புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மோடி அமைச்சரவை ஒப்புதல்

புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மோடி அமைச்சரவை ஒப்புதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Narayanasamy (2)தமிழகத்தைப் போலவே புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தலுக்கும் இன்னும் சில மாதங்களே உள்ளது.

புதுச்சேரியில் 2016 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் 15 எம்.எல்.ஏ.,க்களுடன் ஆட்சி அமைத்தது. மூன்று தி.மு.க., – MLAக்கள், மாகி தொகுதி சுயேச்சை MLA, ஆட்சிக்கு ஆதரவளித்தனர்.

முதல்வராக நாராயணசாமி பதவியேற்றார்..

2020 கடந்தாண்டு ஜூனில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு, அரசுக்கு எதிராகத் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்த காரணத்தினால் பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தனவேலுவை தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர்.

இதனால் 18ஆக இருந்த காங்கிரஸ் கூட்டணி கட்சியிலிருந்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 17ஆக ஆனது.

இந்தாண்டு 2021 ஜனவரியில்… முதல்வர் நாராயணசாமி உடனான மோதல் காரணமாக பொதுப்பணித்துறை அமைச்சரும், வில்லியனூர் தொகுதி MLA நமச்சிவாயம் மற்றும் உசுடு தொகுதி MLA தீப்பாய்ந்தான் ஆகிய இருவரும் ராஜினாமா செய்து பாஜக.வில் இணைந்தனர்.

எனவே காங். கூட்டணியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலம் 17லிருந்து 15ஆக ஆனது.

இதன் பின்னர் புதுச்சேரி யானம் MLA மல்லாடி கிருஷ்ணா ராவ் கடந்த 15ஆம் தேதியும் அடுத்த நாள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காமராஜர் நகர் MLA ஜான்குமார்‌ இருவரும் ராஜினாமா செய்தனர்.

அதே பிப்ரவரி 16 இரவில்… புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்த கிரண் பேடியை விடுவித்து, தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியை கூடுதல் பொறுப்பாக ஜனாதிபதி ஒப்படைத்தார்.

நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு பிப்ரவரி 22ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார் ஆளுநர் தமிழிசை.

பிப்ரவரி 21ஆம் தேதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்பவன் MLA லட்சுமி நாராயணன் & திமுகவை சேர்ந்த தட்டாஞ்சாவடி தொகுதி MLA வெங்கடேசன் இருவரும் ராஜினாமா செய்தனர்.

மேலும் கீதா ஆனந்தன் MLAவும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஆக மொத்தம் புதுச்சேரியில் 7 MLAக்கள் பதவி விலகியதால், 17ல் இருந்து 10ஆக ஆனது. இதனால் காங்கிரஸ் கூட்டணி அரசு தனது மெஜாரிட்டியை இழந்தது.

இதனால் சட்டசபையில் நாராயணசாமியால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை.

பெரும்பான்மை இல்லாமல் போனதால் நாராயணசாமி அரசு கவிழ்ந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

இதனையடுத்து, புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி, துணை நிலை கவர்னர் தமிழிசை சௌந்திரராஜன், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார்.

அதன்படி, இன்று பிப்ரவரி 24ல் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில், புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Union Cabinet approves President’s Rule in Pondicherry

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு ‘மோடி மைதானம்’ என பெயர் மாற்றம்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு ‘மோடி மைதானம்’ என பெயர் மாற்றம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குஜராத் மாநில ஆமதாபாத்தின் மோதிராவில் சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானம், உலகின் மிகப்பெரிய மைதானம் என்ற வரலாற்றுச் சிறப்பை பெற்றுள்ளது.

இந்த மைதானத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

திறப்பு விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார்.

இந்நிலையில், உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் எனப் பெயர் பெற்றுள்ள சர்தார் படேல் கிரிக்கெட் மைதானம், *நரேந்திர மோடி மைதானம்* எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அமித்ஷா பேசுகையில்…, ‘உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கம் இங்கு கட்டப்பட வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் நோக்கம். 1,32,000 இருக்கைகள் கொண்ட இந்த அரங்கம் நரேந்திர மோடி ஸ்டேடியம் என்று அழைக்கப்படும்,’ என்றார்.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரின் 3-வது ஆட்டம் பகலிரவு டெஸ்ட்டாக ஆமதாபாத்தில் இன்று முதல் நடைபெறுகிறது.

மொத்தம் 4 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடா், தற்போது 1-1 என சமநிலையில் இருப்பதால், 2-வது வெற்றிக்காக இரு அணிகளுமே தீவிரமாக முயற்சிக்கவுள்ளன.

முதலிரு டெஸ்டுகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், 3-வது டெஸ்ட் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவெடுத்துள்ள இந்த மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ப்ளாஷ்பேக்…

ஆமதாபாத்தில் சபர்மதி நதியின் கரையில் அமைந்துள்ள இந்த மைதானம், 1982-ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

அதன் பின்னர் உலகிலேயே மிகப்பெரிய மைதானமாக இதை மாற்ற 2015-இல் முடிவு செய்யப்பட்டு, மறுசீரமைப்புப் பணிகள் 2020 பிப்ரவரியில் நிறைவடைந்தன.

மைதான சிறப்பம்சங்கள்…

உலகிலேயே வேறெந்த மைதானத்திலும் இல்லாத வகையில், வீரர்களுக்காக 4 ஓய்வறைகள் உள்ளன. தனித்தனியே உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன.

இதன்மூலம் 90,000 பேர் அமரும் வசதி கொண்ட மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தை முறியடித்து, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக உருவெடுத்துள்ளது.

தலா 25 பேர் வசதியாக அமரக் கூடிய 76 கார்ப்பரேட் பாக்ஸ் கேலரிகளும் அடங்கும்.

சுமார் 63 ஏக்கர் அளவிலான நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த மைதானத்துக்கு 4 நுழைவு வாயில்கள் உள்ளன.

பிரம்மாண்ட விளக்குக் கம்பங்களுக்குப் பதிலாக, மைதானத்தின் மேற்கூரை விளிம்புகளில் வட்ட வடிவில் எல்இடி ஃப்ளட் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இரவு ஆட்டங்களின்போது தெளிவான காண்புநிலை இருக்கும் வகையிலும், மைதானத்தில் நிழல் விழாத வகையிலும் அவை பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

World’s Largest ground Renamed Narendra Modi Stadium

ஜெயலலிதா 73.: சசிகலாவை சந்தித்த சீமான்-சரத்குமார்-ராதிகா.; அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி கருத்து

ஜெயலலிதா 73.: சசிகலாவை சந்தித்த சீமான்-சரத்குமார்-ராதிகா.; அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி கருத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் அவரின் தோழி சசிகலா.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது….

“ஜெயலலிதாவின் உண்மையான உடன் பிறப்புகள் ஒன்றிணைந்து மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும்.

இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக ஆட்சி இருக்கும் என்று சொல்லிவிட்டு சென்றார் அம்மா.

அதை மனதில் வைத்து அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். நானும் அதற்கு உறுதுணையாக நிற்பேன். ஒன்றாக இணைந்து மீண்டும் ஆட்சியமைப்போம். பொது எதிரி திமுகவை வீழ்த்துவோம்” என தெரிவித்தார்.

இதனையடுத்து சென்னை தி.நகர் இல்லத்தில் சசிகலாவை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குநர் பாரதிராஜாவும் சந்தித்து பேசினர்.

இவர்களுக்கு முன்னதாக சசிகலாவை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் சந்தித்து பேசினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் சரத்குமார்.

அவர் பேசியதாவது…“‘நன்றி மறப்பது நன்றன்று. நன்றல்லது அன்றே மறப்பது நன்று’. நான் 10 ஆண்டுகளாக சசிகலாவோடு பயணித்துள்ளேன்.

சசிகலாவுடன் அதிமுகவினரும் நல்ல உறவோடு இருந்திருக்கிறார்கள். அதை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும்.” என பேசினார்.

சசிகலா பேச்சு மற்றும் சரத்குமார் சந்திப்பு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது…

“சசிகலா அழைப்பு அதிமுகவினருக்கு பொருந்தாது. அவர் அமமுகவினரைத்தான் அப்படி அழைத்துள்ளார்.

சரத்குமார் – ராதிகா அதிமுக கூட்டணியில்தான் இருக்கின்றனர்” என கூறினார்.

TN Politicians meet Sasikala at her residence

sasikala (2)

‘கலைமாமணி’ விருதை பறிச்சிடுவாங்களோ..? பயத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்

‘கலைமாமணி’ விருதை பறிச்சிடுவாங்களோ..? பயத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan (2)தமிழக அரசின் கலை மற்றும் கலாச்சாரத்துறை சார்பாக ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, சௌகார் ஜானகி, பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி, சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, எடிட்டர் ஆண்டனி, தயாரிப்பாளர் தாணு, ஐசரி கணேஷ் உள்ளிட்ட 42 பேருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை பிப்ரவரி 20ல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலைஞர்களுக்கு வழங்கினார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ படத்தின் SO BABY’ என்ற பாடலை மட்டும் நாளை பிப்ரவரி 25ல் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ புரோமாவில் டாக்டர் பட இயக்குனர் நெல்சன் & இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருடன் சிவகார்த்திகேயனும் நடித்திருந்தார்.

இந்த ஜாலியான வீடியோவில் சிவகார்த்திகேயனை CLASSICAL & WESTERN கலந்த பாடலை எழுத சொல்கின்றனர்.

தமிழக அரசு கொடுத்த ‘கலைமாமணி’ விருதை பறிக்க வச்சிடுவாங்களோ? என சிவகார்த்திகேயன் சொல்வது போல காட்சிகள் உள்ளன.

இதற்கு முன் வெளியான ‘செல்லமே’ பாடலுக்கும் தடை செய்யப்பட்ட ‘டிக் டாக்’ செயலியை வைத்து சூப்பர் புரோமோ வெளியிட்டு இருந்தனர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘டாக்டர்’ படத்தில் ப்ரியங்கா அருள், வினய், யோகி பாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்த படத்தை சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

அடுத்த மாதம் மார்ச் 26ல் தியேட்டர்களில் இப்படத்தை வெளியிடவுள்ளனர்.

Interesting promo on Doctor next single

சூர்யாவும் சென்னை ரசமும் என் பேவரைட்..; ஹேமமாலினி் மகள் ஈஷா தியோலின் ‘கலர்ஸ்’ இன்டர்வியூ

சூர்யாவும் சென்னை ரசமும் என் பேவரைட்..; ஹேமமாலினி் மகள் ஈஷா தியோலின் ‘கலர்ஸ்’ இன்டர்வியூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரும்பாலான மக்களின் தலையாய பிரச்சனையாக இருப்பது உடல் எடை அதிகரிப்பு தான். அந்தவகையில் அமெரிக்க, ஆரோப்பிய நாடுகளில் உடல் எடையை குறைப்பதற்காக பயன்படுத்தும் கிரையோமேட்டிக் தொழில்நுட்பம் இந்தியாவிலும் தனது ஆதிகத்தை நிலை நாட்டியுள்ளது.

குறிப்பாக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரும் kolors நிறுவனம் இந்தியாவில் சுமார் பத்து மில்லியன் வாடிக்கையாளர்களின் உடல் எடை மற்றும் சரும பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளது.

குறிப்பாக சினிமா பிரபலங்களுக்கு கலர்ஸ் நிறுவனத்தின் கிரையோமேட்டிக் தொழில்நுட்பமும் அவர்களது கைலான் சருமம் மற்றும் கூந்தலுக்கான தயாரிப்புகளும் ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது.

லேட்டஸ்டாக நடிகை ஈஷா தியோல் இந்த தொழில் நுட்பத்தின் மூலம் தனது உடல் எடையை கிட்டத்தட்ட 17 கிலோ வரை குறைத்துள்ளார்.

சீனியர் பாலிவுட் நடிகர்களான தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதியினரின் மகளாகிய நடிகை ஈஷா தியோல், இன்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, கலர்ஸ் நிறுவனத்தின் கிரையோமேடிக் தொழில்நுட்பம் குறித்தும் மற்றும் அதன் கைலான் தயாரிப்புகள் பயன்பாடு குறித்தும் அதில் தனக்கு கிடைத்த அனுபவங்கள் மற்றும் பலன்கள் குறித்தும் விரிவான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் ஈஷா தியோல் பேசும்போது…

“அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இந்த கிரையோமேட்டிக் தொழில்நுட்பம் இருப்பது குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். தற்போது இந்தியாவிலும் இந்த தொழில்நுட்பம் வந்துவிட்டது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம்.

எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். பொதுவாக, பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் எல்லோருக்கும் ஏற்படுவது போல, எனக்கும் உடல் எடை அதிகரிக்கவே செய்தது.. எனது நண்பர்கள் வட்டாரத்தில் கிரையோமேடிக், தொழில்நுட்பத்தில் எடை குறைப்பது குறித்து விசாரித்தபோது தான், இங்கே கலர்ஸ் நிறுவனம் குறித்து தெரியவந்தது.

அதன்பிறகுதான் இந்த சிகிச்சை முறைக்குள் அடி எடுத்து வைத்தேன். அது மிகப்பெரிய பலனை தந்ததுடன் நல்ல அனுபவமாகவும் இருந்தது. எடை குறைவது கண்கூடாகவே தெரிந்தது.

அதேபோலத்தான் படப்பிடிப்பு, மேடை நிகழ்ச்சிகள், வெளியூர் பயணங்கள் என சுற்றிக்கொண்டே இருக்கும்போது, எனது சருமத்தை பராமரிப்பதும் கூந்தல் உதிர்வதை தவிர்ப்பதும் பெரிய சவாலாக இருந்தது.

அப்போதுதான் கைலான் தயாரிப்புகள் பற்றி தெரியவந்தது. அவற்றில் நமக்கு தேவையான இயற்கையான மூலப்பொருட்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு இருந்தது. அது மட்டுமல்ல, ரசாயன பொருட்களோ அல்லது விலங்குகள் சம்பந்தப்பட்ட பொருட்களோ அதில் சேர்க்கப்படவில்லை என்பதால் எனக்கு அவற்றை பயன்படுத்துவதற்கு வசதியாக இருந்தது” என்றார்.

மேலும் பத்திரியாக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஈஷா தியோல்…

“சென்னை எப்போதுமே என் சொந்த ஊர்.. நான் சிறுவயதில் விடுமுறைக்காக இங்கேயே என் தாத்தா அப்பாடி வீட்டில் வந்து தங்கி செல்வதைப்போல, இப்போது எனது குழந்தைகளையும் விடுமுறை என்றால் சென்னைக்கு அழைத்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.

சென்னை வந்தாலே நல்ல ‘ரசம்’. சாப்பிடுவதற்கு கிடைக்கிறது ஏற்கனவே இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ‘ஆய்த எழுத்து’ படத்தில் நடித்துள்ளேன்.

அதுபோன்று நல்ல கதாபாத்திரங்கள் வந்தால், மீண்டும் தமிழில் நடிப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை..

குழந்தைகளை கவனித்துக் கொள்ளவே நேரம் சரியாக இருப்பதால், அடிக்கடி தமிழ் படங்கள் பார்க்க முடிவதில்லை.

அதேசமயம் நல்ல படங்கள் என நண்பர்கள் மூலமாக தெரிய வரும்போது, அந்தப் படங்களைத் தவறாமல் பார்த்து விடுவேன். குறிப்பாக சூர்யாவின் படங்களை தவறாமல் பார்த்து விடுவேன்.. நான் சூர்யாவின் ரசிகையின் கூட.. அதேபோல தென்னிந்திய நடிகைகளில் தமன்னாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.

திருமணம் ஆகி விட்டாலே, அக்கா, அம்மா கதாபாத்திரங்களில் தான் நடிக்க வேண்டும் என்பது இல்லை. அந்த காலம் எல்லாம் மலையேறி விட்டது.

இப்போது, திருமணமான பெண்கள் கதாநாயகிகளாக நடித்து வருகிறார்கள். ஓடிடி தளங்கள் வேறு உருவாகி விட்டன. நல்ல கதை மற்றும் கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பதற்கு தடை இல்லை” என்றார் ஈஷா தியோல்.

ஈஷா தியோலின் தாயார் ஹேமமாலினி, தமிழ்நாட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று முன்னணி நடிகையாக கோலோச்சியவர்.

அவரது சுயசரிதையை படமாக்கினால் நீங்கள் நடிப்பீர்களா என ஈஷாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு…

“என்னுடைய அம்மாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுப்பதற்கு ஒரு தைரியம் இருக்க வேண்டும்.. என் அம்மாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகம் வெளியாகி இருக்கிறது.. படித்தேன்.. அது நன்றாக இருக்கிறது..

அதேபோல யார் அதை படமாக எடுக்கப் போகிறார்கள், எப்படி எடுக்க போகிறார்கள் என்பதை பொறுத்து தான், அதில் நடிக்க முடியுமா என தீர்மானிக்க வேண்டும்.. குறிப்பாக எனது அம்மாவின் அனுமதி இருந்தால் மட்டுமே அதில் நடிப்பேன்” என கூறினார் இஷா தியோல்.

கலர்ஸ் நிறுவனத்தின் சிஇஓ சிவாஜி பேசும்போது, “கடந்த 16 வருடங்களாக இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறோம்.

இதை தொடங்கிய சமயத்தில் திருமணத்திற்காக, தாய்மை அடைவதில் உள்ள உள்ள சிரமங்களை தவிர்ப்பதற்காக, அரசாங்க பணிகளில் சேருவதற்காக கூட, தங்களது உடல் எடை பிரச்சனையாக இருக்கிறது என அதை குறைப்பதற்கு பல பேர் எங்களை அணுகினார்கள்..

அந்தவகையில் கிட்டதட்ட, 10 லட்சம் பேர்களுக்கு எடை குறைப்பு, சருமம் மற்றும் கூந்தல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு பயிற்சி மற்றும் மருத்துவ ரீதியாக தீர்வு அளித்து வருகிறோம்.

இந்த கிரையோமேடிக் தொழில்நுட்பம் மூலமாக, திரையுலகப் பிரபலங்களான ரம்பா, பிரியாமணி, மதுபாலா உள்ளிட்ட பலர் எடை குறைப்பு செய்து, மீண்டும் திரையுலகில் தங்களுக்கான வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.

அந்த வகையில் பாலிவுட் நடிகை ஈஷா தியோல் அவர்களும், எங்களது இந்த தொழில்நுட்பம் பற்றிக் கேள்விப்பட்டு எங்களை அணுகினார். தீவிர பயிற்சிக்குப் பிறகு, கிட்டத்தட்ட 17 கிலோ வரை எடையை குறைத்துள்ளார் அதுபோல சருமம் மற்றும் கூந்தல் பாதுகாப்பிற்காக கைலாந என்கிற பெயரில் 16 விதமான தயாரிப்புகளை உருவாக்கி உள்ளோம்.

இதை வெறும் அழகை பாதுகாக்கும் முயற்சியாகவோ அல்லது வியாபாரமாகவோ மட்டும் கருதாமல், சமுதாயத்திற்கு பயன்படும் ஒரு செயலாகவே மேற்கொண்டு வருகிறோம்.” என கூறினார்.

Actress Esha Deol talks about her favourites in chennai

உடல் முழுவதும் ‘அஜித்தின் அவதார டாட்டூஸ்’..; தற்கொலை செய்துக் கொண்ட தல ரசிகர்

உடல் முழுவதும் ‘அஜித்தின் அவதார டாட்டூஸ்’..; தற்கொலை செய்துக் கொண்ட தல ரசிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அஜித்துக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

ஆனால் ஒரு சில ரசிகர்களை வெறியர்கள் என்று கூட சொல்லலாம்.

இதில் பிரகாஷ் என்ற ரசிகரை ‘அஜித் பக்தன்’ என்றும் கூட சொல்லலாம்.

தன் உடல் முழுக்க அஜித் பெயரை பச்சை குத்திக் கொண்டுள்ளார். அதாவது டாட்டூஸ் போட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன்… அஜித்தின் அவதாரங்களை (Photographer Bike & Car Racer, Aero Modellor….. MJJ Professor என அனைத்தையும் தன் உடலில் பச்சை குத்திக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் இவர் திடீரென தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

அஜித் ரசிகர்கள்… தல பிரகாஷ்.. RIP Prakash என ட்விட்டரில் ட்ரெண்ட்டிங் செய்து வருகின்றனர்.

என் #தாய் என்னை பத்து மாதம் #சுமந்தாள்
#தாயை_போல_தலஎன்பதால் #ஆயுள்_முழுக்க
என் #அண்ணனை_நான்_சுமக்கின்றேன்என்றும்
#விஸ்வாசமாக_தல_பிரகாஷ்❤️ https://t.co/EVlFUTHZbk

Ajith’s die hard fan commits suicide

Ajith fan prakash (2)

More Articles
Follows