தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை அவரது பெயரிலேயே படமாக எடுத்தனர்.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் நேற்று வெளியானது.
தமிழகத்திலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் நாளிலேயே ரூ. 2 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் நேற்றே இப்படத்தை சூர்யா பார்த்துள்ளார்.
அதுபற்றி அவர் கூறியுள்ளதாவது…
“படம் மிக அருமை. படத்தின் நாயகன் சுஷாந்த்? இல்லை தோனி? என்று தெரியாத அளவுக்கு சுஷாந்த் நன்றாக நடித்துள்ளார்” என்றார்.