விஜய்யுடன் இணையும் வெற்றிமாறன்..; தளபதிக்கு தயக்கமா..?

விஜய்யுடன் இணையும் வெற்றிமாறன்..; தளபதிக்கு தயக்கமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay vetrimaranஎத்தனை வருடங்களாக தரமான படங்களை மட்டுமே கொடுப்பேன் என வைராக்கியத்தோடு இருக்கிறார் போல டைரக்டர் வெற்றிமாறன்.

கடந்த 13 ஆண்டுகளில் அவர் இயக்கிய மொத்த படங்கள் 5 மட்டுமே.

அதில் பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை மற்றும் அசுரன் ஆகிய தனது நான்கு படங்களிலும் தனுஷை இயக்கியிருந்தார்.

’விசாரணை’ படத்தில் தினேஷ் நடித்திருந்தாலும் அந்த படத்தை தனுஷ் தயாரித்திருந்தார்.

தற்போது சூரி ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

இதனையடுத்து சூர்யாவின் ’வாடிவாசல்’ என்ற படத்தை கலைப்புலி தானு தயாரிப்பில் இயக்குகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் பிரபல ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில்.. விஜய்க்கான கதை தயார். அவரின் அழைப்பிற்காக காத்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

தளபதிக்கு வெற்றிமாறனை அழைப்பதில் என்ன தயக்கமோ? இந்த செய்தி அறிந்தவுடன் தயங்காமல் அழைப்பார் என நம்பலாம்.

மீண்டும் பவர் ஸ்டாருடன் களமிறங்கும் விஜய்-அஜித் படத்தயாரிப்பாளர்

மீண்டும் பவர் ஸ்டாருடன் களமிறங்கும் விஜய்-அஜித் படத்தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pawan kalyan am ratnamகமல் நடித்த இந்தியன், விக்ரம் நடித்த பீமா, விஜய் நடித்த கில்லி, அஜித் நடித்த ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் ஆகிய படங்களைத் தயாரித்தவர் ஏஎம் ரத்னம்.

இவர் தெலுங்கிலும் சில படங்களை தயாரித்துள்ளார்.

தெலுங்கில் 2006ம் ஆண்டு பவன் கல்யாண் நடித்த ‘பங்காரம்’ படத்தை தயாரித்தார்.

அதன்பின்னர் நேற்று பவன் கல்யாண் பிறந்தநாளை மீண்டும் பவர் ஸ்டார் பவன் கல்யாண் படத்தை தயாரிக்கவுள்ளதாக பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கிரிஷ் இயக்கத்தில் பவன் கல்யாணின் 27வது படமாக அது உருவாகவுள்ளது.

இந்த படம் சரித்திரப்படமாக உருவாக உள்ளதாக தெரிகிறது.

இதன் அறிவிப்பு போஸ்டர் அவ்வாறே டிசைன் செய்யப்பட்டுள்ளது.

யூடிப்பில் படம் லீக்..: முன்னாள் முதல்வரின் மனைவி போலீசில் புகார்

யூடிப்பில் படம் லீக்..: முன்னாள் முதல்வரின் மனைவி போலீசில் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress kutty radhikaஜனநாதன் இயக்கத்தில் அருண்விஜய் அண்ட் ஷாம் இணைந்து நடித்த படம் ‘இயற்கை’.

இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் குட்டி ராதிகா.

அதன் பின்னர் சில படங்களில் நடித்த இவர் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை திருமணம் செய்துக் கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார்.

கடந்த 2013ல் ‘ஸ்வீட்டி நானா ஜோடி’ என்ற கன்னட படத்தை தயாரித்து அதில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

அந்தப் படத்தை தயாரிப்பாளரின் அனுமதி பெறாமல் மர்ம நபர் யாரோ யூடியூப்பில் அப்லோட் செய்துள்ளனர்.

எனவே, இது குறித்து குட்டி ராதிகா போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பாலா இயக்கிய ‘வர்மா’ படம் ஆன்லைன் ரிலீஸ்..?

பாலா இயக்கிய ‘வர்மா’ படம் ஆன்லைன் ரிலீஸ்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhruv vikram varma2017-ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம்

தெலுங்கில் ரிலீசாகி சூப்பர் ஹிட்டடித்த படம் அர்ஜுன் ரெட்டி.

விஜய் தேவரகொண்டா நடித்த அந்தப் படம் தமிழில் ‘வர்மா’ எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

தமிழில் பாலா இயக்க விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகி நடித்தார்.

இந்தப் படத்தை இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இப்பட டீசர் வெளியாகி ஹிட்டானது. படமும் வெளியீட்டுக்கு தயார் நிலையில் இருந்தது.

இந்த நிலையில் படம் கைவிடப்பட்டுவிட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.

இதன் பின்னர் ‘ஆதித்யா வர்மா’ என்ற டைட்டிலில் அர்ஜுன் ரெட்டி படத்தில் பணியாற்றிய இயக்குநர் கிரிசய்யா இயக்கத்தில் மீண்டும் புதிதாக படம் உருவானது.

இந்த நிலையில் தற்போது பாலா இயக்கிய ‘வர்மா’ படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது.

அமேசான் ப்ரைம் வீடியோவில் நவம்பர் 13-ம் தேதி ரிலீஸ் எனவும் கூறப்பட்டது.

ஆனால் இத்தகவல் முற்றிலும் பொய்யானது என தற்போது தயாரிப்பாளர் தரப்பில் தெரிய வந்துள்ளது.

பவன் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டம்.: இரு வேறு விபத்துகளில் ரசிகர்கள் 8 பேர் மரணம்

பவன் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டம்.: இரு வேறு விபத்துகளில் ரசிகர்கள் 8 பேர் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pawan kalyanதெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பவன் கல்யாண்.

இவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி.

கடந்த 2008-ம் ஆண்டு பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை இவரது அண்ணன் சிரஞ்சீவி தொடங்கியபோது அதன் இளைஞரணியான யுவ ராஜ்யத்தின் தலைவராக இருந்தார்.

இதன் பின்னர், சிரஞ்சீவி தனது கட்சியைக் காங்கிரஸ் கட்சியோடு இணைத்து கொண்டதால், இதில் உடன்பாடு இல்லாமல் கட்சியிலிருந்து வெளியேறினார் பவன் கல்யாண்.

கடந்த 2014-ல் ஜன சேனா எனும் கட்சியைத் தொடங்கினார்.

2017-ல் முழுநேர அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்தார்.

எனவே படங்களில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்தார்.

ஆனால், அரசியல் களம் மற்றும் தேர்தல் முடிவுகள் பவனுக்கு சாதகமாக அமையவில்லை.

எனவே அரசியல் ஆர்வத்தை குறைத்து மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார் .

இன்று பவன் கல்யாண் தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதனை முன்னிட்டு பவன் கல்யாணை சந்திக்க காரில் 5 ரசிகர்கள் முழுகு என்ற இடத்தை நோக்கி சென்றனர்.

அப்போது பசர்கொண்டா அஅருகே எதிரே வந்த லாரி இவர்களின் கார் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் மேகலா ராஜேஷ், சபீர், மெடிச்சாந்து, ரோஹித், பவன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதேபோல் மற்றொரு விபத்தும் பவன் கல்யாண் ரசிகர்களுக்கு நடந்துள்ளது.

நேற்று இரவு சித்தூர் மாவட்டத்தில் பவன் கல்யாணை வாழ்த்தி பேனர் வைத்த போது, மின்சாரம் தாக்கி சேகர், அருணாச்சலம் & ராஜேந்திரன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த மூவருக்கும் தலா ரூ. 2 லட்சம் உதவித் தொகை அளித்துள்ளார் பவன் கல்யாண். மேலும் தெலுங்கு நடிகர் ராம் சரண் ரூ.2.5 லட்சம் உதவித் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

மேலும் 2 பேர் சித்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

ஆக பவன் கல்யாணின் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான விபத்துகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்திற்குள் அரசு தனியார் பேருந்து & ரயில் சேவைக்கு தமிழக அரசு அனுமதி

தமிழகத்திற்குள் அரசு தனியார் பேருந்து & ரயில் சேவைக்கு தமிழக அரசு அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

passenger train bus in tnகொரோனா வைரஸ் பரவலை தடுக்க போடப்பட்ட ஊரடங்கால் கடந்த 6 மாதங்களாக போக்குவரத்து சேவை தமிழகத்தில் நிறுத்தப்பட்டது.

நேற்று முதல் மாவட்டத்திற்குள் போக்குவரத்துக்கு அரசு அனுமதியளித்து இருந்தது.

இந்த நிலையில், வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் திங்கள் கிழமையிலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தமிழகத்திற்குள் செயல்பட அனுமதியளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

இந்துடன் பயணியர் ரயில் சேவைக்கும் தமிழகத்திற்குள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows