தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
திருட்டு விசிடி மற்றும் ஆன்லைனில் வெளியாகும் புதிய படங்களால் தமிழ் சினிமாவின் லாபம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்.
இதன்படி ‘பைரஸி’ பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க தயாரிப்பாளர் சங்கம் ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது.
ஆன்லைனின் படங்கள் வெளியாக அமெரிக்க சர்வர்களே முக்கிய காரணமாக உள்ளதால் அதனை தடுக்க அமெரிக்க அதிபரிடம் கோரிக்கை வைக்க இருக்கிறார்களாம்.
எனவே 1 லட்சம் கையெழுத்துகளை பெற்று, சட்டப்பூர்வமற்ற முறையில் இயங்கும் சர்வர்களை முடக்க கோரிக்கை வைக்க உள்ளனர்.
அதன்படி செப்டம்பர் இறுதிக்குள் 1 லட்சம் கையெழுத்துகளைப் பெற முடிவு செய்துள்ளனர்.