தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘மெர்சல்’ படத்தில் மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை எதிர்த்து தன் கருத்தை பதிவிட்டு இருந்தார் விஜய்.
இதில் இடம்பெற்ற ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களை நீக்க வேண்டும் என பாஜக கட்சியைச் சேர்ந்த பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான குஷ்பு கூறியிருப்பதாவது:
நான் மெர்சலாயிட்டேன். முழுவதும் ஒன் மேன் ஷோ. இந்தத் தீபாவளிக்கு கண்களுக்கு விருந்தாக இருக்கிறார் விஜய்.
சோர்வான ஒரு நொடி கூட இல்லை. படத்தை வைத்த கண் வாங்காமல் பார்ப்போம். ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம் என பல சமூக மக்கள் பிரச்சினைகளை தைரியமாக திரையில் பேசியதற்கு பாராட்டுகள்.
சிலருக்கு மெர்சலால் பல இரவுகள் தூக்கம் இழக்க நேரிடும்.
படத்தின் சில காட்சிகளை நீக்க வேண்டும் எனச் சொல்வது சுதந்திரத்தை நசுக்குவதைப் போல. அது பாஜகவின் அச்சத்தையே காட்டுகிறது.
என்று குஷ்பூ தெரிவித்துள்ளார்.
While i seen Vijay acting I am Mersalayitten says Kushboo