சினிமா நலனை பார்க்காமல் ரஜினி-கமல் அரசியல் பேசுகின்றனர் – திருப்பூர் சுப்ரமணியம்

சினிமா நலனை பார்க்காமல் ரஜினி-கமல் அரசியல் பேசுகின்றனர் – திருப்பூர் சுப்ரமணியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Kamal should talk about welfare of Cinema instead of talking Politics says Thirupur Subramaniamநடிகர் திலகம் சிவாஜிகணேசன் மணிமண்டபம் திறப்பு விழா கடந்த அக்டோபர் 1ஆம் தேதி நடைபெற்றது.

இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட கலந்துக் கொண்டனர். அவர்களின் பேசிய பேச்சில் அரசியல் இருந்தது என பலரும் கருத்து தெரிவித்தனர்.

இதனிடையில் தமிழ் திரைப்படங்களுக்கு விதிக்கப்பட்ட 10 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி வருகிற 6 ந்தேதி முதல் புதிய படங்களை திரையிடப்போவதில்லை என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்துள்ளார்.

மேலும் சென்னை ஐநாக்ஸ், பிவிஆர் திரையரங்குகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இது குறித்து திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளதாவது….

சிவாஜி மணி மண்ட திறப்புவிழாவில் பங்கேற்ற கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் தமிழ் திரை உலக நலன் கருதி, 10 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்வதற்கு துணை முதல்வரிடம் கோரிக்கை வைக்காமல் அரசியல் பேசியுள்ளனர்.

தமிழக அரசு இதுவரை வசூலித்து வந்த 30 சதவீத கேளிக்கை வரியை 10 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ள போதிலும் திரையரங்கு கட்டணம் குறையாது என்று அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே ரசிகர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட 30 சதவீத கேளிக்கை வரியை தயாரிப்பாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் சமமாக பகிர்ந்து வந்த நிலையில், அதில் 10 சதவீதத்தை 28 சதவீத ஜி.எஸ்.டியுடன் சேர்ந்து அரசுக்கு வழங்கினால் தங்களுக்கு இழப்பு ஏற்படும் என்றும் இரட்டை வரிவிதிப்பு முறையை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

டூப்ளிகேட் டாக்குமெண்ட் கொடுத்தார் தனுஷ்; திடீர் தந்தை கதிரேசன் புகார்

டூப்ளிகேட் டாக்குமெண்ட் கொடுத்தார் தனுஷ்; திடீர் தந்தை கதிரேசன் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kathiresan filed case against actor Dhanush regarding his son issueமதுரை மேலூரை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி மீனாட்சி.

இவர்களுக்கு கலைச்செல்வன் என்ற ஒரு மகன் இருந்ததாக கூறியிருந்தனர்.

அவர்தான் இப்போது நடிகர் தனுஷ் ஆக இருக்கிறார் என மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகார் அளித்தனர் .

அதன் பின்னர் நடந்த விசாரணையில் மதுரை கோர்ட்டில் நடிகர் தனுஷ் சார்பாக பிறப்பு, அடையாள ஆவணங்கள் ஆகியவை தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து அந்த வழக்கு விசாரணை முடித்து வைக்கப்பட்டு, மேலூரில் தனுஷ்மீது தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது .

இந்நிலையில், கதிரேசன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், நடிகர் தனுஷ் பிறப்புச் சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் ஆகியவை போலியாக தயார் செய்து தாக்கல் செய்துள்ளார்.

எனவே அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை புதூர் காவல் நிலையத்தில் கதிரேசன் புகார் அளித்துள்ளார்.

மேலும், மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் மீண்டும் இந்த புகார் விஸ்வரூபம் எடுக்கும் எனத் தெரிகிறது.

Kathiresan filed case against actor Dhanush regarding his son issue

dhanush case

வரலட்சுமியின் சக்திக்கு கைகொடுத்த சிவகார்த்திகேயன்-துல்கர்-ராணா

வரலட்சுமியின் சக்திக்கு கைகொடுத்த சிவகார்த்திகேயன்-துல்கர்-ராணா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

varalaxmi sakthiஇயக்குனர் மிஷ்கினிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் பிரியதர்ஷினி.

இவர் இயக்கவுள்ள புதிய படத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார் என்பதை பார்த்தோம்.

சக்தி என்று பெயரிடப்பட்ட இதன் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாகவுள்ளதால், தமிழ் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

மலையாள பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை துல்கர் சல்மான் வெளியிட, தெலுங்கு போஸ்ட்ரை ராணா தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

தற்போது இது இணையங்களில் வைரலாகி வருகிறது.

சாம்.சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தின் சூட்டிங் வருகிற 15ம் தேதி தொடங்கவுள்ளதாம்.

Sivakarthikeyan Dulquer Rana released First look of Varalaxmis Sakthi

இங்கிலிஷ் படம் இயக்குனரிடம் வருத்தம் தெரிவித்த நடிகர் ஆரி

இங்கிலிஷ் படம் இயக்குனரிடம் வருத்தம் தெரிவித்த நடிகர் ஆரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

english padam

‘இங்கிலிஷ் படம்’ என்கிற தமிழ் திரைப்படத்தின் இசையமைப்பாளர் எம்.சி. ரிக்கோ என்பவர் பெயர் அறிவிக்கப்படாத திரைப்படம் இயக்குவதாகவும் அதில் நான் ( நெடுஞ்சாலை ஆரி) நடிக்க இருப்பதாகவும் அதற்கு துணை புதுமுக நடிகர்கள் தேவை தொடர்புக்கு 9688522162 என்று தனது தொலைபேசி எண்ணையும் ‘ஜெகதீஷ் இயக்குனர்’ (முகப்புத்தக பெயர்) என்பவர் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டு இருந்தார்.

எனது பெயரை பயன்படுத்தி, ஆண்களிடத்தில் பணம் பறித்தும், பெண்களிடத்தில் தவறாக பேசி கொண்டு இருக்கிறார் என எனக்கு நண்பர்கள் மூலம் தகவல் வந்தது.

எனவே நான் எனது பெயருக்கு களங்கம் ஏற்படாமல் இருக்கவும். சினிமா மீது ஆர்வம் கொண்டவர்கள் யாரும் இந்த பதிவை பார்த்து ஏமாறாமல் இருக்கவும் கமிஷனர் அலுவகத்தில் ‘ஜெகதீஷ் இயக்குனர் ‘ என்பவர் அவர் முகப்புத்தகத்தில் வெளியிட்ட, அந்த முகப்புத்தக நகலுடன் சென்று காவல் ஆணையாளர் அவரிடம் புகார் அளித்தேன்.

அது தொடர்பாக காவல் உதவி ஆணையாளர் அவர்கள் விசாரணை மேற்கொண்டதின் பெயரில் ஜெகதீஷ் அவர்கள் செய்த தவறினை ஒப்புக்கொண்டு இனி இவ்வாறான நடவடிக்கைகளை ஈடுபட மாட்டேன் என்று வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கூறினார்.

இது சம்பந்தமான ஆவணங்கள் காவல் நிலையத்தில் உள்ளது

‘ஜெகதீஷ் இயக்குனர்’ என்பவர் முகப்புத்தகத்தில் போட்டு இருந்த பதிவை மட்டுமே நான் நகல் எடுத்து ஊடக நண்பர்கள் கேட்டுக்கொண்டதின் பேரில் தகவல் அளித்தேன்..

ஜெகதீஷ் என்பவர் ‘இங்கிலிஷ் படம்’ என்கிற தமிழ் திரைப்படத்தின் போஸ்ட்டரை பயன்படுத்தி பதிவு போட்டு இருந்ததால் தான் ‘இங்கிலிஷ் படம்’ போஸ்டரை ஆதாரத்திற்காக மட்டுமே காண்பித்தேன் தவறான நோக்கத்தில் காட்டவில்லை.

ஊடக நண்பர்கள் வெளியிட்ட செய்தியினை இங்கிலீஷ் படத்தின் இயக்குனர் தவறாக புரிந்து கொண்டு ” இங்கிலிஷ் படம்” என்கிற தமிழ் திரைப்படத்தில் நான் நடிப்பதாகவும் அந்த இயக்குனர் குறித்து நான் புகார் அளித்ததாகவும் தவறாக செய்தியை அறிந்ததாக கேள்விப்பட்டேன்.

அது சம்பந்தமாக விளக்கம் அளிக்க கடமைப்பட்டுள்ளேன்..

மற்றபடி ‘இங்கிலிஷ் படம்’ படத்தில் நான் நடிக்கவில்லை. அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் உட்பட யாருக்கும், எவ்வகையிலும் இந்த புகாரில் தொடர்பில்லை.

இது குறித்து என் பெயரையும், ‘இங்கிலிஷ் படம்’ படத்தின் பெயரையும் தவறாக பயன்படுத்தி பொய்யான விளம்பரம் செய்த ‘ஜெகதீஷ்’ என்பவர் மீதே இந்த புகார் கொடுக்கப்பட்டது.

இந்த புகாரில் ‘இங்கிலிஷ் படம்’ படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது நான் புகார் அளிக்கப்பட்டதாக தவறான தகவல் பரவி வருவதாக அறிகிறேன்.

நான் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் நடுத்தர குடும்பத்தில் இருந்து பத்து வருடத்திற்கும் மேலாக உழைத்து இந்த நிலைக்கு வந்துள்ளேன். அதனால் ஒரு சினிமா கலைஞன் வலியும் ஒரு தயாரிப்பாளர் வலியும் நன்கு அறிவேன்.

‘இங்கிலிஷ் படம்’ இயக்குனரும் என்னைப் போன்று சினிமா பின்னணி இல்லாமல் உழைத்து ஒரு படத்தை இயக்கி இருப்பதாக அறிகிறேன். அவருடைய படத்திற்க்கோ அந்த தயாரிப்பாளருக்கோ எவ்வகையிலும் களங்கம் விளைவிக்கும் செயலை நான் செய்ய நினைக்கவில்லை,

மேற்கண்ட சில ஊடகங்கள் தவறாக வெளியிட்ட செய்திகளால் ‘இங்கிலிஷ் படம்’ தொடர்புடைய நபர்களை காயப்படுத்தி இருந்தால் நான் மனதார வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.

இத்துடன் நான் புகார் அளித்த நகலையும் ஆதாரமாக அளித்துள்ளேன்.

Actor Aari statement about English Padam issue

english padam aari issue

 

செல்வராகவன் உதவியாளர் இயக்கும் ஸ்ட்ரீட் ஃபைட் கதை வாண்டு

செல்வராகவன் உதவியாளர் இயக்கும் ஸ்ட்ரீட் ஃபைட் கதை வாண்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vaandu movie stillsவாண்டு என்ற திரைப்படத்தை அறிமுக இயக்குனரான வாசன் ஷாஜி இயக்கியுள்ளார்.

இவர் இயக்குனர் செல்வராகவன் உதவியாளராக மற்றும் சில முன்னனி இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

“வாண்டு” ( North Madras ) நார்த் மெட்ராஸ் – ல் 1970 -1971 நடந்த Street Fight – ல் நடந்த உண்மை சம்பவத்தினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை.

இந்த கதையில் இரு கதாபாத்திரம் (1 ஹீரோ அப்பா முருகன்) (2 வில்லன் அப்பா மஹா காந்தி ) ஒருத்தரை ஒருத்தர் மோதி கொள்ளும் Kick boxing போட்டியில் ஹீரோ உடைய அப்பா “முருகன்” வில்லனால் தாக்கப்பட்டு மனநலம் பாதிக்கப்படுகிறார்.

ஐந்து வருடம் கழித்து ஜெயித்த வில்லனின் மகன் பயிற்சிப்பெறும் Kick boxing பள்ளியில் ஹீரோவும் சேர்கிறார் பயிற்சியில் இவர்களுக்குள் விரோதம் ஏற்படுகிறது.

இதை பொறுத்துக் கொள்ள முடியாத வில்லன் “மஹா காந்தி” ஹீரோவுக்கு இடையூறு செய்கிறார்.

இந்த விஷயம் இரண்டாவது ஹீரோவான Kick boxing மாஸ்டருக்கு தெரியவருகிறது.

மாஸ்டர் ஹீரோவிற்கு அதிக பயிற்சி கொடுக்க பயிற்சி பெற்ற ஹீரோ, வில்லன் “மஹா காந்தி” பையனுடன் வட சென்னையில் பெரிய Street Fight நடக்கிறது.

இந்த சண்டையில் இருவருக்குள் ஏற்படும் விரோதத்தால் இவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பது கதை.

இப்படத்தில் தடையறதாக்க மற்றும் கொம்பன் “மஹா காந்தி”, மெட்ராஸ் புகழ் “ரமா”, தெறி fame “சாய் தீனா”, ரோமியோ ஜூலியட் “புவனேஸ்வரி”, 2.0 வில் நடித்துக்கொண்டிருக்கும் “ரவிசங்கர் “, வின்னர் பட தயாரிப்பாளர் “ராமசந்திரன் “, “முருகன்” இவர்களுடன் அறிமுக நாயகன் “சீனு”, “S.R.குணா” “ஆல்வின்” கதாநாயகியாக “ஷிகா” ஆகியோர் நடிக்கின்றனர்.

புதுமுக இசையமைப்பாளர் “A.R.நேசன்”, பாடல்கள் “மோகன் ராஜன்”, கலை “J.P.K.பிரேம்”, ஒளிப்பதிவு “ரமேஷ்” & “V.மஹேந்திரன்”, படத்தொகுப்பு “ப்ரியன்”, நடனம் “பாபி அன்டனி”, சண்டைப்பயிற்சி “ஓம் பிரகாஷ்”, கதை, திரைக்கதை,வசனம்,இயக்கம் “வாசன் ஷாஜி “, M M power Cine Creation வழங்கும் “வாசன் ஷாஜி ” தயாரிக்கிறார், இணை தயாரிப்பு “டத்தோ N முனியாண்டி”.

Vaandu movie based on Street Fight

vaandu director

கதைக்கான பணத்தை கேட்டால் மிரட்டுகிறார் சுந்தர்.சி…. வேல்முருகன் புகார்

கதைக்கான பணத்தை கேட்டால் மிரட்டுகிறார் சுந்தர்.சி…. வேல்முருகன் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Velmurugan filed case against SundarC in Nandhini serial story issueநேசம் புதுசு படத்தை இயக்கியவர் வேல்முருகன்.

இவர் ஆட்டோகிராஃப் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

சன்டிவியில் ஒளிப்பரப்பாகும் நந்தினி சீரியலின் கதை தன்னுடையது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கதைக்கு 50 லட்சம் ரூபாயும், சீரியல் ஒளிப்பரப்பாகும் வரை தனக்கு மாதம் 1 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்குவதாக சுந்தர் சி இவரிடம் கூறி கதையைப் பெற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

15 ஆண்டு நண்பர் என்ற அடிப்படையில் பரஸ்பர நம்பிக்கையின் பேரில் தாம் கதையை சுந்தர் சியிடம் வழங்கியதாகவும், ஆனால், ஒப்புக் கொண்டபடி மாத சம்பளத்தை 4 மாதங்களுடன் நிறுத்திவிட்டு 50 லட்சம் ரூபாய் பணமும் தராமல் தம்மை சுந்தர் சி ஏமாற்றியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

பணத்தைக் கேட்டால் அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும் சுந்தர் சி மீது குற்றம்சாட்டியுள்ளார் வேல்முருகன்.

எனவே இதுகுறித்து சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

Director Velmurugan filed case against SundarC in Nandhini serial story issue

More Articles
Follows