தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக நடிகர் விஷால் முடிவெடுப்பதாக கூறி தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த எதிர் அணியினர் அண்ணா சலையில் உள்ள சங்க அலுவலகங்களுக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த அணியில் உள்ள ஜே.கே. ரித்தீஷ், தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் தமிழக முதல்வரை இன்று சந்தித்து பேசினர்.
எனவே சங்க அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதனிடையில் இன்று காலை 11 மணியளவில் அங்கு வந்த விஷால், இந்த சங்கத்தின் தலைவர் நான். என் அலுவலகத்திற்கு இன்னொருவர் பூட்டு போட்டுள்ளனர்.
யாரோ ஒருவர் போட்ட பூட்டுக்காக ஏன் இவ்வளவு பாதுகாப்பு என போலீசாருடன் விஷால் வாக்குவாதம் செய்தார்.
பதிவாளரிடம் வழங்கப்பட்ட சாவியை பெற்றுவந்து சங்கத்தை திறக்க விஷாலை போலீசார் வலியுறுத்தினர்.
ஆனால் பூட்டை உடைத்தே தீருவேன் என விஷால் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
எனவே வேறு வழியின்றி நடிகர் விஷாலை போலீசார் கைது செய்தனர். அவருடன் நடிகர் மன்சூர் அலிகானும் கைது செய்யப்பட்டார்.
தற்போது அவர்கள் அனைவரும் தி.நகர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதை தொடர்ந்து பதிவுத்துறை அதிகாரிகள் தி. நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்தின் பூட்டை திறந்தனர்.
உள்ளே சென்ற அவர்கள், சங்கத்திற்குள் ஆய்வு நடத்தி பார்வையிட்டனர்.
Vishal arrested while he trying to enter producers council office