தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல விநியோகஸ்தரும் கோவை நீலகிரி மாவட்ட திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவருமான திருப்பூர் சுப்ரமணியம் ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில் பெருகி வரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மல்டி ப்ளக்ஸை குறித்து கூறியுள்ளார்.
மேலும், அதில் அவர் கூறியிருப்பதாவது…
மல்டி ப்ளக்ஸை பொறுத்தவரை மேல் தட்டு மக்களே அங்கு அதிகளவில் படம் பார்க்கின்றனர். அவர்களுக்கு டிக்கெட் விலை பற்றி கவலையில்லை.
ஆனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தியேட்டர்களுக்கு வரத் பயப்படுகின்றனர்.
எனவே அவர்கள் திருட்டு விசிடியில் படம் பார்க்கின்றனர்.
ஆந்திராவில் உள்ள நடிகர்கள் பெரும்பாலோனார் சொந்தமாக தியேட்டர்கள் வைத்துள்ளனர்.
அவர்களுக்கு தியேட்டர் நடத்துவது எவ்வளவு பெரிய கஷ்டம் என்பது தெரியும்.
எனவே அவர்கள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பதாலும், மக்கள் அதிகளவில் வருவதாலும் நிறைய லாபம் பார்க்கின்றனர்.
ஆனால் தமிழ் நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டு, திருமண மண்டபம் கட்டவே நினைக்கின்றனர்.
தியேட்டர்கள் கட்டுவதில்லை. எனவே அவர்களுக்கு எங்கள் கஷ்டம் புரிவதில்லை” என்றார்.