தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த அக்டோபர் மாதம் கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் மாரடைப்பால் திடீரென காலமானார்.
அப்போதே அவர் விட்டு சென்ற சமூக கல்விப்பணிகளை தான் தொடர்வேன் என நடிகர் விஷால் அறிவித்தார்.
இந்த நிலையில் நவம்பர் 17ஆம் தேதி கர்நாடக திரைப்பட சம்மேளனம் சார்பில் புனித் ராஜ்குமாருக்கு நினைவஞ்சலிக் கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்றது-
இதில் விஷால் கலந்துக் கொண்டார்.
இதனிடையில் புனித் ராஜ்குமாரின் வீட்டுக்குச் சென்ற விஷால் அவருடைய குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார்.
இதன் பின்னர் தன் ட்விட்டரில்.. ”புனித் நம்மோடு இல்லை என்பதை இப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார் விஷால்.
Vishal visits Punith Rajkumar house