தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘மங்காத்தா’ படம் நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு ஆகிய இருவரின் சினிமா கேரியரில் முக்கியமான படமாக அமைந்திருந்தது. இது நடிகர் அஜித்தின் 50 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து ‘மங்காத்தா 2’ ரெடி ஆகுமா? அந்த படத்தை இயக்குவது எப்போது? என பல கேள்விகளை இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் அஜித் ரசிகர்கள் கேட்டு வந்தனர்.
இதற்கு பலமுறை பதில் அளித்து விட்டார் வெங்கட் பிரபு.
தற்போது சமீபத்தில் “அஜித் விஜய் இருவரும் இணைந்து நடித்த சம்மதித்தால் நான் இயக்க தயாராக இருக்கிறேன். அது மங்காத்தா 2 படமாக இருக்கும். அதற்கான கதை ரெடியாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
அஜித் விஜய் இருவரும் வழக்கம் போல மௌனம் காத்து வருகின்றனர்.
20 வருடங்களுக்கு முன்பு விஜய்யுடன் ‘ராஜாவின் பார்வையிலே.’ என்ற படத்தில் அஜித் இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Will Ajith and Vijay listen Venkat Prabu request