தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு என்று தனி சங்கம் உள்ளது.
அண்ணாமலை அவர்கள் தலைமையிலான நிர்வாகிகள் அந்த சங்கத்தை நிர்வகித்து வந்தனர்.
புதிய நிர்வாகிகளை தேர்தல் வைத்து தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என நிர்வாகிகள் சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இதற்கு உடன்படாத சில விநியோகஸ்தர்கள் தனியாக பிரிந்து புதிய சங்கத்தை உருவாக்க நினைத்தனர்.
அதன்படி புதிய தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவராக திருப்பூர் சுப்ரமணியமும், துணை தலைவராக சரஸ்வதி முத்தனனும், பொதுச் செயலாளராக பன்னீர் செல்வமும், செயலாளராக சேலம் இளங்கோவும், கூடுதல் செயலாளராக ராம்நாட் தினேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வாகி உள்ளனர்.
இவர்கள் புதிய சங்கத்தை உருவாக்கியுள்ளனர்.