தளபதி 64 படத்தை மிஸ் செய்த சூப்பர் ஹீரோக்கள்

தளபதி 64 படத்தை மிஸ் செய்த சூப்பர் ஹீரோக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Why Abhishek Bachchan and KGF Yash avoid Thalapathy 64 விஜய் நடித்து வரும் அவரது 64 படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் பாடல்களை கம்போஸ் செய்து வருகிறார்.

விஜய்யுடன் சாந்தனு, வர்கீஸ், ஆண்ட்ரியா உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.

இதில் வில்லனாக விஜய்சேதுபதி இணைந்துள்ளார். ஆனால் இவர் நடிப்பதற்கு ஓகே சொல்வதற்கு முன் அபிஷேக்பச்சன் மற்றும் கேஜிஎப் பட புகழ் கன்னட நடிகர் யஷ் இருவரிடமும் பேசினார்களாம்.

ஆனால் அவர்கள் நடிக்க மறுக்கவே இந்த வேடம் தற்போது மக்கள் செல்வன் விஜய்சேதுபதிக்கு கிடைத்துள்ளது.

வில்லன் வேடத்திற்கு தான் முதலில் பேசப்பட்டது. இருவருக்குமே கதையும் கதாபாத்திரமும் பிடித்து போனாலும், அவர்கள் கைவசம் லோகேஷ் கனகராஜ் கேட்ட தேதிகள் இல்லாததால் இந்த படத்தில் அவர்களால் நடிக்க முடியாமல் போனது என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Why Abhishek Bachchan and KGF Yash avoid Thalapathy 64

இளைஞர்களின் ட்ரீம் கேர்ளாக மாற ஆசைப்படும் சுபிக்ஷா

இளைஞர்களின் ட்ரீம் கேர்ளாக மாற ஆசைப்படும் சுபிக்ஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I would like to be a dream girl for youth says Subhikshaஅன்னக்கொடி படத்தில் அறிமுகமாகி கடுகு, நேத்ரா, கோலிசோடா 2 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுபிக்ஷா.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘யார் இவர்கள்?’ என்ற படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இவரது சமீபத்திய பேட்டியில் தன் படங்கள் குறித்து பேசியதாவது…

”சின்ன சின்ன வேடங்களில் நடித்து தற்போது நாயகியாக நடித்து வருகிறேன்.

நடித்தால் நாயகி வேடம்தான் என பிடிவாதமாக எப்போதும் இருந்ததில்லை. அந்த பொறுமைக்கு கிடைத்த வெற்றிதான் இது. இளைஞர்களின் கனவு கன்னியாக மாற வேண்டும் என்பதே ஆசை” என்றார்.

I would like to be a dream girl for youth says Subhiksha

நாகஷேகர் மூவிஸ் – ஜோனி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நாகஷேகர் தயாரித்து, கதை எழுதி, நடித்து இயக்கும் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’

நாகஷேகர் மூவிஸ் – ஜோனி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நாகஷேகர் தயாரித்து, கதை எழுதி, நடித்து இயக்கும் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

November Mazhaiyil Naanum Avalumகன்னட திரையுலகில் பல வெற்றித் திரைப்படங்களை தந்த வெற்றிகரமான இயக்குனர் நாகஷேகர். தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான நாகஷேகர் மூவிஸ் மூலம், ஜோனி பிலிம்ஸ் சார்பாக ஜோனி ஹர்ஷா, ஷிவு எஸ் யசோதரா ஆகியோருடன் நாகஷேகர் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’. இப்படத்தை கதை எழுதி, இயக்கும் அவர், முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்.

‘அரண்மனை’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக உயர்ந்த நாகஷேகர், அதனைத் தொடர்ந்து ‘சஞ்சு வெட்ஸ் கீதா’, ‘மைனா’ ஆகிய வெற்றிப் படங்களைத் தந்த ஒரு ஜனரஞ்சகமான இயக்குனர். ‘ரெபல் ஸ்டார்’ அம்பரீஷ் – சுமலதா தம்பதியின் வாரிசான அபிஷேக்கை ‘அமர்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகப்படுத்தி, பெரு வெற்றியடையச் செய்த பெருமைக்குரியவர்.

முற்றிலும் புதிய பரிமாணத்தில், ஒரு வித்தியாசமான கதைகளத்துடன், மென்மையானதொரு காதல் கதையான ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’ திரைப்படத்துடன் தமிழ் திரையுலகில் தடம் பதிக்கிறார் நாகஷேகர்.

சத்யா ஹெக்டே ஒளிப்பதிவு செய்ய, பிரீத்தம் திரைகதை எழுத, இயக்குனர் விஜி வசனம் எழுத, ரூபன் படத்தொகுப்பை கவனிக்க, லால்குடி N.இளையராஜா கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்கிறார்.

இப்படத்திற்கு மதன் கார்க்கி பாடல்களை எழுத, ஷபிர் இசையமைக்கிறார். சண்டை காட்சிகளுக்கு திலீப்சுப்புராயன் பொறுப்பேற்க, நிர்வாக தயாரிப்பு வேணு வேல்முருகன் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

வசூலில் சாதனை படைத்த இயக்குனர் நாகஷேகரின் கன்னடப் படம் ‘மைனா’, மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழில் ‘முதல் மழை’ என்ற பெயரில் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில், இப்புதிய திரைப்படம் குறித்து இப்படக் குழுவினர் செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள்.

எஸ்.பி. சித்தார்த் – வாணி போஜன் நடிக்கும் ” மிஸ்டர் டபிள்யூ”

எஸ்.பி. சித்தார்த் – வாணி போஜன் நடிக்கும் ” மிஸ்டர் டபிள்யூ”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vani bhojanசத்தி என் பிலிம்ஸ் சார்பில் மிஸ்டர் சத்தி தயாரிக்கும் புதிய படத்தின் பெயர் தான் ” மிஸ்டர் டபிள்யூ”.

எஸ்.பி. சித்தார்த் கதையின் நாயகனாக அறிமுகமாக சின்னத்திரை புகழ் வாணி போஜன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் இதில் லிவிங்ஸ்டன், எம்.எஸ்.பாஸ்கர், பைனலிபாரத், வி.ஜே.சித்து, அனுபமா பிரகாஷ், அருள்கோவன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தை பற்றி இயக்குனர் நிரோஜன் பிரபாகரன் கூறியதாவது, ” ஒருவன் உழைப்புக்கு ஊதியம் அழகு.
உடலுக்கு உடை அழகு.
முகத்திற்கு மீசை அழகு.
பாடலுக்கு நடனம் அழகு
என்று கூறி வரும் சமுதாயத்தில்
ஏ.ஆர்.ரகுமான் இசையில் சூப்பர் ஹிட் பாடலான “ஊர்வசி . . ஊர்வசி … பாடலில் வரும் “வழுக்கை தலையன் திருப்பதி போனா டேக் இட் ஈஸி பாலிசி ” என்று எழுதிய வைரமுத்துவின் அந்த வரிகளில் உள்ள கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கதையில் கதாநாயனுக்கு ஏற்படும் உணர்வுபூர்வமான நிகழ்வுகளை செம காமெடியுடன் சொல்லும் படம் தான் ” மிஸ்டர் டபிள்யூ”. என்று கூறினார்.

மிலன் கலையையும், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பையும், அருள்கோவன் – அசார் நடன பயிற்சியையும், தமிழ் – நிரன்சந்தர் ஒளிப்பதிவையும், தினேஷ் – ரகு தயாரிப்பு நிர்வாகத்தையும், வல்லவன் – அருண் பாரதி,கோசேஷா மூவரும் பாடல்களையும் கவனிக்கின்றனர்.

சென்னை, பெங்களூர் பகுதிகளில் உள்ள முக்கியமான இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ள இதன் இணைத்தயாரிப்பு பொறுப்பை அருள்கோவன் ஏற்றுள்ளார்.

இம்மாதம் படத்தின் உச்சகட்ட காட்சிகள் படமாக்கப்படும் இப்படத்தை மிஸ்டர் சத்தி தமது சத்தி என் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கிறார்..

பிரபல முன்னனி இயக்குனர்கள் பலரிடம் உதவியாளராக பணியாற்றிய அனுபவத்தை கொண்டு “மிஸ்டர் டபிள்யூ” என்கிற கதையை எழுதி வசனம் தீட்டி திரைக்கதை அமைத்து தானே இசையமைத்து தமது முதல் படமாக டைரக்டு செய்து வருகிறார் நிரோஜன் பிரபாகரன்.

“மிஸ்டர் டபிள்யூ ” திரைப்படம் இந்த வருடத்திற்குள் திரைக்கு வந்து விடும் என்கிறார் படத்தின் தயாரிப்பாளரான மிஸ்டர் சத்தி.

டிஸ்னியின் ‘ஃபோரஸன் 2’ படத்துக்காக பின்னணி குரல் கொடுத்ததுடன் பாடலையும் பாடிய ஸ்ருதி ஹாசன்

டிஸ்னியின் ‘ஃபோரஸன் 2’ படத்துக்காக பின்னணி குரல் கொடுத்ததுடன் பாடலையும் பாடிய ஸ்ருதி ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shruti Haasanமிகப் பெரும் பொருட்செலவில் தயாரான டிஸ்னினியின் ‘ஃபோரஸன் 2’ திரைப்படம் இந்திய ரசிகர்களுக்கு மந்திரம் போன்ற மகத்தான அனுபவத்தைத் தர இருக்கிறது. புதிய தலைமுறை போராளியாக திரையில் உருவகப்படுத்தப்பட்ட இளவரசி எலிசாவை உண்மையில் பிரதிபலிக்கும் வகையில் தனித்துவம் மிக்க ஒருவரை படத்தில் பங்கு கொள்ள வைக்க தயாரிப்பு நிறுவனம் எடுத்த முடிவில் தேர்வானவர்தான் ஸ்ருதி ஹாசன். ஆம்… பெரிதும் எதிர்பார்க்கப்படும் துணிவு மிக்க எலிசாவுக்கு தமிழ்ப் பதிப்பில், ஸ்ருதி ஹாசன் குரல் கொடுத்து உயிரூட்டியிருக்கிறார். அது மட்டுமின்றி, மிகச் சிறந்த குரல் வளம் மிக்க ஸ்ருதி ஹாசன் மூன்று பாடல்களையும் பாடியிருக்கிறார். இன் டு தி அன்னோன்… என்ற ஒரு பாடல் மட்டும் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்கள், பாடகியாக புதிய அவதாரம் எடுத்திருக்கும் தங்கள் அபிமான நடிகையின் குரலை ரசிக்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இது குறித்து பேசிய ஸ்ருதி ஹாசன், “ஃபோரஸன் திரைப்படத்தில் எல்ஸா மற்றும் அன்னா சகோதரிகளுக்கிடையிலான பந்தம் உள்ளத்தை உருக்கும் வகையிலானது. எல்ஸா தன் இளைய சகோதரி அன்னாமீது கொண்ட பேரன்பை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. காரணம் நானும் என் இளைய சகோதரிமீது அந்த அளவுக்கு பாசம் கொணடிருக்கிறேன். ஒவ்வொரு பெண்னின் ரோல் மாடல் எல்ஸா என்பதும், நான் அந்தப் பாத்திரத்துக்கு குரல் கொடுத்து பாடியிருப்பதும் என்னால் மறக்க முடியாத அனுபவம். பரபரப்பான இந்த அனிமேஷன் திரைப்படத்தில் பாடல்கள், படத்துக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைவதுடன் எனது தமிழ்ப்பட ரசிகர்களையும் வெகுவாகக் கவரும்” என்றார்.

தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவிருக்கும் படம்தான் ‘ஃபோரஸன் 2’. புதிரான கதைக்கரு, மறக்க முடியாத கதாபாத்திரங்கள், மற்றும் எல்ஸா -அன்னா ஆகியோரின் சாகசங்களால் ஈர்க்கப்படுவார்கள் என்பது திண்ணம்.

இது மட்டுமின்றி இன்னும் சில சிறப்பம்சங்களும் இப்படத்துக்கு உண்டு ‘.ஃபோரஸன் 2’ படத்தின் இந்திப் பதிப்புக்காக பிரியங்கா சோப்ரா மற்றும் ப்ரனிதி சோப்ரா குரல் கொடுக்க, தெலுங்கு பதிப்புக்காக நித்யா மேனன் குரல் கொடுத்திருக்கிறார். ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நவம்பர் 22ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.

வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ்

ஃபோரஸன் 2

ஆங்கிலக் குரல் கலைஞர்கள்: கிறிஸ்டன் பெல், ஜோனாதன் க்ரோப். மற்றும் ஜோஸ் காட்

இயக்கம்: கிறிஸ் பக், ஜெனிஃபர் லீ
தயாரிப்பு: பீட்டர் டெல் வெச்சோ
இந்திய வெளியீடு 22 நவம்பர் 2019!

ஃபோரஸன் 2 படம் குறித்து….

எல்ஸா ஏன் மந்திர சக்தியுடன் பிறந்தாள்? இதற்கான விடை தேடும் முயற்சி, அவளது ராஜ்ஜியத்தை பயமுறுத்துகிறது. அன்னா, கிறிஸ்டாப், ஒல்ப் மற்றும் சுவெனுடன் பிரசித்தமான இந்த ஆபத்து மிக்க பயணத்தைத் துவக்குகிறாள் எல்ஸா. ‘ஃபோரஸன்’ படத்தில் தனது பலம் அனைத்தும் உலகுக்கு அதிகம் என்று பயப்படும் அன்னா, ‘ஃபோரஸன் 2’ படத்தில் போதும் என்று நினைக்கிறாள்.

ஆஸ்கர் விருது வென்ற ஜெனிஃபர் லீ கிறிஸ் பக் இயக்கத்தில், பீட்டர் டெல் வெச்சோ தயாரிப்பில் உருவாகியிருக்கிறது ‘ஃபோரஸன் 2’. கிறிஸ்டன் ஆன்டர்ஸன் லோபஸ் மற்றும் ராபர்ட் லோபஸ் எழுதிய பாடல்களுக்கு இன்டினா மெல்ஸல், கிறிஸ்டன் பெல், ஜொனாதன் கிராஃப் மற்றும் ஜோஸ் காட் ஆகியோர் குரல் கொடுத்திருக்கின்றனர்.

டெயில் பீஸ்

2013ஆம் ஆண்டு வெளியான ‘ஃபோரஸன்’ திரைப்படம் உலக அளவில் அனிமேஷன் படங்களிலேயே மிக அதிக வசூல் சாதனை புரிந்த படம் என்பது குறிப்பிடத் தக்கது.

2013ஆம் ஆண்டு மிகச் சிறந்த அனிமேஷன் படத்துக்கான விருதையும் ‘ஃபோரஸன்’ பெற்றது. மேலும் இப்படத்தில் இடம் பெற்ற லெட் இட் கோ பாடல் மற்றும் இசைக்காக ஆன்டர்ஸன் லோபஸ் மற்றும் ராபர்ட் லோபஸ் ஆகியோரும் ஆஸ்கர் விருது வென்றார்கள்.

BREAKING தமிழகத்தில் வெற்றிடம் இருக்கு; ரஜினி மீண்டும் பரபரப்பு பேச்சு

BREAKING தமிழகத்தில் வெற்றிடம் இருக்கு; ரஜினி மீண்டும் பரபரப்பு பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini talks about his politics entry and next moviesநடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டருகே செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே அதன் பின்னர் இன்று தன் வீட்டருகே செய்தியாளர்களை மீண்டும் சந்தித்தார்.

அப்போது அவர் கூறும்போது… ’நான் எப்போதும் வெளிப்படையாகப் பேசுபவன்.

நான் பாஜகவில் சேரப்போவதாக சொல்வார்கள். முடிவெடுக்க வேண்டியது நான்தான். அதற்காக, அவர்கள் என்னை நம்பிதான் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.

கட்சி ஆரம்பிக்கும் வரை தொடர்ந்து நடிப்பேன். தமிழகத்தில் சரியான, ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது.

அயோத்தி வழக்கில் எந்த தீர்ப்பு வந்தாலும் மக்கள் அமைதிகாக்க வேண்டும். மிசாவில் ஸ்டாலின் கைது பற்றி கேட்கிறீர்கள். அதுபற்றி எனக்குத் தெரியாது. தெரியாதது பற்றி கருத்துச் சொல்ல முடியாது’’ என பேசினார்.

Rajini talks about his politics entry and next movies

More Articles
Follows