தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நிறைய விளம்பரப் படங்களில் இசை அமைத்த பிறகு தான் சினிமாவில் இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார் இமான். இன்று வரை சென்னை சில்க்ஸ் விளம்பரத்தில் ஒலிப்பது இவரது இசை தான்.
விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தின் மூலமாக சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார் இமான். 100 படங்களை கடந்த பின்பு தான் ரஜினியின் அண்ணாத்த படத்திற்கு இசையமைத்தார் இமான்.
தமிழ் சினிமாவின் மெலோடி கிங் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் இமான். சிவகார்த்திகேயனின் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
எனவே இவர்களுக்கு ஒரு நல்ல நட்பு இருந்து வந்த நிலையில் திடீரென சமீப காலமாக இருவரின் நட்புக்கு இடையே பிரிவு உண்டானது.
“சிவகார்த்திகேயன் ஒரு துரோகி.. இனி என் வாழ்வில் அவரது படங்களுக்கு இசையமைக்க மாட்டேன். என்னுடைய பர்சனல் விஷயங்களை வெளியில் சொல்ல முடியாது என சமீபத்தில் பேட்டியில் தெரிவித்திருந்தார் இமான்.
இந்த நிலையில் இமானின் முதல் மனைவி மோனிகா ஒரு ஊடகத்திற்கு தன் மனம் திறந்த பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது..
“இமானுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் நல்ல நட்பு இருந்தது. என்னை இமான் விவகாரத்தை செய்ய நினைத்தபோது சிவகார்த்திகேயன் எங்களை சமாதானம் செய்ய முயற்சித்தார்.
ஒரு நல்ல நண்பன் என்பது குடும்பத்திற்குள் நுழைந்து சமாதானம் செய்ய முயற்சி செய்தது தவறா? ஆனால் அவரை துரோகி என்று சொல்லி இருக்கிறார் இமான்.
ஏற்கனவே ஒரு பெண்ணை பார்த்து விட்டு தான் என்னை விவகாரத்து செய்ய முன்வந்துள்ளார் இமான். ஒரு கட்டத்தில் எங்கள் குடும்பத்தை மிரட்டி விவகாரத்து பெறச் செய்தார். ஒன்றை மாதங்களில் விவகாரத்தும் பெற்றோம்.” என தெரிவித்துள்ளார் டி இமானின் முதல் மனைவி மோனிகா.
What happen between Sivakarthikeyan and D Imman says Monica