தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஏஆர். ரஹ்மான் இசையில் அட்லி இயக்கியுள்ள மெர்சல் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.
இதில் இப்பட நாயகன் நடிகர் விஜய் கலந்துக் கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது….
ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் 25வது ஆண்டில் அவருடன் பணியாற்றியதை விசேஷமாக உணர்கிறேன்.
உலகத்துக்கே மெட்டு போட்டு ஆஸ்கர் வாங்கி மெர்சல் ஆக்குனாரு. இப்போ ‘மெர்சல்’க்கு மெட்டு போட்டிருக்காரு.
நான் அட்லீயின் தன்னம்பிக்கைக்கு மிகப்பெரிய விசறி. அது வேற லெவல். தெறிக்கு முதலில் அவருக்கு நன்றி.
ரசிகர்களுக்கு நான் அட்வைஸ் சொல்கிறேன் என்று நினைக்கவேண்டாம். நான் அவ்வளவு பெரிய ஆள் கிடையாது.
எதிர்மறையாக யாராவது பேசுவதைப் பற்றிச் சொன்னால் அவர்களை புறக்கணித்துவிடு நண்பா என்றுதான் சொல்வேன்.
ஹிட்-ஃப்ளாப் எல்லாம் கொடுத்திட்டீங்க. ஆனா அதை விட அதிகமாக சம்பாதித்தது ரசிகர்களான உங்களைத்தான்.
எதுவும் இல்லாத போது உங்கள் தன்னம்பிக்கையும், எல்லாம் இருக்கும்போது உங்கள் அணுகுமுறையும் தான் முக்கியம்.
எல்லோரும் நம்மை சீண்டுவார்கள். அதெல்லாம் நடக்கும். ஆனால் அதை புறக்கணியுங்கள்.
என் மகன் கூட நான் சொல்வதை எல்லாம் கேட்கமாட்டார். எனவே நீங்கள் முடிந்தால் எடுத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் விடுங்கள்.
துப்பாக்கின்னா தோட்டா இருக்கனும்; கத்தினா ஷார்ப்பா இருக்கனும்.
தெறின்னா தெனாவட்டா இருக்கனும். மெர்சல்ன்னா மிரட்டலா இருக்கனும் என்று பேசினார் தளபதி விஜய்.
Vijay emotional and advice speech at Mersal audio launch