தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் ராமர் முதல் பெரியார் வரை ரஜினிகாந்த் பேசியிருத்தார்.
ரஜினி பேசியதாலோ என்னவோ உடனே மிகவும் பரபரப்பாகி அதுவே சர்ச்சையானது.
அவரின் கருத்துக்கு பெரியார் ஆதரவாளர்கள் கண்டன தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். மேலும் காவல்துறையிலும் புகார் அளித்தனர்.
இந்த போராட்டத்தின் போது ரஜினிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் சிலர் பேசியிருந்தனர்.
ரஜினிக்கு எதிரான மனுக்கள் வாபஸ்; திராவிடர் விடுதலை கழகம் பல்டி
இது குறித்த ஆதாரத்துடன் மதுரை மாநகர காவல்துறை ஆணையரிடம் ரஜினி மக்கள் மன்றத்தினர் புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் ரஜினிக்கு பாதுகாப்பு வழங்க ரஜினி ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். கோவை மற்றும் விழுப்புரம் மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகிகளும், அந்தந்த மாவட்ட கமிஷனர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.
ஏற்கெனவே தமிழக அரசு சார்பில் ரஜினி வீட்டிற்கு விசேஷ பாதுகாப்பு அளித்துள்ளது.
ரஜினிக்கு எதிரான போராட்டத்தால், அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஏற்கெனவே உள்துறை அமைச்சகத்திற்கு உளவுத்துறை ரகசிய அறிக்கை அளித்துள்ளதாம்.
TN fans petition for Rajini protection