தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஷால் தயாரித்து நடித்துள்ள மே 11 அன்று வெளியாக உள்ள படம் *இரும்பு திரை*.
அதை வெளியிட முடியாமல் அப்படத்தை தமிழக வெளியீட்டு உரிமை வாங்கியுள்ள ஸ்ரீதரன் தவிப்பதாக கூறியுள்ளார்.
இது சம்மந்தமாக விநியோகஸ்தர் ஸ்ரீதரன் மற்றும் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய பி.டி.செல்வகுமார் கூறுகையில்..
இப்படத்தை வெளியிடாமல் தடுப்பது சென்னை செங்கல்பட்டு மாவட்ட விநியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதி மற்றும் பெடரேஷன் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அருள்பதி மிரட்டியதற்கான ஆதார ஆடியோ அவர்களிடம் உள்ளதாகவும், அதை தமிழக காவல் துறை, சி.பி.ஐ போலீஸ் மற்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து நியாயம் வேண்டி புகார் கொடுப்பதோடு வழக்கும் தொடர போவதாக பி.டி.செல்வகுமார் தெரிவித்தார்.
மேலும் நாளை மே 9ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை இது சம்பந்தமாக சந்தித்து பேச உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.