தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான மெர்சல் படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தன் 100வது படைப்பாக தயாரித்தது.
இப்படம் வெளியாகும் சமயத்தில் பல பிரச்சினைகளை சந்தித்தது.
தலைப்பு பிரச்சினை, சென்சார் பிரச்சினை, விலங்குகள் நல வாரியம் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளால் படம் தீபாவளிக்கு வெளியாகுமா? என்ற சந்தேகமும் எழுந்தது.
இதனால் படத்தை வெளியிட முடியாத சூழ்நிலையில் தவித்து வந்தாராம் தயாரிப்பாளர் முரளி.
இதனையறிந்த விஜய் ரூ. 5 கோடி தொகையை கொடுத்து, படத்தை வெளியிட உதவி செய்தாராம்.