தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னை, புதுவண்ணாரப்பேட்டை அன்னை இந்திராகாந்தி நகரைச் சேர்ந்தவர் தயாநிதி. இவர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது காவல்துறையில் புகார் மனுவொன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது…
நான் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி பல இடங்களில் அலைந்தேன். அப்போது நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அவரிடம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்று தருமாறு கேட்டேன். அதற்கு அவர் வாய்ப்பு பெற்று தருவதாக உறுதியளித்தார்.
மேலும் அவரை நம்பி ரூ. 4.16 லட்சம் கொடுத்தேன். ஆனால், அவர் இதுவரை எனக்கு சினிமா வாய்ப்பு பெற்றுத் தரவில்லை.
அவரை நேரில் பார்க்கச் சென்றால் பார்க்க முடிவதில்லை. என்னிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அவர் மோசடி செய்துவிட்டார்.
எனவே இதுகுறித்து போலீசார் விசாரித்து பவர் ஸ்டார் சீனிவாசனிடமிருந்து எனக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுத் தர வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது எப்ஐஆர் / முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
TN police registered FIR for cash scam filed against actor Power Star Srinivasan