தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்பு ட்ரெய்லர்கள் வெளியிடுவது வழக்கம்.
இந்த ட்ரெய்லர் வெளியிடப்படும்போது ரசிகர்களை அனுமதிப்பது ஒரு சில திரையரங்குகள் செய்து வருகின்றன.
சமீபத்தில் விஜய் நடித்த ‘லியோ’ படத்தின் டிரைலர் சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் இலவசமாக ஐந்து நிமிடங்களுக்கு திரையிடப்பட்டது. அந்த ஐந்து நிமிடங்கள் கழித்த பிறகு தான் தியேட்டர் நாசமானது நிர்வாகத்திற்கு தெரிய வந்தது.
தியேட்டரில் உள்ள அனைத்து சீட்டுகளையும் அடித்து நொறுக்கி இருந்தனர் விஜய் ரசிகர்கள். இதற்கு விஜய் தரப்பில் இருந்து ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடப்படவில்லை.்தயாரிப்பு நிறுவனமும் இதை கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில்…
ஒரு சில திரையரங்குகளில் ட்ரெய்லர்கள் ரிலீஸ் செய்வதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதோடு, திரையரங்கிலும் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, இனி திரையரங்குகளில் ட்ரெய்லர்கள் வெளியிடுவது இல்லை என முடிவு செய்துள்ளோம்” என திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
Movie trailers will not be released in theatres