தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மணிமண்டபம் திறப்பு விழா கடந்த அக்டோபர் 1ஆம் தேதி நடைபெற்றது.
இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட கலந்துக் கொண்டனர். அவர்களின் பேசிய பேச்சில் அரசியல் இருந்தது என பலரும் கருத்து தெரிவித்தனர்.
இதனிடையில் தமிழ் திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்ட 10 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி வருகிற 6 ந்தேதி முதல் புதிய படங்களை திரையிடப்போவதில்லை என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்துள்ளார்.
மேலும் சென்னை ஐநாக்ஸ், பிவிஆர் திரையரங்குகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இது குறித்து திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளதாவது….
சிவாஜி மணி மண்ட திறப்புவிழாவில் பங்கேற்ற கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் தமிழ் திரை உலக நலன் கருதி, 10 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்வதற்கு துணை முதல்வரிடம் கோரிக்கை வைக்காமல் அரசியல் பேசியுள்ளனர்.
தமிழக அரசு இதுவரை வசூலித்து வந்த 30 சதவீத கேளிக்கை வரியை 10 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ள போதிலும் திரையரங்கு கட்டணம் குறையாது என்று அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே ரசிகர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட 30 சதவீத கேளிக்கை வரியை தயாரிப்பாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் சமமாக பகிர்ந்து வந்த நிலையில், அதில் 10 சதவீதத்தை 28 சதவீத ஜி.எஸ்.டியுடன் சேர்ந்து அரசுக்கு வழங்கினால் தங்களுக்கு இழப்பு ஏற்படும் என்றும் இரட்டை வரிவிதிப்பு முறையை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.