முதன் முறையாக சூர்யாவுடன் இணையும் ஜிவி பிரகாஷ்?

முதன் முறையாக சூர்யாவுடன் இணையும் ஜிவி பிரகாஷ்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya and GV Prakash teams up for first time with Sudhaவிக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

இப்படத்தின் மூலம் அனிருத், முதன்முறையாக சூர்யா படத்திற்கு இசையமைத்து வருவது நாம் அறிந்ததே.

இந்நிலையில் சூர்யா நடிக்கவுள்ள புதிய படத்திற்கு இசையமைக்க ஜி.வி.பிரகாஷிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது.

இதுவரை இவர்கள் இணைந்து பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை இறுதிச்சுற்று சுதா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Suriya and GV Prakash teamsup first time for new project

காலா ஓப்பனிங் சாங் இதுதானா? ரஜினிக்கு தெரியுமா?

காலா ஓப்பனிங் சாங் இதுதானா? ரஜினிக்கு தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaala teamபா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் காலா.

மருத்துவ பரிசோதனைக்காக ரஜினிகாந்த் அமெரிக்கா சென்று இருந்தாலும், அவர் இல்லாத காட்சிகளை மும்பையில் படமாக்கி கொண்டிருக்கிறார் ரஞ்சித்.

தனுஷ் தயாரித்து வரும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் விநிதன் என்ற பாடல் ஆசிரியர், தான் காலா படத்திற்காக ஓப்னிங் சாங் இது என பாடல் வரிகளை பதிவிட்டுள்ளார்.

இது ரஜினி மற்றும் படக்குழுவினருக்கு தெரியுமா? எனத் தெரியவில்லை.

மேலும் இப்பாடலை ரஜினிக்கு அர்ப்பணிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதை படக்குழு உறுதி செய்யவும் இல்லை. மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Lyricist_Vinithan‏ @Vinithan_Offl
எனது வரிகளில் உருவான #காலா பாடல் வரிகள் வெளியீடு #KaalaOpeningSong #MySongLyrics #விநிதன் Dedicate to @superstarrajini

Kaala movie Opening Song for Rajinikanth

kaala song vinithan

தியேட்டர்கள் ஸ்டிரைக்: முதல் ஆளாக வந்து சம்பளத்தை குறைத்த மதன்கார்க்கி

தியேட்டர்கள் ஸ்டிரைக்: முதல் ஆளாக வந்து சம்பளத்தை குறைத்த மதன்கார்க்கி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Lyricist MadhanKarkyஇந்தியா முழுவதும் ஜிஎஸ்டி 28% (சரக்கு மற்றும் சேவை வரி) விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சினிமா டிக்கெட்டுக்கு மேலும் 30% வரி விதிக்கப்பட்டுள்ளதால், இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன.

இதனால் தயாரிப்பாளர்களும் நடிகர்களும் செய்வதறியாமல் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வைரமுத்துவின் மகனும் பாடல் ஆசிரியருமான மதன்கார்க்தி தன் ட்விட்டர் பக்கத்தில் இப்பிரச்சினையை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் தன் சம்பளத்தில் 15% குறைத்துக் கொள்ள தயாராகவிருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

தான் நேசிக்கும் சினிமா அழிந்துவிடக் கூடாது என்பதறக்காக முதல் ஆளாக வந்து, தன் சம்பளத்தை குறைக்க ஒப்புக் கொண்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Madhan Karky‏Verified account @madhankarky
Disheartening to see cinema halls closed. Hope the tax is revised and the industry gets back on track.

Madhan Karky‏Verified account @madhankarky
Until the revision, I am willing to reduce 15% off my remuneration for songs and dialogues, if that would help the industry.

3வது முறையாக இணையும் ஆர்யா-ஜீவா; லைக்கா தயாரிக்கிறது

3வது முறையாக இணையும் ஆர்யா-ஜீவா; லைக்கா தயாரிக்கிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arya jeeva arya jiivaரஜினிகாந்த் நடித்து வரும் 2.0 படத்தை அடுத்து தனது அடுத்த படத்தை தயாரிக்க முன்வந்துள்ளது லைக்கா புரொடக்ஷன்ஸ்.

இதில் நடிகர்கள் ஜீவா மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கவுள்ளனர்.

இதற்கு முன்பு ஆர்யா நடித்த பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் ஆர்யா கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார்.

அதுபோல் ஜீவா நடித்த சிவா மனசுல சக்தி என்ற படத்தில் ஆர்யா கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தார்.

தற்போது இவர்கள் 3வது முறையாக ஒரு படத்தில் இணைந்து நடிக்கின்றனர்

இப்படத்தை “நான்”, “எமன்” ஆகிய படங்களை இயக்கிய ஜீவா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

Jiiva and Arya teamsup for Lyca Productions

தமிழக அரசை எதிர்த்து தியேட்டர்கள் நாளை முதல் மூடல்

தமிழக அரசை எதிர்த்து தியேட்டர்கள் நாளை முதல் மூடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

theatre crowd in tamilnaduஜீலை 1ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வரி அமுல்படுத்தப்பட்டள்ளது.

இதனால் ஒரே வரி ஒரே நாடு என்ற அடிப்படையில் நாடு இயங்கி வருகிறது.

ஆனால் தமிழக சினிமா துறையில் இந்த வரியுடன் மாநில அரசின் 30% வரியும் இணைந்துள்ளது.

எனவே சினிமாத்துறைக்கு 58% வரி விதிப்பு ஏற்புடையதல்ல என்று திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் சென்னையில் இன்று பேட்டியளித்தார்.

அது குறித்து அவர் கூறியதாவது…

‘எல்லா துறையிலும் விலையை அவர்களே முடிவு செய்துக் கொள்ளலாம்.

ஆனால் சினிமா டிக்கெட் கட்டணத்தை அரசே முடிவு செய்கிறது.

இது சிறிய பெரிய படங்களுக்கும் பொருந்துகிறது.

நாங்கள் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியை எதிர்க்கவில்லை. ஆனால் மாநில அரசின் வரியை (30%) எதிர்க்கிறோம்.

ஜீன் 30ஆம் தேதி மாலைதான் இந்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

அனைத்து வரிகளையும் சேர்த்து, கிட்டதட்ட 100 ரூபாயில் 68% வரியை செலுத்த வேண்டியுள்ளது.

இரட்டை வரியை நாங்கள் ஏற்கமாட்டோம். இதனால் பல சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம்.

நேற்று முதல் நடைமுறைக்கு வந்த வரியை தியேட்டர் உரிமையாளர்கள் கட்ட முடியவில்லை.

ஆகையால் நாளை முதல் திரையரங்கு மூடப்படுகிறது.

சில தியேட்டர்களில் நேற்றே சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டு விட்டன.

திரைப்படத்துக்கு ஏற்ப சினிமா டிக்கெட் விலையை நிர்ணயிக்க அனுமதிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

இவர்களின் முடிவை பரிசீலிக்க சொல்லி, நடிகர்கள் சங்கம் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilnadu Theatre Owners Association announced strike and closed all theatres

இனி படம் இயக்கவே மாட்டேன்… அஜித்துக்கு தோல்வி கொடுத்த இயக்குனர் முடிவு

இனி படம் இயக்கவே மாட்டேன்… அஜித்துக்கு தோல்வி கொடுத்த இயக்குனர் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yegan movieநடன இயக்குனர், நடிகர் என வலம் வந்தவர் ராஜூ சுந்தரம்.

முதன்முறையாக இவர் அஜித், நயன்தாரா நடித்த ஏகன் படத்தை இயக்கினார்.

ஆனால் இப்படம் மாபெரும் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் நேற்றுமுன் தினம் வெளியான ‘யானும் தீயவன்’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

அப்போது ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது…

“யானும் தீயவன் படத்தை இயக்க முதலில் என்னிடம்தான் கேட்டனர்.

ஆனால் ஏகன் படம் ஒழுங்காக ஓடவில்லை. அப்போதே இனி படங்களை இயக்கக்கூடாது என முடிவு எடுத்து விட்டேன்.

என் சகோதரர் பிரபுதேவா கடுமையான உழைப்பாளி. இயக்குனராக அவர் வெற்றி பெற்று வருகிறார்.

இயக்குனர் வேலை கடினமானது. என்னால் முடியவில்லை. எனவே நடனத்தில் மட்டுமே அதிக கவனம் செலுத்த உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

Hereafter i wont direct movies says Dance Master Raju Sundaram

More Articles
Follows