மார்ச் 16 முதல் சினிமா சூட்டிங்கும் நடத்தக்கூடாது; விஷால் உத்தரவு

மார்ச் 16 முதல் சினிமா சூட்டிங்கும் நடத்தக்கூடாது; விஷால் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishalதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் டிஜிட்டல் நிறுவனங்களை கட்டண குறைப்பு செய்யுமாறு வலியுறுத்தி மார்ச் 1 முதல் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் செய்வதை நிறுத்தி வைத்துள்ளனர்.

இதனால் கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் எந்த படங்களும் வெளியாகவில்லை.

ஏற்கெனவே திரையரங்குகள் வெறிச்சோடிக் காணக் கிடக்கின்றன.

புதிய படங்கள் ரிலீஸ் ஆகாததால் ஹிட்டான பழைய படங்களை சில தியேட்டர்களில் திரையிட்டு வருகின்றனர்.

கடந்த ஒரு வார காலத்தில் திரையரங்குகளுக்கு சுமார் 12 முதல்15 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த முடிவுக்கு ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை என்ற வகையில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் செயல் பட்டு வந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் சென்னையில் நடந்தது.

இதில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 16-ந்தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளை மூடி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தார்கள்.

இந்நிலையில், வரும் 16-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்பு ரத்து செய்யப்படும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்துள்ளார்.

இதன்படி அனைத்து படங்களின் படப்பிடிப்பும் வருகிற 16-ம் தேதி முதல் ரத்து செய்யப்பட உள்ளது.

இப்படி அடுத்தடுத்து வந்த அறிவிப்புகளால் திரையுலகம் முழுவதும் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கமல்-அஜித்-சூர்யா… கவுதம்மேனனின் அடுத்த பட ஹீரோ யார்..?

கமல்-அஜித்-சூர்யா… கவுதம்மேனனின் அடுத்த பட ஹீரோ யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Gautham Menonகௌதம் மேனன் இயக்கத்தில்் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா, விக்ரமின் துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.
இதனையடுத்து அவர் தான் இயக்கி ஹிட்டாக்கிய ஒரு படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்கவிருக்கிறாராம்.
அந்த பட்டியலில் தற்போது 3 படங்கள் உள்ளது.

1. கமல் நடித்த வேட்டையாடு விளையாடு

2. சூர்யா நடித்த காக்க காக்க

3. அஜித் நடித்த என்னை அறிந்தால்

இதில் எந்த நாயகன் முதலில் ஓகே சொல்கிறாரோ அவர் படத்தை இயக்குவாராம் கௌதம்மேன்ன்.

அனேகமாக அவர் சூர்யாவாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஜோதிகா இடத்தில் நானா..? ஸாரி முடியாது..; அனுஷ்கா

ஜோதிகா இடத்தில் நானா..? ஸாரி முடியாது..; அனுஷ்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jyothika and anushkaபாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி. பிரகாஷ், இவானா ஆகியோர் நடித்த படம் நாச்சியார்.

இளையராஜா இசையமைத்திருந்த இப்படம் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்றது.

எனவே இதன் தெலுங்கு உரிமையை கல்பனா என்பவர் வாங்கியிருந்தார்.

படத்தின் முக்கிய அம்சமே ஜோதிகாதான் என்பதால் அந்த கேரக்டரில் நடிக்க அனுஷ்காவை அனுகியுள்ளார்.

ஆனால் அவர் புதிய தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதால் 6 மாதத்திற்கு கால்ஷீட் தர முடியாது என கூறிவிட்டாராம்.

இதனால் நாச்சியார் கேரக்டரில் பிரபல நடிகை யாராவது நடிப்பார்கள் என கூறப்படுகிறது.

கருத்துகளை பதிவு செய் படத்தின் பர்ஸ்ட் டைட்டில் லுக்

கருத்துகளை பதிவு செய் படத்தின் பர்ஸ்ட் டைட்டில் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karuthukalai pathivu sei first look posterசர்வ தேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட “கருத்துகளை பதிவு செய்” படத்தின் First Title Look.

இப்படம் Facebook பயன்படுத்தும் எல்லா பெண்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும்.

திரையுலகில் ஒரு பட தயாரிப்பு நிறுவனம் ஆழமாக காலூன்ற வேண்டுமானால் அடுத்தவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

அந்த நம்பிக்கையை பட தயாரிப்பிலும் வினியோகத்துறையிலும் அழுத்தமாக பதிய வைத்த நிறுவனம் RPM cinemas..

ஜித்தன் 2 , 1 AM படங்களை தயாரித்து வெளியிட்ட இந்த நிறுவனம் களத்தூர் கிராமம், 143 ஆகிய வெளியார் படங்களை சொன்ன தேதியில் வெளியிட்டு உள்ளது

இந்த நிறுவனம் அடுத்ததாக ஒரு குறுகிய கால தயாரிப்பாக “ கருத்துக்களை பதிவு செய் ” என்ற படத்தை தயாரிக்கிறது..

இந்த படத்தில் கலையுலகின் லட்சிய நடிகர் என்று போற்றப் பட்ட பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு – மனோகர்

இசை – கணேஷ் ராகவேந்திரா

பாடல்கள் – சொற்கோ

கலை – மனோ

நடனம் – எஸ்.எல்.பாலாஜி

ஸ்டண்ட் – ஆக்‌ஷன் பிரகாஷ்

தயாரிப்பு மேற்பார்வை – D.B.வெங்கடேசன்

கதை திரைக்கதை வசனத்தை எழுதி இருப்பவர் ராஜசேகர். இவர் மிர்ச்சி சிவா நடித்து வெளியான யா யா படத்தை இயக்கியதுடன் விரைவில் வெளி வர உள்ள பாடம் என்ற படத்தை இயக்கி உள்ளார்.

இணை தயாரிப்பு – JSK கோபி

தயாரித்து இயக்குபவர் ராகுல்.

சௌந்தர்யா ரஜினியை டைவர்ஸ் செய்த அஸ்வின் 2வது திருமணம்

சௌந்தர்யா ரஜினியை டைவர்ஸ் செய்த அஸ்வின் 2வது திருமணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ashwin ram kumarசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2வது மகள் சௌந்தர்யா.

இவர் ரஜினி நடித்த கோச்சடையான் படத்தை இயக்கியிருந்தார்.

இவருக்கு தொழிலதிபர் அஸ்வின் என்பவரை கடந்த 2010ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு வேத் என்ற ஒரு மகன் இருக்கிறார்.

இதனிடையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017ல் சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றார்.

இந்நிலையில் சௌந்தர்யாவை விவாகரத்து செய்த அஸ்வின் அண்மையில் 2வது திருமணம் செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

அந்த போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அஸ்வினை திருமணம் செய்துக் கொண்ட பெண் யார்? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.

இதோடு நிறுத்திக்குங்க இல்லேன்னா போலீஸ்தான்.. காயத்ரிரகுராம் வார்னிங்

இதோடு நிறுத்திக்குங்க இல்லேன்னா போலீஸ்தான்.. காயத்ரிரகுராம் வார்னிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gayathri raghuramநடிகை, நடன இயக்குனர் என்ற வலம் வந்த காயத்ரி ரகுராம் யாதுமாகி நின்றாய் என்ற படத்தை இயக்கினார்.

இப்படம் இதுவரை வெளியாகவில்லை. இதனிடையில் கமல் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு படு பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரின் எதிர்ப்புக்கு ஆளாகியிருந்தார் என்பது வேறுகதை.

இவர் சமூக வலைதளங்களில் என்ன பதிவு செய்தாலும் அதனை விமர்சித்து ரசிகர்கள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி வருகின்றனர்.

இதனால் கடுப்பான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில்… சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்வது, கெட்ட வார்த்தை பயன்படுத்துவது போன்ற விஷயங்கள் இன்றே முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

இல்லைஎன்றால் நான் சைபர் கிரைமில் புகார் அளித்து உங்களை கண்டுபிடிப்பேன். என்னையோ, ஜுலியை அல்லது யாரை கிண்டல் செய்தாலும் சரி என்று ஆவேசமாக பதிவு செய்துள்ளார்.

Gayathri Raguramm‏ @gayathriraguram

Cyber bullying and bad words have to end on social media today or I will give complaints to cyber crime and will find u. Will punish the person and I swear I will do it wether it is hired company or a individual. Wether it’s me or Julie or any one.

More Articles
Follows