தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற ஆபாச படம் வெளியாகி தியேட்டர்களில் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.
சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியுள்ள இப்படத்தை ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர் ஜே. சதீஷ்குமார் ஆகியோர் இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
தற்போது ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் அந்தப் படம் ஓடக்கூடாது என ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
சினிமாவில் இருந்துக் கொண்டே, இந்தப் படம் ஓடக்கூடாது என்று சொல்லும் போது எனக்கே ரொம்ப கஷ்டமாக இருந்தது.
ஒரு படம் ஓடினால் தான் திரைத்துறைக்கு நல்லது. வேற யாராவது தயாரித்திருந்தால் எதுவும் தெரிந்திருக்காது.
மிகவும் மதிக்கக் கூடியவரே இந்த படத்தை தயாரித்திருப்பது, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது.
ஆனால், இந்தப்படம் ஓடக்கூடாது என்று எனக்கு ஏன் தோன்றியது என்றால், திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று பலர் வருகிறார்கள்.
இந்தப் படம் ஓடியது என்றால், இளைஞர்களுக்கு இதுதான் பிடிக்கும் போல, இதுதான் சினிமா என்று நினைத்துக் கொண்டு எல்லாரும் இதுபோன்ற படங்கள் எடுக்க ஆரம்பித்து விடுவார்கள்.
இந்த கால கட்டத்திற்கு இது சரிபட்டு வராது.
ஏதோ பேசனும்னு தோன்றியது, பேசாமல் இருந்தால் தப்பு என்று தோன்றியது. அதான் பேசிவிட்டேன். இதனால் வரும் எதிர்வினையை சந்திக்கவும் தயார்’ என்று ஓபனாக பேசியுள்ளார்.