தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூர்யாவை திருமணம் செய்தபின் படங்களில் நடிக்காமல் இருந்தார் ஜோதிகா.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் 36 வயதினிலே படத்தில் நடித்து ரீ எண்ட்ரி கொடுத்தார்.
தற்போது தேசிய விருது பெற்ற “குற்றம் கடிதல்“ இயக்குநர் பிரம்மா இயக்கும் “மகளிர் மட்டும்“ படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் ஆவன பட இயக்குநராக நடிக்கிறார் ஜோதிகா.
இவருடன் நாசர், லிவிங்ஸ்டன், ஊர்வசி, பானு ப்ரியா மற்றும் சரண்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டேயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இணை தயாரிப்பு க்ரிஸ் பிக்சர்ஸ்.
1994ஆம் ஆண்டில் பெரும் வெற்றிப்பெற்ற மகளிர் மட்டும் படத்தலைப்பை விட்டுக்கொடுத்தற்காக கமல்ஹாசனுக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.