தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கரை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் உருவாகியுள்ள பத்மாவதி திரைப்படத்தை டிசம்பர் 1-ந் தேதி ரிலீஸ் செய்யவிருந்தனர்.
இப்படம் வெளியாவதற்கு முன்பே ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளது என்று பா.ஜனதா, ராஜபுத்ர சேனா, கர்னி சேனா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படத்தில் ராணி பத்மினி வேடத்தில் நடித்த நடிகை தீபிகா படுகோனே மூக்கை அறுப்போம் என்றும், அவரது தலையையோ அல்லது படத்தின் டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி தலையையோ கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் போராட்டக்காரர்கள் அறிவித்து வருகின்றனர்.
இதனால் இந்தி திரையுலகமே பரபரப்பாக காணப்படுகிறது.
இதனையடுத்து தீபிகா படுகோனேவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘பத்மாவதி’ படத்திற்கு கமல் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து கமல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…
“எனக்கு தீபிகாவின் தலை வேண்டும் என்கிறார்கள். அவரது உடலைவிட தலைக்கு அதிக மதிப்பளியுங்கள். அதைவிடவும் அதிகமாக அவரது சுதந்திரத்தை மதியுங்கள். தீபிகாவின் சுதந்திரத்தை அவருக்கு மறுக்காதீர்கள்.
எனது திரைப்படங்களை பல சமுதாயத்தினர் எதிர்த்துள்ளனர். எந்த ஒரு விவாதத்திலும் தீவிரவாதம் ஏற்புடையதல்ல.
புத்தியுள்ள இந்திய தேசமே.. விழித்தெழு. இது சிந்தனைக்கான தருணம். நாம் பலமுறை சொல்லிவிட்டோம். கேளாய்.. இந்திய தாயே” இவ்வாறு கமல் பதிவிட்டுள்ளார்.
இதுபோன்ற மிரட்டல் பிரச்சினைகளால் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இப்படத்தின் ரிலீசை மறுதேதி அறிவிக்காமல் தள்ளி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Want Deepika Padukones Head Saved Says Kamalhaasan
I wantMs.Deepika’s head.. saved. Respect it more than her body.Even more her freedom. Do not deny her that.Many communities have apposed my films.Extremism in any debate is deplorable. Wake up cerebral India.Time to think. We’ve said enough. Listen Ma Bharat
— Kamal Haasan (@ikamalhaasan)