Breaking தயாரிப்பாளர் சங்க ஆபிஸ் பூட்டை உடைத்த விஷால் கைது

Breaking தயாரிப்பாளர் சங்க ஆபிஸ் பூட்டை உடைத்த விஷால் கைது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal arrested while he trying to enter producers council officeதயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக நடிகர் விஷால் முடிவெடுப்பதாக கூறி தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த எதிர் அணியினர் அண்ணா சலையில் உள்ள சங்க அலுவலகங்களுக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த அணியில் உள்ள ஜே.கே. ரித்தீஷ், தயாரிப்பாளர் சுரேஷ் கமாட்சி, ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் தமிழக முதல்வரை இன்று சந்தித்து பேசினர்.

எனவே சங்க அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இதனிடையில் இன்று காலை 11 மணியளவில் அங்கு வந்த விஷால், இந்த சங்கத்தின் தலைவர் நான். என் அலுவலகத்திற்கு இன்னொருவர் பூட்டு போட்டுள்ளனர்.

யாரோ ஒருவர் போட்ட பூட்டுக்காக ஏன் இவ்வளவு பாதுகாப்பு என போலீசாருடன் விஷால் வாக்குவாதம் செய்தார்.

பதிவாளரிடம் வழங்கப்பட்ட சாவியை பெற்றுவந்து சங்கத்தை திறக்க விஷாலை போலீசார் வலியுறுத்தினர்.

ஆனால் பூட்டை உடைத்தே தீருவேன் என விஷால் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

எனவே வேறு வழியின்றி நடிகர் விஷாலை போலீசார் கைது செய்தனர். அவருடன் நடிகர் மன்சூர் அலிகானும் கைது செய்யப்பட்டார்.

தற்போது அவர்கள் அனைவரும் தி.நகர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதை தொடர்ந்து பதிவுத்துறை அதிகாரிகள் தி. நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்தின் பூட்டை திறந்தனர்.

உள்ளே சென்ற அவர்கள், சங்கத்திற்குள் ஆய்வு நடத்தி பார்வையிட்டனர்.

Vishal arrested while he trying to enter producers council office

2019 புத்தாண்டு சமூக நீதிக்கான விடியலாக மாற ரஞ்சித் புது முயற்சி

2019 புத்தாண்டு சமூக நீதிக்கான விடியலாக மாற ரஞ்சித் புது முயற்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், சமூக மாற்றத்திற்கான தேடலோடு கலைத்தளத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது.

கடந்தவருடம் நீலம் பண்பாட்டு மையத்தால் உருவாக்கப்பட்ட “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” கலைக்குழுவின் இசை நிகழ்ச்சி பெருமளவில் விவாதங்களை ஏற்படுத்தியது.

இந்த வருடம் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னையில் டிசம்பர் 29, 30, 31 ஆகிய 3 நாட்களில் “வானம் கலைத்திருவிழா” நடக்க இருக்கிறது.

வானம் கலைத்திருவிழா பற்றிய அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” கலைக்குழுவினரின் பாடல்களுடன் தொடங்கிய பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பா.இரஞ்சித் பேசியதாவது,

கலை மக்களுக்கானது என்று மாவோ சொல்வார், அப்படியானால் யார் மக்கள் என்ற ஒரு கேள்வி எழுகிறது. சிறுவயதில் நான் பார்த்த எத்தனையோ கலைகள் இன்று கிட்டத்தட்ட அழிந்துவிட்டன.

மேடை ஏற்றப்படாத பல கலைகளைப்பற்றி நான் யோசிக்கும்போது அதெல்லாம் கலைகள் இல்லையா… என்ற ஒரு கேள்வி எனக்குள் எழுந்துகொண்டே இருந்தது.

அப்படி நிராகரிக்கப்பட்ட, தவிர்க்கப்பட்ட, மேடை ஏற்றப்படாத கலைகளை மேடையேற்ற ஒரு விழா நடத்தவேண்டும் என்று நினைத்தோம்.

அதன் தொடர்ச்சியாக நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் இந்த கலைவிழாவை ஏற்பாடு செய்திருக்கிறோம்.

இந்த கலைவிழா யாருக்கும் போட்டிக்காக நடத்தப்படும் விழா என்று நினைத்துவிடவேண்டாம். ஒற்றுமை தான் முக்கியம். கலைவழியே அதை சாத்தியப்படுத்தவே இந்த விழாவை நடத்துகிறோம்.

விழாவில் பறையிசை, நாடகங்கள், குழந்தைகளுக்கான கதை சொல்லல் நிகழ்வுகள், குழந்தைகளுக்கான மற்றும் இளைய தலைமுறைக்கான பயிலரங்கங்கள், பல்வேறு இசைப்பின்னணி கொண்ட பாடல்கள், அனைவரும் பங்கேற்று பாடும் தெருக்குரல், ஒப்பாரி, சிலம்பாட்டம், புத்தர் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நாடகம், ஆணவக்கொலையை கருப்பொருளாகக் கொண்ட நாட்டிய நிகழ்வு, மதுரை வீரன் கதை நாடகம், பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் சிந்தனைகளைப்பேசும் புத்தகங்களைக்கொண்ட மிகப்பெரிய லைப்ரரி, கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழுவின் முதல் சினிமா சாராத இன்டிபென்டட் இசை ஆல்பம் “மகிழ்ச்சி” வெளியீடு, சமூக சிந்தனையுடன் கூடிய கவிதைகள், புத்தகங்கள் வெளியீடு இப்படி இன்னும் பல நிகழ்வுகளுடன் வானம் கலைத்திருவிழா நடக்க இருக்கிறது.

கலைகளின் சமூகத்தில் விவாதங்களை ஏற்படுத்தி, அந்த விவாதங்களின் வழியே சமத்துவத்தையும் சமூக நீதியையும் முன்னெடுக்க வேண்டும், இன்றைய இளம் தலைமுறையினருக்கு அதைக்கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தான் இந்த வானம் கலைவிழாவின் முக்கிய நோக்கம்.

டிசம்பர் மாதத்தில் இதை நடத்த மிக முக்கியமான காரணம், இந்த வருடத்தின் கடைசி இரவு விடியும் போது சமூக நீதிக்கான விடியலாக அது இருக்கட்டும் என்று நினைத்தது தான் காரணம் என்று கூறினார் இயக்குநர் பா.இரஞ்சித்.

டிசம்பர் 29, 30, 31 ஆகிய 3 நாள்களும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பல்வேறுபட்ட கலை நிகழ்வுகள் நடக்கும் வானம் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கட்டணம் எதுவும் கிடையாது. அனைவருக்கும் அனுமதி இலவசம்.

1159634973348644496

7152112492913238603

2019 பொங்கலில் அஜித்துக்கு வழிவிட்டு பாய தயாராகும் ரஜினி.!

2019 பொங்கலில் அஜித்துக்கு வழிவிட்டு பாய தயாராகும் ரஜினி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini and ajithசுரேஷ் கிருஷ்ணா இயக்கிய ‘பாட்ஷா’ திரைப்படம் தான் பொங்கலுக்கு வெளியான கடைசி ரஜினி படம்.

தற்போதுதான் 23 வருடங்களுக்கு பிறகு 2019 பொங்கல் பண்டிகைக்கு பேட்ட படம் ரிலீஸாகவுள்ளது.

அதே நாளில் அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படமும் ரிலீஸாகி மோத உள்ளது.

ஒரே நேரத்தில் இவர்கள் மோதினால் வசூல் பாதிக்கும் என பலர் கூறி வருகின்றனர்.

ஆனால் இரண்டு பட தயாரிப்பு நிறுவனங்களும் மாறி மாறி பொங்கல் ரிலீஸை உறுதிப்படுத்தி உள்ளன.

பொங்கல் பண்டிகை திருநாள் ஜனவரி 15 செவ்வாய் கிழமை வருகிறது.

எனவே அதற்கு முந்தைய வாரத்தில் அஜித் & சிவா கூட்டணி விதிப்படி வியாழன் சென்டிமெண்டில் ஜனவரி 10ஆம் தேதி விஸ்வாசம் திரைக்கு வருகிறது.

அதற்கு அடுத்த நாள் 11ஆம் தேதி வெள்ளியன்று ரஜினியின் பேட்ட படம் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓரிரு தினங்களில் பேட்ட படம் சென்சார் செய்யப்படவுள்ளது.

எனவே விரைவில் சென்சார் தகவல் வரும் என எதிர்ப்பார்க்கலாம்.

ரஜினி படத்தில் அரசியல் இருக்காது.; மாஸ் இருக்கும்.. : ஏஆர். முருகதாஸ்

ரஜினி படத்தில் அரசியல் இருக்காது.; மாஸ் இருக்கும்.. : ஏஆர். முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini and ARMபேட்ட படம் வெளியான பிறகு ஏஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார் ரஜினிகாந்த்.

இப்பட தயாரிப்பாளர் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.

ஆனாலும் இவர்கள் இணைவது உறுதியாகியுள்ளது.

இதனிடையில், ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட ஏ.ஆர்.முருகதாஸ் இது குறித்து பேசியதாவது…

“ரஜினி சாரை வைத்து நான் இயக்கும் படம், அரசியல் படம் கிடையாது. ஆனால், மாஸ் என்டெர்டெயினராக இருக்கும்.

நீண்ட காலமாக நான் ரஜினியின் ரசிகன். இது என்னுடைய கனவுப்படம்” என பேசினார்.

Breaking *மெரினா புரட்சி*-க்கு சர்ட்டிபிகேட் தராத சென்சாருக்கு கோர்ட் நோட்டீஸ்

Breaking *மெரினா புரட்சி*-க்கு சர்ட்டிபிகேட் தராத சென்சாருக்கு கோர்ட் நோட்டீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

marina puratchiகடந்த 2017 ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தன்னெழுச்சியாக 10 நாட்கள் நடத்திய போராட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம் ‘மெரினா புரட்சி’.

இந்த திரைப்படத்திற்கு 80 நாட்களாகியும் இதுவரை தணிக்கை சான்றிதழ் தரப்படவில்லை.

காரணம் சொல்லாமல் 2 முறை சென்சார் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

இதுகுறித்து இப்பட இயக்குனர் கூறியதாவது…

வரலாற்றுச் சிறப்புமிக்க ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக நாச்சியாள் பிலிம்ஸ் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம்.

மெரினா புரட்சி திரைப்படத்தை பொங்கலுக்குள் தணிக்கை முடித்து திரையிட வேண்டும் என்று கோரியிருக்கிறோம்.

மாண்புமிகு நீதியரசர் அவர்கள் எதிர்த்தரப்பான தணிக்கைத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்கள். நீதி வெல்லும்.” என இயக்குனர் M S ராஜ் தெரிவித்துள்ளார்.

Breaking : தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டு; விஷாலை விளாசும் எதிர் அணியினர்

Breaking : தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டு; விஷாலை விளாசும் எதிர் அணியினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishalதயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷால் பதவியேற்ற பிறகு திருட்டு விசிடி ஒழிப்பு, படங்கள் வெளியீடு தேதிக்கு குழு உள்ளிட்ட பல வாக்குறுதிகளை அளித்தார்.

ஆனால் கொடுத்த வாக்கை அவர் காப்பாற்றவில்லை என எதிர்தரப்பினர் கூறி வந்தனர்.

விஷாலின் நண்பர்கள் ஆர்.கே. சுரேஷ் & உதயா ஆகியோரும் விஷாலை குறை கூறி பதவி விலகினர்.

இந்நிலையில் ஜே.கே.ரித்திஷ், சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட எதிர்தரப்பினர் சமூக வலைத்தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

அதில் இன்று (டிசம்பர் 19) தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு ஒன்றாகச் சென்று கோரிக்கை மனு கொடுக்கவுள்ளோம் என்றனர்.

அதன்படி இன்று ஜே.கே.ரித்தீஷ் தலைமையில் தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு சென்றனர்.

அங்கு சங்க துணைத் தலைவர் கதிரேசன் எதிரணியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால் இரு தரப்பிலும் சமரசம் ஏற்படவில்லை.

திடீரென விஷால் அறைக்கு பூட்டு போட்டு, அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

மேலும், சங்கத்திற்கும் பூட்டுப் போட்டனர்.

இதனையடுத்து சங்கத்தின் சாவியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கொடுக்க உள்ளதாக எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.

இதனால் காலையில் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

More Articles
Follows