தீபாவளிக்கு சிம்பு தனுஷ் சிவகார்த்திகேயன் ட்ரீட்..; ‘மாஸ்டர்’ மௌனம் கலைப்பாரா?

தீபாவளிக்கு சிம்பு தனுஷ் சிவகார்த்திகேயன் ட்ரீட்..; ‘மாஸ்டர்’ மௌனம் கலைப்பாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay dhanush simbu sivakarthikeyanஇந்தாண்டு 2020ஐ உலக மக்கள் எவரும் மறக்க மாட்டார்கள்.

எத்தனையே பேரழிவுகளை நாம் இதற்கு முன்பு பார்த்திருந்தாலும் இதுபோல முடக்கத்தை மக்கள் எவருமே எதிர்பார்க்கவில்லை.

கிட்டத்தட்ட 1 வருடத்தை கொரோனா வைரஸ் முடக்கியுள்ளது.

இதிலிருந்து மக்கள் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பாவிட்டாலும் சில தளர்வுகளுடன் வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.

நாளை நவம்பர் 10 முதல் சினிமா தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

சமூக இடைவெளியுடன் 50% பார்வையாளர்களை மட்டுமே தியேட்டரில் அனுமதியளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் தீபாவளிக்கு படங்களை திரையிட தயாரிப்பாளர்கள் முன்வரவில்லை.

எனவே தீபாவளிக்கு புதுப்படங்களை காண முடியாத ஏக்கத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் தீபாவளிக்கு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம், சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன், நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் ஆகிய படங்களின் டீசரை வெளியிடவுள்ளதாக அந்தந்த படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இவையில்லாமல் இன்னும் ஒரு சில படங்கள் டீசர் அல்லது ட்ரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.

விஜய் நடித்துள்ள மாஸ்டர் பட டீசர் வெளியாகும் எனவும் சில தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

இவையில்லாமல் சூர்யா நடித்துள்ள சூர்ரைப் போற்று (நவம்பர் 12) மற்றும் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் (நவம்பர் 14 தீபாவளியன்று) ஆகிய படங்கள் ஆன்லைன் ஓடிடி தளத்தில் வெளியாகின்றன.

top celebrities movie teaser to release on diwali

நவ.10ல் தியேட்டர்கள் திறப்பு.; KKK-OMK ரீ-ரிலீஸ்.. தீபாவளி ரிலீஸ் இல்லை

நவ.10ல் தியேட்டர்கள் திறப்பு.; KKK-OMK ரீ-ரிலீஸ்.. தீபாவளி ரிலீஸ் இல்லை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

OMK and KKKகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு நாடெங்கிலும் பிறப்பிக்கப்பட்டது.

இதன் காரணமாக கடந்த 8 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு கிடந்தன.

மற்ற வணிகங்களுக்கு தளர்வுகளுடன் அனுமதியத்த தமிழக அரசு தியேட்டர்கள் திறக்க அனுமதியளிக்கவில்லை.

இதனையடுத்து ஒரு வழியாக நாளை நவம்பர் 10ந் தேத முதல் தியேட்டர்களை திறந்துக் கொள்ளலாம் என அனுமதியளித்துவிட்டது.

ஆனாலும் தியேட்டர்களில் புதுப்படங்களை திரையிடுவதற்கான விபிஎப் கட்டணத்தை இனி தியேட்டர் அதிபர்களே கட்ட வேண்டும் என தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இல்லாவிட்டால் புதிய படங்களை திரையிட மாட்டோம் எனவும் மறைமுக எச்சரிக்கை விடுத்தனர்.

இரு தரப்புக்கும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும் தீர்வு ஏற்படவில்லை.

இதனையடுத்து உங்கள் பிரச்சினையை பின்னர் வைத்துக் கொள்ளுங்கள். நாளை தியேட்டர்களை திறக்க வேண்டும் என அமைச்சர் தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து நாளை முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்படுகிறது.

ஆனால் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஏற்கெனவே ஹிட்டான ஓ மை கடவுளே, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட ஹிட் படங்கள் ரி ரிலீஸ் ஆகின்றன.

மேலும் ரஜினி, கமல், விஜய், அஜீத் உள்ளிட்ட டாப் ஹீரோக்களின் படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

KKK and OMK to re release in this diwali

அஜித் என்னை க்யூட் மாஸ்டர் என்றே அழைப்பார்.. – ‘பைட் மாஸ்டர்’ விக்கி

அஜித் என்னை க்யூட் மாஸ்டர் என்றே அழைப்பார்.. – ‘பைட் மாஸ்டர்’ விக்கி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Stunt master Vicky with Ajithதமிழ் சினிமாவில் சண்டைக் காட்சிகள் என்பது தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு காலகட்டங்களிலும் அதற்கேற்றார் போல் இருக்கும் சண்டைக் காட்சிகளும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வருகிறது. குறிப்பாக தமிழ் சினிமாவில் சண்டை காட்சிகளில் ஸ்டண்ட் மாஸ்டர்களின் பங்கு அதிக அளவில் உள்ளது. இங்கு இருப்பவர்கள் பல மொழி படங்களில் பணியாற்றி வருகிறார்கள்.

அதற்கு படத்தின் யதார்த்தத்தை மீறாமல் இருப்பதே முக்கிய காரணம். அந்த வகையில் 2016ல் வெளியான “உரியடி” படத்தில் இடம் பெற்ற சண்டைக்காட்சிகள் மிகவும் பிரபலமானது. குறிப்பாக அந்தப் படத்தில் தாபாவில் நடக்கும் சண்டைக்காட்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சண்டைக் காட்சியை யதார்த்தமாகவும் தத்துரூபமாகவும் வடிவமைத்த ஸ்டண்ட் மாஸ்டர் விக்கிக்கு நிறைய பாராட்டுகள் குவிந்தன.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வீரம் படத்தில் இடம் பெற்ற அஜித்-அதுல் குல்கர்னி க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சியை விக்கி அமைத்தார். இப்படத்தின் சண்டைக் காட்சியும் அதிக அளவில் பேசப்பட்டது.

இப்படத்தில் பயணித்த அனுபவம் பற்றி விக்கி கூறும்போது, நான் உரியடி படத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது, இயக்குனர் சிவா சார் தரப்பில் இருந்து அழைப்பு வந்தது. சிவா சாரை சந்தித்தபோது வீரம் படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை அமைத்து தரும்படி கேட்டார். இரண்டாவதே அஜித் சார் படம் என்றவுடன் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அடைந்தது. உடனே ஓகே சொல்லி மறுநாள் படப்பிடிப்புக்கு சென்றேன்.

அஜித் சாரை பார்த்தவுடன் புத்துணர்ச்சியும், தயக்கமும் ஏற்பட்டது. ஆனால் அவரோ என்னிடம் வந்து பேசி என்னுடைய தயக்கத்தைப் போக்கினார். அமராவதி படத்தில் இருந்த அதே அஜித் தான் தற்போதும். என்னிடம் எப்படி வேண்டுமானாலும் வேலை வாங்கலாம் என்று அவர் கூறினார். என்னுடைய தயக்கத்தைப் போக்கி சண்டைக்காட்சி அமைத்துக் கொடுத்தேன். சண்டைக் காட்சிக்கு மிகவும் ஒத்துழைப்பு தந்த அஜித் சார், என்னை க்யூட் மாஸ்டர் என்று சொல்லிவிட்டுச் சென்றார். எனக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது.

வீரம் படத்தை அடுத்து, உரியடி 2, அருவி, ஜோக்கர், மாயவன், சிலுக்குவார்பட்டி சிங்கம், விழித்திரு, அண்ணனுக்கு ஜே, ராட்சசன், வால்டர், சத்ரு போன்ற படங்களுக்கும், இதைத்தவிர பரத் நடிக்கும் நடுவண், அதர்வா நடிக்கும் குருதி ஆட்டம் படத்திலும் பணியாற்றியிருக்கிறேன்.

தற்போது சூர்யா நடித்து வெளியாக இருக்கும் சூரரைப்போற்று படத்தில் சண்டைக்காட்சிகள் அமைத்து இருக்கிறேன். இப்படம் நவம்பர் 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

சண்டைக்காட்சிகள் அமைப்பது குறித்து விக்கி மேலும் கூறும்போது, நான் ஒவ்வோரு சண்டைக்காட்சி யையும் ஸ்டோரி போர்டு போட்டுதான் வேலை செய்வேன். அதுபோல் எந்த ஒரு சண்டைக் காட்சியை உருவாக்கும் போதும், ரிகர்சல் செய்து இப்படித்தான் திரையில் வரும் என்று இயக்குநருடன் காண்பிப்பேன். அது இயக்குனருக்கு பிடித்துப்போகவே சண்டைக் காட்சியை உருவாக்குவேன். இதுவே என்னுடைய மிகப்பெரிய பிளஸ் என்றார்.

சண்டை இயக்குனர் விக்கி தமிழ் மொழி மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், மராத்தி போன்ற பல மொழிப் படங்களிலும் பணியாற்றி வருகிறார். இப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

Stunt master Vicky shared his working experience with Thala Ajith

நன்றி கெட்ட விஜய்..; எஸ்ஏசி-க்கு ஆதரவாக களமிறங்கிய அஜித் ரசிகர்கள்

நன்றி கெட்ட விஜய்..; எஸ்ஏசி-க்கு ஆதரவாக களமிறங்கிய அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sacஓரிரு தினங்களுக்கு முன் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை அரசியல் கட்சியாக பதிவு தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர்.

ஆனால் இந்த கட்சிக்கும் எனக்கும் எந்த விதமாக தொடர்பும் இல்லை என விஜய் அறிவித்தார். அதற்கு அடுத்த நாளே விஜய்யின் அம்மாவும் கட்சி பொறுப்பில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்தார்.

இதனையடுத்து விஜய் ரசிகர்களே விஜய்யின் தந்தையும் கடுமையாக சாடினர்.

விஜய்க்கு கெட்ட பெயருரை ஏற்படுத்தி வருகிறார் என திட்ட தொடங்கினர்.

விஜய்யை சினிமாவில் அறிமுகப்படுத்தி அவரை படிப்படியாக வளர்த்துவிட்டது அவரது அப்பா என்பதை மறந்து இப்படி பேசுவது மற்ற நடிகர்களின் ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.

சினிமாவில் எத்தனையோ வாரிசு நடிகர்கள் வந்தாலும், யாருமே எட்டாத உயரத்தை விஜய் அடைந்துள்ளர்.

அதற்கு முழு காரணமே எஸ்ஏ சந்திரசேகர்தான்.

அப்படியான நிலையில் விஜய்யும் அவரது ரசிகர்களும் இப்படி எதிரி போல செயல்படுவதால் ”#SACexposesVijayMafia, #நன்றிகெட்டவிஜய்” என்ற ஹேஷ்டாக்கை டிரெண்ட் செய்ய தொடங்கினர் அஜித் ரசிகர்கள்.

பதிலுக்கு விஜய் ரசிகர்கள் ”#நன்றிகெட்ட_நாய்_அஜித்” என்ற ஹேஷ்டாக்கை உருவாக்கி டிரெண்ட்டிங் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

Ajith fans support Vijay father SAC

மலையாள சினிமாவில் விஜய்சேதுபதி ஆர்வம்.; மெர்சல் நாயகியுடன் ஜோடி!

மலையாள சினிமாவில் விஜய்சேதுபதி ஆர்வம்.; மெர்சல் நாயகியுடன் ஜோடி!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathiஎந்த மாநிலம் எந்த மொழி என்றாலும் கலைஞர்களுக்கு பேதம் கிடையாது என்பதை சரியாக புரிந்து வைத்துள்ளார் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.

தமிழில் பல படங்கள் வரிசை கட்டி நின்றாலும் தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களிலும் நடிக்க தனி ஆர்வம் காட்டி வருகிறார்.

கடந்த வருடம் மார்க்கோனி மத்தாய் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார்.

தற்போது மீண்டும் மற்றொரு மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

19(1)(a) என்ற பட சூட்டிங்கில் கலந்துக் கொண்டுள்ளார்.

நித்யா மேனன் இப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

சைக்கோ, 24. மெர்சல், ஓகே கண்மணி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் நித்யா மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய விருது பெற்ற படங்களான ‘ஆதாமிண்ட மகன் அபு’, ‘பத்தேமாறி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சலீம் அஹமதுவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த இந்து வி.எஸ் என்பவர் தான் இந்தப்படத்தை இயக்கி வருகிறார்.

Vijay Sethupathi joins sets of Malayalam film

2000 ஏக்கரில் உலகத்தரமிக்க திரைப்பட நகரம் அமைக்க முதல்வர் திட்டம்

2000 ஏக்கரில் உலகத்தரமிக்க திரைப்பட நகரம் அமைக்க முதல்வர் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

film cityஅண்மையில் பெய்த கடும் மழை பாதிப்புள்ளாக்கியது ஹைதராபாத் நகரம்.

இதனையடுத்து தெலங்கான முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்து வெள்ள நிவாரண நிதியாக ரூ. 1 கோடி வழங்கினார் சிரஞ்சீவி.

அவருடன் சென்ற நடிகர் நாகார்ஜுனாவும் தன் சார்பில் ரூ. 50 லட்சம் வழங்கினார்.

அப்போது ஹைதராபாத்தில் பிரம்மாண்ட திரைப்பட நகரம் அமைக்க ஆலோசனை செய்துள்ளார் முதல்வர்.

தெலங்கானா அரசு சார்பில் 2000 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த திரைப்பட நகரம் ஒன்றை அமைக்கும் எண்ணம் உள்ளதாக முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

பல்கேரியா நாட்டில் உள்ள ஸ்டூடியோக்களை போல் இந்த நகரை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

ஹைதராபாத்தில் ஏற்கெனவே 1600 ஏக்கர் பரப்பில் ராமோஜி பிலிம் சிட்டி 25 வருடங்களாக செயல்பட்டு வருவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ரஜினி, அஜித் உள்ளிட்ட டாப் ஹீரோக்களின் படங்கள் ராமோஜி பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டு வருவதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Another film city to come up near Hyderabad soon – Chandrasekar Rao

More Articles
Follows