தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த ஓரிரு தினங்களில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை அதிகளவில் உயர்ந்துள்ளன.
வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ 50 உயர்ந்துள்ளது. 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தது. பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 80 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது..
‛மாநில சட்டசபை தேர்தல்கள் முடிந்தன. இதோ பசுத்தோல் உதிர்ந்துவிட்டது.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு தொடங்கிவிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பார்கள். ஆனால் அது கீழே இறங்கியபோதும் விலையைக் குறைக்கவில்லை இவர்கள்.
அதில் சேர்த்த லட்சம் கோடிகளை வைத்து இப்போது சரிக்கட்டலாமே…’
என கமல்ஹாசன் கடுமையாக மத்திய அரசு பாஐக.வை விமர்சித்துள்ளார்.
5 மாநில சட்டமன்ற தேர்தலுக்காக தான் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
Kamal Haasan criticises increase in prices of fuel and LPG