ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கும் பாஜக & என்.ஆர்.காங்..; முன்னாள் முதல்வர் கண்டனம்

ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கும் பாஜக & என்.ஆர்.காங்..; முன்னாள் முதல்வர் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New-Project-2020-08-21T204924.353புதுச்சேரியில் பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி இருக்கிறார்கள் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சனம் செய்துள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இன்னும் பதவியேற்க முடியாத ஒரு பரிதாப நிலையை பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் ஏற்படுத்தி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி இருக்கிறார்கள் என்று புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.

இது குறித்து நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்…

‘‘மத்திய அரசு தடுப்பூசி கொள்முதல் கொள்கையில் பல குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. நாட்டு மக்கள் தடுப்பூசி இல்லாமல் அவதிப்படுகின்ற நேரத்தில் பல நாடுகளுக்கு 6 கோடி தடுப்பூசிகளை மோடி அரசு அனுப்பியது.

இது நாட்டு மக்களை வஞ்சிக்கின்ற செயலாகும். தடுப்பூசி தயாரிக்க தேவையான நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை.

இந்தியாவில் இதுவரை 21.31 கோடி பேருக்கு தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஆனால், 130 கோடி பேருக்கு தடுப்பூசி போட வேண்டும். இதே நிலையில் சென்றால் தடுப்பூசி போட 3 ஆண்டுகள் ஆகும். அதற்குள் பல கோடி மக்கள் உயிரிழந்து விடுவார்கள்.

ரஷ்யாவில் இருந்து ஸ்புட்னிக் தடுப்பூசி இறக்குமதி செய்யப்படுகிறது. வெளிநாட்டு நிறுவனங்களும் தடுப்பூசி தர தயாராக உள்ளன. இந்த சூழ்நிலையில் மத்திய அரசு தன்னுடைய குழப்பமான முடிவால் மக்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தடைப்பட்டுள்ளது.

எனவே, சோனியா, ராகுல் காந்தி ஆகியோர் மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போட்டு காப்பாற்ற வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று எங்களுக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் நாங்கள் ஆளுநரை காணொளி காட்சி மூலம் சந்தித்து மனுவை அளித்தோம். அந்த மனுவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பதாக அவரும் கூறியுள்ளார் என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கொரோனா தாக்கம் குறைந்துவிட்டது என்று மக்கள் மெத்தனமாக இருக்க வேண்டாம். வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்லுங்கள். தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள்.

இப்போது 3வது அலை வர தயாராக உள்ளது. இதில் 4 வயது முதல் 17 வயது பிள்ளைகள் வரை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞான வல்லுநர்கள் கூறுகிறார்கள். நாம் அதற்கும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

குழந்தைகளை தாக்கினால் அவர்கள் விரைவில் உயிரிழந்து விடுவார்கள். எனவே குழந்தைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை அனைத்து மாநிலங்களும் எடுக்க வேண்டும். குறிப்பாக புதுச்சேரியில் அதற்கான கட்டமைப்பை உருவாக்கி வைக்க வேண்டும் என நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

13 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரியில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது மிகவும் எளிதான விஷயம். புதுச்சேரியை கொரோனா இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு தேவைப்படுகின்ற தடுப்பூசிகளை தர வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இதற்கு பிரதமர் செவிசாய்ப்பார் என்று நம்பிக்கை உள்ளது.

முதல்வர் ரங்கசாமி அறிவித்த கொரோனா நிவாரணம் ரூ.3 ஆயிரத்தை உடனடியாக கொடுக்க வேண்டும்.

புதுச்சேரியில் இன்னும் அமைச்சரவை அமைக்க முடியவில்லை. பல கட்ட பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களது அரசியல் கட்சி விவகாரம். அதை பற்றி நான் விமர்சிக்க விரும்பவில்லை.

ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு இன்னும் பதவியேற்க முடியாத ஒரு பரிதாப நிலையை பாஜக-என்.ஆர். காங்கிரஸ் புதுச்சேரியில் ஏற்படுத்தியுள்ளது என்பது வேதனையை தருகிறது.

ஜனநாயகத்தை இவர்கள் கேலிக் கூத்தாக்கி இருக்கிறார்கள் என நாராயணசாமி தெரிவித்துள்ளார்..

Ex pondy CM Narayanasamy slams BJP & NR Congress

உங்களுக்குன்னா ரத்தம்.. அடுத்தவங்களுக்குன்னா தக்காளி சட்னியா தனுஷ்.? நீங்க ஏன் இதை செய்யல..?

உங்களுக்குன்னா ரத்தம்.. அடுத்தவங்களுக்குன்னா தக்காளி சட்னியா தனுஷ்.? நீங்க ஏன் இதை செய்யல..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’.

இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் (சசிகாந்த்) தயாரித்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தை திரையரங்கில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர்.

இயக்குனர் கார்த்தி்க்கும் நடிகர் தனுஷூம் தியேட்டர் வெளியீட்டையே எதிர்பார்ப்பதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தனர்.

ஆனால் கொரோனா ஊரடங்கால் இத்திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியது. ஆனால் தயாரிப்பாளர் தன் முடிவில் உறுதியாக இருந்தார். முதலீடு செய்தவர் அவராச்சே..

அதன்படி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 18-ம் தேதி ரிலீசாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரை ஜூன் 1-ம் தேதி காலை 10 மணிக்கு யூடிப்பில் வெளியானது.

இந்த டிரைலரை வெளியிட்ட தனுஷ் தன் ட்விட்டரில்..

“சிறப்பான திரை அனுபவமாக இருக்க வேண்டியது நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

இருந்தாலும் ஜகமே தந்திரத்தையும், சுருளியையும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்’ என் ட்வீட் செய்து இருந்தார்.

இவ்வாறாக ஓடிடி தள ரிலீசில் தனக்கு விருப்பமில்லை. ஜகமே தந்திரம் படம் தியேட்டர்களில் கொண்டாடப்பட வேண்டிய படம் என்பதை மறைமுகமாக தந்திரமாக தெரிவித்து இருந்தார் தனுஷ்.

பொதுவாக தனுஷ் எப்போதும் ட்விட்டரில் ஆக்டிவ்வாக இருப்பவர். ஆனால் ‘ஜகமே தந்திரம்’ பட தகவல்களை பதிவிடுவதில் தனுஷ் ஆர்வம் காட்டவில்லை.

அதற்கு காரணம் தயாரிப்பாளரின் ஓடிடி முடிவுதான். தனுஷும் ஒரு தயாரிப்பாளர் தானே. அவர் அடுத்த தயாரிப்பாளரின் வலியை புரிந்து கொள்ளவில்லையே.

தற்போது கொரோனா ஊரடங்கு இல்லை என்றால் நிச்சயம் ‘ஜகமே தந்திரம்’ படத்தை தியேட்டர்களில் தான் ரிலீஸ் செய்திருப்பார் தயாரிப்பாளர்.

படம் ரிலீசுக்கு ரெடியாகி பல மாதங்கள் ஆகிவிட்டதாலும் தயாரிப்பு செலவு வட்டி ஏறிவிட்டதாலும் வேறு வழியில்லாமல் நெட்பிளிக்ஸ் ஓடிடிக்கு படத்தை விற்றுள்ளார்.

ஆனால் ஆரம்பம் முதலே ‘ஜகமே தந்திரம்,’ தயாரிப்பாளரை தனுஷ் மறைமுகமாக சாடி வந்துள்ளார்.

எந்தவொரு தயாரிப்பாளரும் தன் படத்தின் லாபத்தை தான் பார்ப்பார்கள்.

தனுஷ் நினைத்திருந்தால் ‘ஜகமே தந்திரம்’ படத்தை நல்ல விலைக்கு வாங்கி தியேட்டர்கள் திறக்கும் வரை காத்திருந்து ரிலீஸ் செய்திருக்கலாமே.

தனக்காகவும் தன் ரசிகர்களுக்காக தனுஷ் இதை கூட செய்ய மாட்டாரா..?

தனக்கு வந்தா ரத்தம்.. அடுத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா தனுஷ்..?

Actor Dhanush double standard on Jagame Thanthiram release

தனுஷ் படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜின் அடுத்த பட அப்டேட்

தனுஷ் படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜின் அடுத்த பட அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள தனுஷின் ப’ஜகமே தந்திரம்’ படம் ஜூன் 18ல் ஓடிடி தளத்தில் ரிலீசாகிறது.

ஒரு பக்கம் பிஸியாக இயக்குனராக இருந்தாலும் அவ்வப்போது படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறார் கார்த்திக் சுப்பராஜ்.

இவரின் ஸ்டோன் பென்ச் கிரியேஷன் சார்பாக அவியல், மேயாதமான், பெண்குயின் ஆகிய படங்களை தயாரித்தும் உள்ளார்

இந்த நிலையில் தற்போது கன்னடத்தில் தயாரான 777 சார்லி படத்தை தமிழில் தனது ஸ்டோன் பென்ச் கிரியேஷன் சார்பாக வெளியிடுகிறார்
கார்த்திக் சுப்பராஜ்.

777 சார்லி படத்தில் ரக்ஷித் ஷெட்டி நடிக்க, கிரண்ராஜ் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் நாயகன் ரக்ஷித் ஷெட்டியுடன் இணைந்து ஜிஎஸ்.குப்தா என்பவர் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படமானது ஒரு இளைஞனுக்கும், அவனது நாய்க்கும் இடையில் நடைபெறும் ஓர் அழகான பாசத்தை சொல்லும் கதை.

ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இப்பட மலையாள பதிப்பை நடிகர் பிருத்விராஜ் வெளியிடுகிறார்.

Karthik Subbaraj to release Charlie 777 movie in Tamil

E3A_HEhVIAArFvH

என் நேரத்தையும் எனர்ஜியையும் வீணாக்க விரும்பல.; டூப்ளிகேட்யர்களை கிழி கிழிவென கிழித்த ராதிகா

என் நேரத்தையும் எனர்ஜியையும் வீணாக்க விரும்பல.; டூப்ளிகேட்யர்களை கிழி கிழிவென கிழித்த ராதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

radhika sarathkumarஇந்திய பிரபலங்கள் பலரும் பயன்படுத்தும்
சமூகவலைத்தளங்களில் முக்கியமானது ட்விட்டர்.

ட்விட்டரில் பிரபலங்கள் பெயரில் நிறைய போலிகள் உருவாகி வருவதால் முக்கிய பிரமுகர்களுக்கு ப்ளூ டிக் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் டுவிட்டர் தளம் பற்றிய தனது அதிருப்தியை கோபமாக வெளியிட்டுள்ளார்.

“சில நேரங்களில் சில மூளையில்லாத, வேலையில்லாத டுவீட்களைப் பற்றி நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த உலகத்தை நாம்தான் காக்கிறோம் என்ற எண்ணம் கொண்டவர்கள் பலர் இப்போது நிறைய இருக்கிறார்கள்.

இன்டர்நெட்டில் நீங்கள் எப்படி இருக்க நினைக்கிறீர்களோ அப்படி இருக்கலாம். முட்டாள்தனமான பலவற்றைப் பார்க்கிறேன்.

எனது நேரத்தையும், சக்தியையும் இனிமேல் வீணாக்க விரும்பவில்லை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Sometimes we should be aware that some brainless and jobless twit, who thinks they are the saviours of this world are present. On the Internet u can be anything u want, I see a lot choose stupid.. Dont want to waste my time or energy anymore..

Actress Radika Sarathkumar reply to her haters

இந்திய துணை ஜனாதிபதிக்கே இந்த நிலைமையா.? ப்ளூ டிக்கை நீக்கி விட்டு விளக்கம் தந்த ட்விட்டர்.; மீண்டும் Verified !

இந்திய துணை ஜனாதிபதிக்கே இந்த நிலைமையா.? ப்ளூ டிக்கை நீக்கி விட்டு விளக்கம் தந்த ட்விட்டர்.; மீண்டும் Verified !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Venkaiah Naiduஇந்திய பிரபலங்கள் பலரும் பயன்படுத்தும்
சமூகவலைத்தளங்களில் முக்கியமானது ட்விட்டர்.

ட்விட்டரில் பிரபலங்கள் பெயரில் நிறைய போலிகள் உருவாகி வருவதால் முக்கிய பிரமுகர்களுக்கு ப்ளூ டிக் வழங்கப்பஎட்டு வருகிறது.

ஒரு ப்ளூ டிக் வழங்கும் முறையில் நிறைய புகார்கள் வந்தன.

எனவே புளூ டிக் வழங்கும் முறையை கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருந்தது டுவிட்டர் நிறுவனம்.

தற்போது மீண்டும் ப்ளூ டிக் வழங்கும் முறையை தொடர்ந்துள்ளது.

துணை குடியரசுத்்தலைவர் வெங்கையா நாயுடு் ட்விட்டரில் Official and Personal என. இரண்டு அக்கௌண்ட் வைத்துள்ளார்.

அவரின் இரண்டு அக்கௌண்ட்டுக்கும் நீல நிற டிக் ஏற்கனவயவே வழங்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், இன்று காலை அந்த ப்ளூ டிக்கை அவரின் பெர்சனல் அக்கௌண்டில ட்விட்டர் நிறுவனம் நீக்கியது.

இதனால் இந்திய மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தரனர். துணை ஜனாதிபதிக்கே இந்த நிலைமையா? #BanTwitterInIndia என ட்ரெண்ட் செய்தனர்.

இந்த ட்விட்டர் கணக்கு, இறுதியாக கடந்த வருடம் 2020 ஜூலை மாதம், 23-ஆம் தேதி பயன்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த பல மாதங்களாக வெங்கையா நாயுடுவின், கணக்கு பயன்படுத்தப்படவில்லை.

எனவே நீல நிற டிக்கை திரும்ப பெற்றதாக கூறியது ட்விட்டர் நிறுவனம்.

தற்போது இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இந்நிறுவனம் புளூ டிக்கை மீண்டும் வழங்கியுள்ளது.

Twitter removed #blueTick from Vice President of India #VenkaiahNaidu account

‘என்னு நிண்டே மொய்தீன்’ பட இயக்குனருடன் இணைந்த இசையமைப்பாளர் கே.பி.

‘என்னு நிண்டே மொய்தீன்’ பட இயக்குனருடன் இணைந்த இசையமைப்பாளர் கே.பி.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

music director KBஇசை இயக்குனர் கே.பி. அவர்களின் இசையமைப்பில் வெளியான ஆல்பம் தற்போது மொழியியல் தடைகளை தாண்டி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது.

கலைப்புலி எஸ்.தாணு வி கிரியேஷன்ஸ், ரைஸ் ஈஸ்ட் கிரியேஷன்ஸ் மற்றும் பல புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்கள் உடன் இணைந்த உருவாக்கப்பட்ட இந்த ஆல்பம் அவருக்கு பெரும் புகழைப் பெற்று தந்துள்ளன.

எல்லாவற்றிற்கும் மேலாக, அவரது பி.ஜி.எம், அவரின் மற்ற பன்முகப்படுத்தப்பட்ட ஆல்பங்கள் மற்றும் அவரது தனித்துவமான இசை பாணி அவரை இசை பிரியர்களின் விருப்பமான நட்சத்திரமாக மாற்றுகிறது.

இத்தகைய பாராட்டத்தக்க படைப்புகளின் தொடர்ச்சியாக இப்போது அவருக்கு ஒரு மகத்தான வாய்ப்பை ஏற்படுத்தியது தான் ‘சூரியபுத்ரா மகாவீர் கர்ணன்’ திரைப்படம்.

பல மொழிகளில் பெரிய பட்ஜெட்டாக தயாரிக்கப்பட்டு பான்-இந்தியன் திரைப்படம் புகழ்பெற்ற தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜாக்கி பூஜா என்டர்டெயின்மென்ட்டின் ஜாக்கி பகானி என்பவரால் தயாரிக்கப்பட உள்ளது.

பிரபல இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்கியுள்ளார்.

(இவர் பிருத்விராஜ் மற்றும் பார்வதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ‘என்னு நிண்டே மொய்தீன்’ என்ற மலையாள திரைப்படத்தை இயக்கியுள்ளார்).

மேலும் கே.பி மலையாளத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்.

அதே போன்று தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களுக்கும் இசையமைக்கிறார்.

இவை அனைத்தும் பெரிய தயாரிப்பு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு
இயக்கப்படுகின்றன.

Suryaputre Mahavir Karna’s Music Director KP.

More Articles
Follows