தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
துக்ளக் 50 ஆண்டு விழாவில் பெரியார் பற்றி ரஜினி பேசியது சர்ச்சையானது.
எனவே அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் கட்சிகள் வலியுறுத்தின.
மேலும் பெரியார் பற்றி அவதூறான கருத்துக்களை ரஜினி பேசியதாகவும், அவர் மீது நவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடவும் கோர்ட் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனு ஐகோர்ட்டில் நீதிபதி ராஜமாணிக்கம் அமர்வு முன்று இன்று விசாரணைக்கு வந்தது. புகார் கொடுத்த 15 நாட்கள் முடிவதற்குள் முன்னதாகவே நீதிமன்றத்தை அணுகியது ஏன்..? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு கால அவகாசம் வழங்கிய பின் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தை தான் மனுதாரர்கள் அணுகி இருக்க வேண்டும் என்று நீதிபதி ராஜமாணிக்கம் கூறினார்.
இந்த மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடபட்டதே தவறு என்று கூறினர். இதனை அடுத்து, மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது.
இதனை தொடர்ந்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.