தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
எம்ஜிஆருடன் ‘ரிக்ஷாக்காரன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ஜெயகுமாரி.
இவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அழகும் திறமையும் இருந்தாலும் இவருக்கு பெரும்பாலும் கவர்ச்சி மற்றும் வில்லி வேடங்களே வந்தன.
தற்போது இவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் மோசமான நிலையில் உள்ளார்.
எனவே சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரது உறவினர்களும், பெற்ற பிள்ளைகளும் இவரை கைவிட்டு விட்டனர்.
இதனை அடுத்து தனக்கு திரையுலகமும் தமிழக அரசும் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தார்
இந்த நிலையில் நடிகை ஜெய்குமாரிக்கு உயர் சிகிச்சை அளிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரடியாக மருத்துவமனைக்கே சென்று ஜெயகுமாரியை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
மேலும் அவருக்கு உயர்சிகிச்சை அளிக்க ஏற்பாடுகளை செய்துள்ளார்.
இத்துடன் அவருக்கு பண உதவி செய்துள்ளார்.
இத்துடன் நடிகைக்கு முதியோர் உதவி தொகை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளார் அமைச்சர் மா.சுப்ரமணியன்.
Tamil Nadu Govt to help Jayakumari who acted with MGR