் சான்ஸ் தேடி அலைகிறார்.

அதற்காக பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரை சந்திக்கிறார்.

ஆனால், அவரின் கதைப்படி பெண் வேடமிட ஒரு ஹீரோ தைரியமாக வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்.

அதற்காக துணியும் சிவகார்த்திகேயன், பெண் வேடமிட்டு கேஎஸ்ஆரை கவர நினைக்கிறார்.

இந்த சூழ்நிலையில் பெண் வேடத்தில் இருக்குபோது இவர், கீர்த்தி சுரேஷை சந்திக்க அவர் மீது காதல் வருகிறது.

அப்போது எஸ்கே பெண் என்று நினைத்து கீர்த்தி இவரிடம் நெருங்கி பழகிறார்.

அதன்பின்னர் நாம் என்ன சொல்லபோகிறோம் என்று தெரியாதா உங்களுக்கு..? காதல் கைகூடியதா? பெரிய நடிகர் ஆனாரா? என்பதே இந்த ரெமோ.

remo 1

கதாபாத்திரங்கள்…

படத்தின் நாயகன் நாயகி எல்லாம் எஸ்கே.தான். அதிலும் ரெஜினா மோத்வானி (ரெமோ) ஆக வரும் காட்சிகளில் டபுள் சென்சுரி அடிக்கிறார்.

நிச்சயம் இதற்கு ஒரு கெத்து வேண்டும். ஆணழகன் படத்தில் பிரசாந்துக்கு பொருந்திய பெண் வேஷம் போன்று சிவகார்த்திகேயனுக்கு அப்படி ஒரு பொருத்தம்.

லேடி கெட்டப்பில் இடும் பைட் செம. எதிரிகளை அடித்து விட்டு முகத்தில் விழுந்த முடியை ஊதிவிடும் காட்சியின் போது, ரசிகர்களின் கைத்தட்டல் அடங்க வெகு நேரமாகும்.

காதலி வீட்டுல படுக்கிற பாக்கியம் எத்தனை பசங்களுக்கு கிடைக்கும், அதுவும் அவ நைட்டிய போட்டுக்கிட்டு படுற சுகமே தனி தான் எனும் போது கிளுகிளுக்க வைக்கிறார்.

இவர் பெண்ணாக இருக்கும்போதும், ஆணாக வரும்போதும் அது என்னமோ கீர்த்தியிடம் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி. எப்படி ப்ரோ? இதெல்லாம்?

ஹீரோயின் கேரக்டரும் படத்தில் செம வெயிட். அதில் குறை வைக்காமல் ஸ்கோர் செய்கிறார் கீர்த்தி சுரேஷ்.

நிச்சயம் செய்தபின் காதல் வந்தாலும், அதை ஏற்றுக்கொள்ளும் படி தன் அழகிய கண்களால் உணர வைக்கிறார்.

அப்பா, நீங்க பார்த்த மாப்பிள்ளையோட என்னால நிம்மதியா வாழ முடியாது என்று சொல்லும்போது கண் கலங்க வைக்கிறார்.

மேலும் பி.சி. ஸ்ரீராமின் கேமரா கண்களில் செம பிகராய் தெரிகிறார் கீர்த்தி. மேனகா மேடத்திடம் சொல்லி திருஷ்டி சுத்திதான் போடனும் போல.

சதீஷின் ஒன் லைன் காமெடி வரிகள் ரெமோவுக்கு கைகொடுத்திருக்கிறது. இவருடன் மொட்டை ராஜேந்திரனும் சேர்ந்து நம்மை ரசிக்க வைக்கிறார்.

உதாரணத்திற்கு… முகத்தில மாவு இருக்கும்போது.. அடிக்கிற வெயிலுக்கு வெளியில போனா தோசையாயிடும் அதான் உள்ளிட்ட படம் முழுக்க ரசிக்க வைக்கிறார்.

சில நேரமே வந்தாலும் என் காமெடி சோடை போகாது என்கிறார் யோகி பாபு.

பஸ்சில் ஸாரி சொல்லும்போது, கண்டக்டர் டிரைவர் இருவரையும் பிரித்து எடுத்துக்க சொல்லுவது, டானு டானு பாடல்கள் என இவர் வரும்போது எல்லாம் ரசிக்க வைக்கிறார்.

வழக்கம்போல் லவ்வுக்கு கீரின் சிக்னல் காட்டும் சினிமா அம்மாவாக சரண்யா பொன்வண்ணன்.

கீர்த்தியின் அப்பாவாக நரேன் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.

remo 2

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இப்படத்தை முழுமையாக ரசிக்க வைக்க முழுக்காரணமே பி.சி. ஸ்ரீராம்தான். அவ்வளவு அழகாக ஒவ்வொரு ப்ரேமையும் பார்க்க வைக்கிறார்.

இத்தனை நாட்களாக பாடல்களில் கவனம் செலுத்திய அனிருத், இப்படம் மூலம் பின்னணி இசையில் முன்னணிக்கு வருகிறார். கமான் அனி.

கலை இயக்குனர் முத்துராஜின் கைவண்ணத்தின் மருத்துவமனை, வீடு, சூட்டிங் லொக்கேஷன் அனைத்தும் ரசிக்கும் ரகமே.

சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டி, எஸ்.கேயின் குரலை அழகான பெண் குரலாக மாற்றியிருப்பது சிறப்பு.

remo 4 stills

படத்தின் ப்ளஸ்

  • சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷின் அழகும் நடிப்பும்
  • பி.சி.ஸ்ரீராம் மற்றும் அனிருத்
  • ‘பொண்ணுகளை கண்ட்ரோல் பண்றது கஷ்டம் கன்ஃப்யூஸ் பண்றது ஈஸி’… புடிச்ச புடவைய கட்டிகிட்டு இவ்ளோ அழகா இருக்கீங்க, புடிச்சவனையே கட்டிக்கிட்ட வாழ்க்கையே அழகா இருக்கும்…  உயிரா காதலிப்பாங்க, உயிரை கொடுத்தும் காதலிப்பாங்க பசங்க… உள்ளிட்ட பல வசனங்கள் ரசிக்க வைக்கிறது.

remo 5

இயக்குனர் பற்றி…

அண்மைக் காலமாக வரும் படங்களில் ஒரு குரல் பேச படம் ஆரம்பிக்கும்.  இயக்குனர் பாக்யராஜ் கண்ணனும் அந்த பாணியில் ஆரம்பித்து, கடைசியில் கே.எஸ்.ரவிகுமாரையே ‘ரெமோ நீ காதலன்’ படத்தின் டைரக்டர் ‘பாக்யராஜ் கண்ண’னாக  மாற்றியிருப்பது நச்.

முதல் படம் என்று தெரியாத அளவிற்கு ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் ரெமோ… சிவகார்த்திகேயனின் அடுத்த லெவல்

றெக்க விமர்சனம்

றெக்க விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விஜய்சேதுபதி, லெட்சுமி மேனன், கிஷோர், சதீஷ், கபீர் துகான் சிங், ஹரிஷ் உத்தமன், கேஎஸ் ரவிக்குமார், நாசர், ஸ்ரீரஞசனி மற்றும் பலர்.
இசை : இமான்
ஒளிப்பதிவு : தினேஷ் கிருஷ்ணன்,
படத்தொகுப்பு : பிரவீன் கேஎல்
இயக்கம் : ரத்தினசிவா
பிஆர்ஓ : கோபிநாதன்
தயாரிப்பாளர் : காமன்மேன் ஆர்ட்ஸ் கணேஷ்

கதைக்களம்…

உண்மையான காதலர்களை எந்த எதிர்ப்பு வந்தாலும், சேர்த்து வைக்கிறார் ரத்தினத்தின் மகன் சிவா. (இப்போ டைரக்டர் பேரு வந்துடுச்சா..?)

ரத்தினம் (கே.எஸ்.ரவிக்குமாரின்) மகன்தான் சிவா (விஜய்சேதுபதி)

ஒரு சூழ்நிலையில், வில்லன் ஹரீஷ் உத்தமன் கட்டிக்க போகும், பெண்னை கடத்தி விடுகிறார். இதனால் இருவருக்கும் பிரச்சினை எழுகிறது.

சேதுபதியின் தங்கைக்கு திருமணம் நடக்கும்போது, தான் பிரச்சினை செய்யாமல் இருக்க, மினிஸ்டர் பெண் லட்சுமி மேனனை கடத்த சொல்கிறார் ஹரீஷ் உத்தமன்.

எனவே இவரும் அவரை கடத்த, என்ன என்ன பிரச்சினைகள் நடக்கிறது. என்பதே இந்த றெக்க.

கதாபாத்திரங்கள்…

இதுவரை மற்ற ஹீரோக்களை தான் நாம் இப்படி பார்த்திருக்கிறோம். முதன்முறையாக விஜய்சேதுபதியை அனல் பறக்க காட்டியிருக்கிறார் டைரக்டர்.

லட்சுமி மேனன் இடைவேளை சமயத்திலே வருகிறார். ஆடை வடிவைமைப்பில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். மினிஸ்டர் மகள் என்றாலும் அதிலும் பெரிய வசதி தெரியவில்லை.

ஓவர் டைட்டாக ஆடைகள் அணிந்து பெரிய பெண் போல் வருகிறார். உடம்பை ஸ்லிம் ஆக்க முயற்சி செய்தால் நல்லது.

கிஷோர் மற்றும் விஜய்சேதுபதி அக்கா நல்ல தேர்வு. ஆனாலும் அவர் அக்கா போல் முதிர்ச்சியில்லை. அக்கா வேடத்துக்கு ஆள் கிடைக்கலையா?

சதீஷ் சீரியஸாக நடிக்க முயற்சித்து காமெடியை மிஸ் செய்துவிட்டார்.

கே.எஸ்.ரவிக்குமார் ஒரு நல்ல ப்ரெண்ட்லி அப்பாக இருந்துக் கொண்டு, சைட் அடிப்பதும், பின்னர் மகனை திட்டுவதும் என ரசிக்க வைக்கிறார்.

வில்லன் ஹரீஷ் உத்தமன், கபீர் துகான் சிங், இருவரும் பொருத்தமான தேர்வு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இன்றைய தமிழ் சினிமாவின் மெலோடி கிங் இமான்தான். கண்ண காட்டு போதும்.. கண்ணம்மா ஆகிய பாடல்களே போதும்.

ஸ்ரேயா கோஷலின் குரல் பாடல் காட்சியை விட அழகாகவே இருக்கிறது.

தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு மதுரை, கும்பகோணம் காட்சிகளில் பளிச்சிடுகிறது.

இயக்குனர் பற்றி….

கமர்ஷியல் மசாலா என்றாலும், ஹரி படத்தில் உள்ள போல குடும்ப காட்சிகளையும் விட்டு வைக்கவில்லை.

மேலும் ரன் படத்தில் உள்ள தேரோடும் வீதி பாடலை நினைவுப்படுத்துகிறது விர்..விர்ரு… பாடல்.

நீர் தேங்கி இருப்பதால் பள்ளிக் குழந்தைகள் 5 கிலோ மீட்டர் சுற்றுவதாக பேப்பரில் செய்தி வருகிறது. ஓகே. வெறும் கால் வரை இருக்கும் தண்ணீருக்காக அவர்கள் அத்தனை கிமீ. சுற்றுகிறார்கள்?

அதில் கரண்ட் வயர் இருந்தாலும், அட்லீஸ்ட் பள்ளி செல்லும் போதாவது கரண்டை கட் செய்து இருக்கலாமே. சேதுபதி அவ்ளோ அசல்ட் வருகிறாரே?

விஜய்சேதுபதியை வைத்து ஒரு கமர்ஷியல் மாஸ் கொடுத்து தனக்கும் வெற்றியை தக்கவைத்து கொண்டிருக்கிறார்.

றெக்க கட்டி பறக்குது…

கொடி ட்ரைலர் விமர்சனம்

கொடி ட்ரைலர் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷின் கொடி படத்தின் பாடல்கள் வெளியாகியதை தொடர்ந்து சற்றுமுன் இப்படத்தின் ட்ரைலரையும் வெளியிட்டுள்ளனர்.

துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் அண்ணன், தம்பி என இரு வேடம் ஏற்றுள்ளார் தனுஷ்.

இயக்குனர் வெற்றிமாறன் எஸ்கேப் ஆர்ஸ்டிஸ்ட் மதனுடன் இணைந்து தயாரித்துள்ளார்.

கவிஞர் விவேக்கின் வரிகளில், சந்தோஷ் நாராயணன் இசையில் இப்படத்தில் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த ட்ரைலர் குறித்த தகவல்களை இங்கே தனுஷ் ரசிகர்களுக்காக பகிர்கிறோம்.

இதுவும் மாரி போன்ற மாஸ் ஆகஷன் நிறைந்த படம்தான் என தெரிய வந்துள்ளது.

kodi dhanush sac

அதில் ஒரு மாரியாக இருக்கும்போது வெளுத்து கட்டியிருந்தார் தனுஷ். தற்போது இதில் இரண்டு வேடம் கட்டி தன் ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார் எனலாம்.

மாரி படத்தின் ட்ரைலரில் காளி வெங்கட் குரல் ஒலிக்கும். அதில் மாரியை பற்றி சொல்வார்.

முதல்ல சாதாரண ஆள இருந்த மாரி, இப்போ வேற லெவர் இருக்கான் சார். நாம் எல்லாம் அவன தொடக்கூட முடியாது சார்.. என்பாரே… அதேபோலதான் இதிலும்.. கொஞ்சம் மாறுதல்களோடு.

நம்ம பொழப்புக்காக அரசியலுக்கு வந்தவங்க. அவன் பொறந்ததே அரசியலுக்காகத்தான்.. (அது எல்லாம் எப்படி நீங்க கேட்க கூடாது.)

dhanush kodi trailer

வந்தது… வாழ்ந்தது.. இதையெல்லாம் விட நமக்கு பிறகு என்ன நிக்குது. அதான் மேட்டரு என் தன் பிஏ காளி வெங்கட் இடம் சொல்வது போல தனுஷ் பன்ச் டயலாக்கோடு ஆரம்பிக்கிறார்.

பின்னணில் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்க. அடிதடிகளுடன் அடுத்த பன்ச் பேசுகிறார் தனுஷ்.

எப்பவுமே அலர்ட்டா இருக்கிறவன்தான்டா அரசியல்வாதி என்கிறார்.

ஆனால் இவர் வீட்டிலோ இவரது அம்மா சரண்யாவோ இந்த வெட்டி பந்தாவ வச்சி நாக்க வழிக்க முடியும் என்று திட்டுகிறார்.

அதன் பின் த்ரிஷாவின் உதட்டை பிழிந்து ஒரு டூயட் பாடுகிறார் (சிறுக்கி வாசம் பாடல்)

இதில் தாடி வைத்தவர் அண்ணனாக வருகிறார். அவருக்குதான் த்ரிஷா ஜோடி.

kodi anupama

தம்பி கேரக்டர் தனுஷ்க்கு ஜோடியாக அனுபமா வருகிறார். இதில் பிரேமம் படம் போல், கூந்தலை விரித்து போடாமல் தலைமுடியை பின்னியபடியே வந்தாலும் அழகாக இருக்கிறார்.

அதன்பின்னர்தான் அரசியல் காட்சிகள் சூடு பிடிக்கிறது. பாக்டரியில் இருந்து வரும் விஷவாயு அந்த ஊரையே தாக்குகிறது.

எனவே உள்ளுரில் பிரச்சினை எழ, அரசியல்வாதிகள் தலை எடுகின்றனர்.

இதில் மகளிர் தலைவியாக த்ரிஷா வருகிறார். அரசியல் ஜெயிக்கனும்ன்னா ஏதாச்சும் பண்ணிக்கிட்டே இருக்கனும் என்கிறார்.

இவங்க எல்லாம் பேசியே ஜெயிச்சவங்க. நான் ஜெயிச்சிட்டு பேசுவேன் என பன்ச் அடிக்கிறார் தனுஷ்.

kodi trisha

அதன் பின்னர் இவரது குடும்பத்திற்கு மற்ற அரசியல்வாதிகள் பிரச்சினை எழுகிறது. எஸ்ஏசி என்ன செய்ய போகிறாய் என் அதட்டி கேட்கிறார்.

எல்லாரும் சிங்கிளா பொறப்பாங்க… நான் பொறக்கும்போதே டபுளா பொறந்தவன் என்று கூறி புறப்படுகிறார்.

அரசியல் என்றால் மீடியா, பத்திரிகை இல்லாமல் இருக்குமா? இடையே பத்திரிகையாளர்களை சந்தித்து அறிக்கை எல்லாம் விடுகிறார்.

அரசியலும் தெரியும். அதில உள்ள நல்லவங்களை தெரியும் என்கிறார்.

இறுதியாக ட்ரைலர் முடியும்போது  கொடி பறக்குதா? என்ற பன்ச் டயலாக்கோடு தனுஷ் முடிக்கிறார்.

ஆக மொத்தம் இதில் டபுள் மாரியை பார்த்த மாஸ் எப்பெக்ட்தான்… கொடி பறக்க வாழ்த்துவோம்.

கொடி பாடல்கள் விமர்சனம்

கொடி பாடல்கள் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தனுஷ் படம் என்றால் அனிருத் தவறாமல் இடம்பெறுவார் என்ற ஒரு கோலிவுட்டில் விதி இருந்தபோது, எவரும் எதிர்பாராத வகையில் சந்தோஷ நாராயணனுடன் கூட்டணி அமைத்துள்ளார் தனுஷ்.

இவர்களது கூட்டணியில் உருவாகியுள்ள கொடி படத்தின் பாடல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

துரை செந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷ் முதன்முறையாக இருவேடங்களில் நடித்துள்ளார்.

பிரபல இயக்குனரான வெற்றிமாறன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இதில் தனுஷ் ஜோடியாக த்ரிஷா, ‘பிரேமம்’ அனுபமா பரமேஸ்வரன் இருவரும் நடித்துள்ளனர்.

இவர்களுடன் முக்கிய வேடத்தில் எஸ்ஏ சந்திரசேகரனும் நடித்துள்ளார்.

இதுவரை தனுஷ் படங்களில் பாடல் பாடாத சின்னக்குயில் சித்ரா இதில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

இதில் தாய்க்கும் மகனுக்கும் உள்ள ஒரு ஆராரிரோ பாடல்.

இதற்கு முன்பு ஜானகி, தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் ஒரு பாடலை பாடியிருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

கொடி படத்தின் அனைத்து பாடல்களையும் கவிஞர் விவேக் எழுதியுள்ளார்.

மற்ற பாடல்கள் குறித்த ஒரு பார்வை இதோ…

kodi parakudha

1) கொடி பறக்குதா…..
பாடியவர்கள் : தனுஷ் மற்றும் அருண்ராஜா காமராஜ்

கபாலி படத்தில் உள்ள வீர துரந்துரா என்ற அதே ட்யூனில் இப்பாடல் தொடங்குகிறது. அதாவது பாடல் என்பதை விட வீர வசனங்கள் நிறைந்த வரிகள்தான் இவை.

இதில் தனுஷ் உடன் நெருப்புடா புகழ் அருண்ராஜா  காமராஜ் இணைந்து பாடியிருக்கிறார்.

கொடி, நான் பறக்கிற நேரம் இதுடா. மவனே தேடி போய் செய்ய போறேன்டா…

என்ற பன்ச் வசனங்களோடு இப்பாடல் தெறிக்கிறது.

கொடி காட்டுல எப்பவும் மழைதான்.. அதனால நீ தூரம் நில்லு.. என்று வில்லனை எச்சரிக்கிறார்.

ei suzhali

2) ஏய் சுழலி…..
பாடியவர்கள் : விஜயன்ரெயின்

இது தனுஷ் மற்றும் அனுபமா இருவருக்கும் உள்ள பாடல். இதில் தனுஷ் தாடியில்லாமல் ஷேவிங் செய்த முகத்தோடு வருகிறார் போலும். அதற்கான படங்களே இப்பாடலில் உள்ளது.

ஏய் சுழலி, அழகி விலகி களைக்கட்டி போறவளே.. என்ற வரிகளோடு இப்பாடல் ஆரம்பமாகிறது.

பொட்டக் கோழி மற்றும் கிராமத்து பின்னணியில் உள்ள அழகான உயிர்களோடு தன் காதலியை வர்ணிக்கிறார் ஹீரோ.

இப்பாடல் கிராமத்து இளைஞர்களை பெரிதும் கவரலாம்.

kodi ariraro

3) ஆரிராரோ…..
பாடியவர் : சித்ரா

ஆரிராரோ அழகு தாமரையே என இப்பாடல் தொடங்குகிறது. அதில் தன் மகனை மீண்டும் கருவறைக்குள் வந்து ஒளிந்துக் கொள்ளச் சொல்கிறாள் தாய்.

கருவறையை விட பாதுகாப்பான இடம் ஒரு பிள்ளைக்கு அமைய போவதில்லை என தன் அழகான வரிகள் மூலம் உணரச் செய்கிறார் கவிஞர் விவேக்.

இதுபோன்ற வரிகளால் தாய் பாசத்தை நமக்கு ஊட்டுகிறார். இதுபோன்ற பாடல்கள் நிச்சயம் இன்றைய குழந்தைகளுக்கு நிச்சயம் ஒரு புது அனுபவமாய் இருக்கும்.

sirukki

4) சிறுக்கி வாசம்…..
பாடியவர்கள் : ஆனந்த் அரவிந்தாக்ஷன் மற்றும் ஸ்வேதா மோகன்

கிறங்கி போனேன்… என் கன்னத்தில் சின்னம் வச்சான்.. என்ற ஸ்வேதா மோகனின் அழகான குரலிசையில் இப்பாடல் தொடங்குகிறது.

இப்பாடலுக்கு முன்பு  தனுஷ் மற்றும் த்ரிஷா இருவரும் எதிரிகள் போல இருந்துள்ளனர்.

ஆனால் அதன் பின்னர் இந்த கிளியானது வேறொரு கட்சியில் இருந்து இன்று இவன் வசமாகிய பட்சியாக மாறிவிட்டது என்கிறது இந்த வரிகள்.

இடைத்தேர்தல் வந்தால் இவன்தானே கொடி நாட்டுவான்… என்ற வரிகளில் காதல் தேர்தலையும் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் ஆண் குரலில் இப்பாடல் வேகம் எடுக்கிறது.

vettu pottu

5) வேட்டு போட்டு…..
பாடியவர்கள் : சங்கர் மகாதேவன்

வேட்டு போட்டு கொண்டாடுடா… இவன் நம்மாளுடா.. விசில் பத்தாதுடா…  என நாயகனின் வெற்றியை வாழ்த்தும் பாடல் இது.

தொட்டு அடிச்சா பொறி பறக்கும்… எட்டு திசையும் கொடி பறக்கும்…

என மேள தாளத்துடன் இப்பாடல் தூள் கிளப்புகிறது.

இனி தனுஷ் ரசிகர்கள் இப்பாடலை கொண்டாடுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

மொத்தத்தில் தாலாட்டு, மெலோடி, ஆவேசம், குத்துபாட்டு ஆகியவை கலந்து இந்த கொடி பறக்குது.

எம்எஸ் தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி திரை விமர்சனம்

எம்எஸ் தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சுஷாந்த் சிங் ராஜ்புட், அனுபம்கெர், பூமிகா, திஷா பட்டானி, கியாரா அத்வானி, ராஜேஷ் சர்மா மற்றும் பலர்.
இசை : அமால் மாலிக், ரோசக் கோஹ்லி
ஒளிப்பதிவு : சந்தோஷ் துண்டில்
படத்தொகுப்பு : ஸ்ரீ நாராயணன் சிங்
இயக்கம் : நீரஜ் பாண்டே
பிஆர்ஓ : ரியாஸ் கே அகமது
தயாரிப்பாளர் : அருண் பாண்டே (பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ்)

கதைக்களம்…

கிரிக்கெட்டை நேசிக்கும் ரசிகர்கள் மட்டுமில்லாது அனைவருக்கும் பிடித்த மனிதர் எம்.எஸ்.தோனி. அவரது கிரிக்கெட் வாழ்க்கை நம்மில் பலருக்கும் தெரிந்து இருக்கலாம்.

ஆனால் அவர் பிரபலமாவதற்கு முன்னால், அவர் பெரிய கிரிக்கெட் வீரர் ஆவதற்கு மேற்கொண்ட பயிற்சிகள் என்ன? எப்படி ஆனார் என்பதே இதுவரை சொல்லப்படாத கதை. அதாவது எம்.எஸ்.தோனி – தி அண் டோல்ட் ஸ்டோரி.

ஒரு சராசரி மாணவன், பின் கிரிக்கெட் ஆர்வம், அதன் பின்னர் மாநில அளவில், தேசிய அளவில் பங்கேற்பு. இதன் தகுதி அடிப்படையில் இந்திய ரயில்வே துறையில் டிக்கெட் கலெக்ட்டர் பணி.

அதன் பின்னர் அவர் எப்படி கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் ஆனார்? என்பதே முழுக்கதை.

CthnLsZWcAAT0WA

கதாபாத்திரங்கள்…

சுஷாந்த் சிங் ராஜ்புட் தான் இந்த தோனி. இவருக்கும் நிஜ தோனிக்கும் அவ்வளவு பொருத்தம்.

புட் பால் மட்டுமே விளையாடி கொண்டிரும் ஹீரோ, கிரிக்கெட் மீது, தன் கோச்சால் ஆர்வம் ஏற்பட, அதன்பின் அவர் பிடிக்கும் ஒவ்வொரு கேட்ச்சும் நமக்கும் பிடிக்கும். ஆரம்பத்தையே அசத்தலாய் உருவாக்கி இருக்கிறார்.

தன் கிரிக்கெட் கனவுகள் நிஜமாகாதா? என தனிமையில் அமர்ந்து ஏங்கும் அந்த காட்சிகள் நிச்சயம் ஒரு வெறியை ரசிகர்கள் மனதில் உருவாக்கும்.

முன்னாள் காதலி இல்லாதபோது, அடுத்த காதலியே தன் மனைவி என ஒரு யதார்த்த மனிதராக வாழ்ந்திருக்கிறார்.

காதலியாக வரும் திஷா பட்டானி ஒரு அழகு என்றால் மனைவி ஆவதற்கு முன்னாள் வரும் 2வது காதலி கியாரா அத்வானி அழகு கவிதை.

இருவரையும் அவர் நேசிக்க சொல்லப்பட்ட காரணங்கள் நச். அதிலும் தன் லட்சியத்திற்காக காதலை ஒதுக்குவதும், மீடியா வெளிச்சத்தில் இருந்து ஒளிய வேஷமிடுவதும் மறக்க முடியாதவை.

தோனியை சந்திக்கும் போது, கியாராவின் தோழியாக வரும் பெண்ணின் முகபாவனைகள் அசத்தல்.

உலக கோப்பையை வென்ற பின், அனுபம் கெர், பூமிகா உள்ளிட்டவர்களின் ஆனந்த கண்ணீரில் நிச்சயம் நாமும் கரைந்து போவோம்.

ஸ்கூல் கோச், கிரிக்கெட் வாரிய தலைவர், நண்பர்கள், ராஞ்சி வாழ்க்கை, என ஒவ்வொரு பாத்திரமும் சபாஷ் சொல்ல வைக்கிறது.

CtmGQEJUEAA9iwA

தொழில்நுட்ப கலைஞர்கள்…

அமால் மாலிக் மற்றும் ரோசக் கோஹ்லி இசையில் பாடல்கள் இனிமை.

சந்தோஷ் துண்டில் ஒளிப்பதிவில் கிரிக்கெட் உலகமே அழகாய் தெரிகிறது.

படத்தின் ப்ளஸ்…

  • இரண்டாம் பாதியில் காதல், திருமணம் என கலந்து ரசிக்க வைக்கிறார்.
  • அருமையான வசனங்கள் + ஒளிப்பதிவு. கலர்புல்லான காதலிகள்
  • நிஜ கிரிக்கெட்டையும் சினிமா கிரிக்கெட்டையும் சேர்த்தாலும் கிராபிக்ஸ் தெரியவில்லை.

CtmPq38VIAAaPa9

வசனங்கள் படத்தின் மிகப்பெரிய பலம்

  • இந்திய கிரிகெட் அணியில் இருக்கும் இவரை ஒருவருக்கு தெரியாத போது, சாரி என்று சொல்வார். அப்போது… என்னை நீங்கள் தெரிந்துக் கொள்ளும் அளவு நான் இன்னும் சாதிக்கவில்லை. அதற்கு ஏன் நீங்கள் சாரி சொல்கிறீர்கள்.
  • இவர் பிரபலமாக இருந்தாலும் ஹோட்டல் ரிசப்டனிஸ்ட்டுக்கு இவருக்கு தெரியாமல் ஐடி கார்ட்டை கேட்கும்போது உள்ள வசனங்கள்.

இப்படி பல காட்சிகளில் உள்ள வசனங்களை உதாரணமாக சொல்லலாம்.

  • முக்கியமாக இவரது ரயில்வே நண்பராக வரும் சத்யாவின் காமெடிக்கு சிரிக்காதவர்கள் இருக்கமுடியாது.
  • அந்த பொண்னுக்கு காசு இல்ல போல. குட்ட பாவாடை போட்டு இருக்கு. டிரெஸ் எடுத்து கொடுப்பா என்னும்போது நிச்சயம் கைத்தட்டி ரசிக்கலாம்.

படத்தின் மைனஸ்

  • கிரிக்கெட்டை மட்டுமே முதல் பகுதியில் சொல்லிக் கொண்டிருப்பதால் இந்த விளையாட்டை பிடிக்காதவர்களுக்கு சலிப்பு வரலாம்.
  • பள்ளி பருவத்தில் உள்ள அவரது குறும்புகளையும் படமாக்கியிருக்கலாம்.

அழகான கிரிக்கெட் கதையை யதார்த்த குடும்ப வாழ்க்கையுடன் பின்னி கமர்ஷியல் பைட் எதுவும் கொடுக்காமல் அசத்தியிருப்பதற்கு இயக்குனருக்கு பொக்கே கொடுக்கலாம்.

எம்எஸ்.தோனி… இவரது வாழ்க்கையும் சிக்ஸர்தான்.

More Articles
Follows