தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை அமைச்சர் செல்லூர் ராஜு குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, கமல் மற்றும் ரஜினி ஆகியோரின் அரசியல் பிரவேசம் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.
நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் ஆனால் மக்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கை இருக்க வேண்டும்.
எம்.ஜி.ஆரை போல அரசியலுக்கு வந்த நடிகர்கள் சிவாஜி, பாக்யராஜ், டி.ராஜேந்தர் ஆகியோரின் நிலைமைமைய ரஜினி, கமல் ஆகியோர் அறியாதவர்கள் அல்ல.
சீன மற்றும் பாகிஸ்தான் இந்தியா மீது போர் தொடுத்தபோது, தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் எம்ஜிஆர் நிதியாக கொடுத்தார்.
ஆனால் ரஜினி, கமல் இருவரும் மக்களுக்கு என்ன நன்மை சொல்லியிருக்கிறார்கள். என்ன செய்திருக்கிறார்கள்” என்று கூறினார்.
TN minister Sellur Raju advice to Rajini and Kamal