தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம நிறுவனம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
எனவே இதன் பவளவிழா ஆண்டு கொண்டாடப்படுகிறது. மேலும் காந்தி கிராம பல்கலைக் கழகத்தில் 36-வது பட்டமளிப்பு விழாவும் இன்று நடைபெற்றது.
இந்த இருவிழாக்களிலும் பாரத பிரதமர் மோடி கலந்துக் கொண்டார்.
இந்த நிகழ்வில் பங்கேற்க பெங்களூருவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்து அதன்பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கலுக்கு வருகை தந்தார் பிரதமர்.
அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றனர்.
அப்போழுது பிரதமரை வரவேற்ற ஸ்டாலின் பொன்னியின் செல்வன் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பரிசளித்தார்.
இன்றைய விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு காந்தி கிராம பல்கலைகழகத்தின் கௌரவ டாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி வழங்கினார்.
Stalin gift modi ponniyin selvan books and ilaiyaraaja receives honor doctor from PM