தளபதி 63-க்காக விளையாட்டு மைதான செட் அமைக்கும் அட்லி

தளபதி 63-க்காக விளையாட்டு மைதான செட் அமைக்கும் அட்லி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thalapathy 63தெறி, மெர்சல் படங்களுக்கு பிறகு விஜய்யை மீண்டும் இயக்கவுள்ளார் அட்லி.

இப்படத்தை 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளார் கல்பாத்தி அகோரம்.

ஏஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, யோகி பாபு, விவேக் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இப்படம் ஒரு விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் சூட்டிங்கை 2019 ஜனவரி மாதத்தில் தொடங்கவுள்ள நிலையில், சென்னை புறநகர் பகுதியில் ஒரு விளையாட்டு மைதான செட்டை அமைத்து வருகிறாராம் அட்லி.

முதல்வன் 2 படத்தில் நடிக்க ஷங்கருக்கு ஓகே சொல்வாரா விஜய்.?

முதல்வன் 2 படத்தில் நடிக்க ஷங்கருக்கு ஓகே சொல்வாரா விஜய்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Will Vijay say OK to Director Shankars Mudhalvan 2ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார்.

சூப்பர் ஹிட்டான தன் படத்தின் 2ஆம் பாகத்தை அவர் இயக்குவது இதுதான் முதன்முறையாகும்.

இதனையடுத்து கமல் நடிக்கவுள்ள இந்தியன்2 படத்தை இயக்கவுள்ளார் ஷங்கர்.

இந்நிலையில் 2.0 படத்தின் புரொமோசன் நிகழ்ச்சிகளில் ஷங்கர் கலந்துக் கொண்ட போது ஒருவர் முதல்வன் 2 படம் பற்றி கேட்டார்.

முதல்வன் 2 படக்கதைக்கு நடிகர் விஜய் சரியாக இருக்கும் பட்சத்தில், அவரை நடிக்க வைப்பேன். என் படத்தின் ஹீரோக்களை கதை தான் தீர்மானிக்கும் என தெரிவித்துள்ளார்.

விஜய் ஓகே சொல்வாரா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Will Vijay say OK to Director Shankars Mudhalvan 2

விஜய்-விக்ரம்-சிம்புவை இணைக்க மணிரத்னம் மெகா ப்ளான்

விஜய்-விக்ரம்-சிம்புவை இணைக்க மணிரத்னம் மெகா ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Maniratnam plans to direct Vijay Vikram and Simbu in his next movieமலையாளம், ஹிந்தி படங்களில் டாப் ஹீரோக்கள் இணைந்து நடிப்பது வழக்கமான ஒன்றுதான்.

ஆனால் தமிழ் சினிமாவில் இது எப்போதாவது நடக்கும் அரிய நிகழ்வாக மாறிவிட்டது.

அண்மையில் இந்த அரிய நிகழ்வை நடத்தி காட்டியவர் மணிரத்னம்.

அவர் இயக்கிய செக்கச் சிவந்த வானம் படத்தில் அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி, அருண்விஜய், சிம்பு ஆகிய நான்கு ஹீரோக்களை நடிக்க வைத்தார்.

தற்போது மீண்டும் அது போன்ற ஒரு மல்டி ஹீரோ சப்ஜெக்ட்டை கையில் எடுக்க உள்ளாராம்.

அதில் விஜய், விக்ரம், சிம்பு ஆகிய மூவரையும் இணைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே விக்ரம் மற்றும் சிம்பு உடன் இணைந்திருக்கிறார் மணிரத்னம்.

தற்போதுதான் முதன்முறையாக விஜய்யுடன் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Maniratnam plans to direct Vijay Vikram and Simbu in his next movie

ஆஸ்கார் விருது இயக்குனரை அசரவைத்து 26 சர்வதேச விருதுகளை அள்ளிய *டூ லெட்*

ஆஸ்கார் விருது இயக்குனரை அசரவைத்து 26 சர்வதேச விருதுகளை அள்ளிய *டூ லெட்*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Chezhiyans To Let movie won 26 International awardsதான் இயக்கிய ‘டூ லெட்’ படம் மூலமாக உலக அரங்கில் நமது தமிழ் சினிமாவை மீண்டும் ஒருமுறை தலைநிமிர செய்துள்ளார். ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன்.

ஆம்.. இங்கே தேசிய விருது பெற்ற ‘டூ லெட்’ படம் ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. 26 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆஸ்கர் விருது பெற்ற ஈரான் நாட்டு இயக்குநரே எப்படி இந்த மாதிரி ஒரு கதைக்களத்தில் உங்களால் ஒரு படத்தை உருவாக்க முயன்றது எனக் கூறி இயக்குநர் செழியனை வானளாவப் புகழ்ந்துள்ளார்.

கல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த செழியன், தான் இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலேயே நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச விழாக்களை கடந்து வந்திருப்பது இந்திய சினிமாவிலேயே யாரும் இதுவரை தொடாத சாதனை..

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் 2007 முதல் மென்பொருள் துறை வளர்ச்சியடைந்ததும் வீடு வாடகைக்குக் கிடைப்பது எவ்வளவு பிரச்சினைக்குரியதாக மாறியுள்ளது, நடுத்தர மக்கள் எவ்வாறு இதில் பாதிக்கப்படுகின்றனர் என்பதை இந்தப் படத்தில் யதாரத்தமாக காட்சிப்படுத்தியுள்ளார் செழியன். இந்தப்படத்தில் சந்தோஷ் ஸ்ரீராம், ஷீலா ராஜ்குமார் இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப்படம் இத்தனை சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டது எப்படி என பரவசத்துடன் விவரிக்கிறார் செழியன்..

“கடந்த சில வருடங்களுக்கு முன் விகடன்ல ‘உலக சினிமா’ங்கிற பேர்ல சர்வதேச அளவுல கவனம் ஈர்த்த படங்களை பற்றி எழுதிட்டு வந்தேன்.. நான் அப்படி ஒரு படம் பண்ண நினைச்சபோது, வாழ்க்கைல அடிக்கடி நாம் பார்க்கிற இந்த வீடு மாறும் பிரச்சனை தான் என் கவனத்துக்கு வந்தது. அதனால்தான் முதல் படத்திலேயே இப்படி ஒரு பிரச்சனையை கையில் எடுத்தேன். இதே வெளிநாடுகளில் நடந்திருந்தால் எப்படி படமாக எடுத்திருப்பார்கள் என்கிற கண்ணோட்டத்தில் இந்தப்படத்தை இயக்கினேன்.

இரண்டுமுறை ஆஸ்கர் விருது பெற்ற ஈரானிய இயக்குநர் அஸ்கர் பர்காதி இந்தப் படத்தை பார்த்துவிட்டு, எனக்கு படம் பார்த்த உணர்வே இல்லை, ஒருவரின் வாழ்க்கையை மிக நெருக்கமாக கூடவே இருந்து பார்த்தது போன்று இருந்தது எனப் பாராட்டினார்.

ஈரானிய படங்களை பார்த்துவிட்டு நாம் ஆஹா ஓஹோவென புகழ்கிறோம்.. ஆனால் எப்போது ஈரான் நாட்டுக்காரன் நம் தமிழ்ப்படத்தை பார்த்து வாய்பிளக்கப் போகிறான் என்கிற ஆதங்கம் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு நிறையவே உண்டு.. இப்போது அவர் இருந்திருந்தால் இதைப் பார்த்து பெரிதும் மகிழ்ந்திருப்பார்.

சர்வதேச விழாக்களில் படத்தைப் பார்த்த பல நாட்டு இயக்குநர்கள், தமிழில் இப்படி ஒரு கலாச்சாராம் இருக்கிறதா, வீடு மாறுவது என்பது இவ்வளவு கஷ்டமானதா என ஆச்சர்யப்பட்டார்கள்..

இன்னும் ஒரு சில நாடுகளில் இந்த வீடு மாறும் பிரச்சனை இருந்தாலும் அது வேறு வடிவத்தில் இருக்கிறது.

ஐஸ்லாந்து இயக்குநர் ஒருவர் கூறும்போது…

அவரது ஊரில் சுற்றுலாவை மேம்படுத்துவதாகக் கூறிக்கொண்டு, வீடுகளை எல்லாம் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளாக மாற்றி வருவதால் வீடு மாறவேண்டிய சூழல் உருவாகியுள்ளதாகக் கூறினார். அர்மேனியாவில் இதே பிரச்சனை வேறு வடிவத்தில் இருக்கிறதாகச் சொன்னார்கள்.

அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற திரைப்பட விழாவில் திரையிட்டபோது, அங்கே பாதுகாப்பிற்காக வந்திருந்த துப்பாக்கி ஏந்திய இளம் பெண் போலீஸ் ஒருவர் படம் முடிந்ததும் அழுதுகொண்டே போனது இப்போதும் என் கண் முன்னால் நிற்கிறது.

வீடு மாறும் பிரச்சனை வேறு வடிவத்தில் இருந்தாலும், அதனால் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சனை, குழந்தைகளை வேறு பள்ளிகளுக்கு இடம் மாற்றுவது என்பது எல்லா ஊர்களிலும் உள்ளவர்களும் பொதுவாக சந்திக்கக் கூடியது தானே? அதனால் தான் ’டூ லெட்’ பல நாடுகளில் உள்ளவர்களையும் கவர்ந்துவிட்டது எனச் சொல்லலாம்.

கடந்த வருடம் நவ-17ஆம் தேதி கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் தான் முதன்முதலாகக் கலந்துகொண்டது ‘டூ லெட்’ படம். அந்த விழா தான் இந்தப்படம் இன்னும் பல விழாக்களில் கலந்துகொள்வதற்கான வாசலை அகலமாக திறந்துவிட்டது.

ஒவ்வொரு விழாக்களிலும் படத்தைப் பார்த்த மற்ற நாட்டவர்கள் தங்கள் நாட்டு திரைப்பட விழாக்களிலும் இப்படம் கலந்துகொண்டால் அது தங்களுக்குப் பெருமை எனக் கூறி அவர்களே அழைப்பிதழ் அனுப்பி வரவேற்றனர்.

இதோ தற்போது நடைபெற்று வரும் கோவா திரைப்பட விழாவில் மூன்று போட்டிப் பிரிவுகளில் டூ லெட் கலந்துகொண்டது.

இந்தியப் படங்களுக்கான போட்டி பிரிவு, அறிமுக இயக்குநர்கள் மட்டும் கலந்துகொள்ளும் சர்வதேச அளவிலான போட்டி பிரிவு, அனைத்துப் படங்களுக்கான சர்வதேச போட்டி பிரிவு ஆகியவற்றில் கலந்துகொள்கிறது.

கடந்த 49 வருட கோவா திரைப்பட விழா வரலாற்றிலேயே முதன்முறையாக சர்வதேசப் போட்டி பிரிவில் கலந்துகொள்ளும் முதல் தமிழ்ப் படம் டூ லெட் தான்..

இத் திரையிடல் நேரம் அறிவித்த ஒரு மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. அதனால் மறுபடியும் 27 ந்தேதி திரையிட உள்ளார்கள். விருது பெறும் விபரங்கள் 28 ந்தேதி அறிவிக்கப்பட உள்ளது.

’டூ லெட்’ படம் நூறு விழாக்களுக்கு மேல் கலந்துகொள்ளும் என நானே எதிர்பார்க்கவில்லை.. என்னுடைய குருநாதர் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் படத்தைப் பார்த்துவிட்டு இப்படி ஒரு படம் பார்த்து ரொம்ப வருஷம் ஆச்சுன்னு பாராட்டினார். சர்வதேச விழாக்களில் படத்தை திரையிட்டு வரும் காரணத்தால் இங்கே இன்னும் பிரிமியர் ஷோவாக திரையிட்டுக் காட்டவில்லை..

வரும் டிசம்பரிலோ அல்லது பொங்கலுக்கு பின்னரோ இந்தப்படத்தை தியேட்டர்களில் வெளியிட இருக்கிறோம்.

சர்வதேச விழாக்களில் பாராட்டுக்களை குவிக்கும் இதுபோன்ற படங்களை தியேட்டர்களில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக இருப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

இந்த விஷயத்தில் சத்யம் தியேட்டர் எங்களுக்கு பக்கபலமாக இருப்பதாகக் கூறியுள்ளார்கள்.. நிச்சயம் வணிக ரீதியாகவும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும்” எனக் கூறினார் செழியன்.

Chezhiyans To Let movie won 26 International awards

to let movie stills

ரஜினி-விஜய் நேரிடையாக கொடுத்த நிவாரண நிதி பற்றி கமல் பேச்சு

ரஜினி-விஜய் நேரிடையாக கொடுத்த நிவாரண நிதி பற்றி கமல் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal talks about Rajini and Vijays contribution towards Gaja Cyclone Reliefகடந்த 10 நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் 7 மாவட்டங்களை கஜா புயல் 180 கி.மீ. வேகத்தில் தாக்கியது.

இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் லட்சக்கணக்கான மரங்கள், மின் கம்பிகள், வீட்டின் கூறைகள் அனைத்தும் பலத்த சேதமடைந்துவிட்டது.
பெரும்பாலான பிரபலங்கள் நிவாரண நிதிகளை அள்ளிக் கொடுத்து வருகின்றனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல் நேரிடையாக களத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்.

அப்போது செய்தியாளர்களை கமல் சந்தித்தார்.

அப்போது அவரிடம், “கடந்த காலங்களில் இயற்கை பேரிடர் வரும்போது அரசின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து நிவாரணத் தொகை வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.

கஜா பேரிடரின் போது முக்கியமான பிரபலங்களான விஜய், ரஜினி ஆகியோர் தங்களது ரசிகர்கள் மூலம் நிவாரணத்தை மக்களிடம் எடுத்து செல்கிறார்கள். இந்த மாற்றத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “ரொம்ப வருத்தத்திற்குரிய, சந்தேகம் வலுத்துவிட்ட நிலையை காட்டுகிறது. கொடுத்த பணம் மக்களிடம் போய் சேராது என்ற அவநம்பிக்கை அரசின் மீது வந்துவிட்டது” என தெரிவித்தார்.

Kamal talks about Rajini and Vijays contribution towards Gaja Cyclone Relief

புதுப்பேட்டை2-வை விட ஆயிரத்தில் ஒருவன்2 எடுக்க ஆசைப்படும் செல்வராகவன்

புதுப்பேட்டை2-வை விட ஆயிரத்தில் ஒருவன்2 எடுக்க ஆசைப்படும் செல்வராகவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I Wish to direct sequel of Aayirathil Oruvan instead of Pudhupettai says ‎Selvaraghavanவித்தியாசமான படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு தந்து கொண்டிருப்பவர் டைரக்டர் செல்வராகவன்.

இவரது இயக்கத்தில் சிம்பு நடித்த கான் திரைப்படம் என்னானது? என்பதே தெரியவில்லை.

மேலும் சந்தானத்துடன் ஒரு படம், எஸ்ஜே. சூர்யாவுடன் ஒரு படம் என கமிட் ஆனார் செல்வராகவன்.

அதன்பின்னர் சூர்யாவை வைத்து என்ஜிகே படத்தை இயக்கி வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இரண்டாம் பாகம் சீசன் என்பதால் இவரின் சூப்பர் ஹிட்டான புதுப்பேட்டை படத்தின் 2ஆம் பாகம் வருமா? என பல ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

அதற்கு தன் ட்விட்டரில் பதிலளித்துள்ளார் செல்வராகவன்.

அவர் கூறியதாவது…

“வெளியே எங்கு சென்றாலும் நண்பர்கள் ‘புதுப்பேட்டை 2 ‘எப்போது ? என்று அன்பாய் கேட்கின்றனர். நடக்கும் என சொல்வேன்.

ஆயின் என் மனதுக்குள் கேட்கும் தீரா ஓசை “ஆயிரத்தில் ஒருவன் 2 “ எடுக்க வேண்டும் என்பதுதான்.சோழன் பயணம் தொடர வேண்டும் என்பது என்னுள் புதைந்து கிடக்கும் நீண்ட நாள் தாகம்” என கூறியுள்ளார்.

I Wish to direct sequel of Aayirathil Oruvan instead of Pudhupettai says ‎Selvaraghavan

More Articles
Follows