தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமாவைப் பொறுத்தவரை நடிகர்கள் எப்போதும் புகழ் வெளிச்சத்தில் இருப்பார்கள்.
ஆனால் அவர்கள் வெற்றிக்கு காரணமான தயாரிப்பாளர்களோ இயக்குனர்களோ பெரிதாக வெளியே தெரிவதில்லை.
அதுபோலதான் விநியோகஸ்தர்களும் தியேட்டர் உரிமையாளர்களும்.. ஆனால் தமிழக ரசிகர்களை பொறுத்தவரை பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் மிகவும் பிரபலம்.
காரணம் இவர் யூடியுப் மற்றும் டிவி சேனல்களில் கொடுக்கும் இன்டர்வியூகள் எப்போதுமே வைரலாக இருக்கும்.
இந்த நிலையில் இவர் தீபாவளியன்று அரசு அனுமதி இன்றி ஆறு காட்சிகளை அவரது சக்தி சினிமாஸ் திரையரங்கில் திரையிட்டுள்ளார்.
இதனை எடுத்து அவருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதன் விவரம் வருமாறு
கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட திரை அரங்கு உரிமையாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம் ராஜினாமா..
சமீபத்தில் இவரது திரையரங்கத்தில் தீபாவளி அன்று காலை அனுமதியின்றி படங்களை திரையிட்டதாக மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்
இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கோவை ஈரோடு நீலகிரி, திருப்பூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளார்கள் சங்கம் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளர்.
Tirupur Subramanyam resigned his post from theatre owners association