தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்தியா நாடெங்கிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எனவே 18+ வயதுடைய அனைவரும் தடுப்பூசி போட அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் குழந்தைகளுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏன் ஏற்றுமதி செய்தீர்கள்? என பிரதமர் மோடியை விமர்சிக்கும் வகையில், டெல்லியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
பல காவல் நிலையங்களில் இது தொடர்பாக புகார் செய்யப்பட்டன.
அந்த போஸ்டர்களை ஒட்டிய 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து #ArrestMetoo “என்னையும் கைது செய்யுங்கள்” என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த் ராகுல் காந்தி ட்வீட் செய்திருந்தார்.
இந்த நிலையில் நடிகை ஓவியாவும் “பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்ததை கண்டித்துள்ளார்.
இது ஜனநாயகமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
#ArrestMetoo என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
Arrest me too tweets Rahul Gandhi and Oviya after arrests over posters