தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா ஊரடங்கில் டாஸ்மாக் கடைகளுக்கு தமிழக அரசு அனுமதியளித்த போதும் சினிமா படப்பிடிப்பு மற்றும் சினிமா தியேட்டர்களுக்கு இதுவரை அனுமதியில்லை.
அடுத்த மாத ஜூலை மாத இறுதியில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இந்த நிலையில் தற்போது தெலங்கானா மாநிலத்தில் சினிமா சூட்டிங்குக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் & படக்குழுவினர் தங்கள் பட படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் செல்கின்றனர்.
இந்த நிலையில் விஷால் நடிப்பில் து.பா.ஆ சரவணன் இயக்கத்தில் உருவாகும் பட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது.
இது விஷாலின் 31வது படமாகும்.
இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது.
விஷால் ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடிக்க யுவன் இசையமைப்பை கவனிக்க பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.
Vishal 31 shoot resumes in hyderabad