சூர்யா 42′ சூட்டிங் பூஜையுடன் தொடங்கியது.; பணிபுரியும் கலைஞர்கள் முழுவிவரம் இதோ..

சூர்யா 42′ சூட்டிங் பூஜையுடன் தொடங்கியது.; பணிபுரியும் கலைஞர்கள் முழுவிவரம் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சூர்யாவின் புதிய திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 42’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இயக்குநர் சிவா இயக்கும் இப்படத்தினை Studio Green K.E. ஞானவேல் ராஜா உடன் UV Creations வம்சி-பிரமோத் தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது.

படத்தில் பணி புரியும் கலைஞர்கள் யார் யார் என்பது பற்றிய விவரத்தை இங்கே காண்போம்…

Suriya 42

Suriya 42 movie shoot started with Pooja

*1 NEWS 1 MIN*: Suriya42 Cast & Crew full updates: சூர்யா சிவா ஞானவேல்ராஜா கூட்டணியில் பாலிவுட் நடிகை

நாங்க சொதப்பிட்டோம்.. நீங்க பத்திரமா பாத்துக்குங்க.; மாணவர்களிடம் மனமுருகி பேசிய விக்ரம்

நாங்க சொதப்பிட்டோம்.. நீங்க பத்திரமா பாத்துக்குங்க.; மாணவர்களிடம் மனமுருகி பேசிய விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருச்சி, மதுரையைத் தொடர்ந்து கோவை ஜிஆர்டி கல்லூரி வளாகத்திலும், கோவை மாநகரின் நவீன அடையாளமான ப்ரோஸோன் வணிக வளாகத்திலும் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ கொண்டாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட சீயான் விக்ரம்,“கோப்ரா திரைப்படம், சைக்கலாஜிக்கல் திரில்லர், எமோஷனல் டிராமா, சயின்ஸ் ஃபிக்சன், ஹை ஆக்டேன் ஆக்சன் ஃபிலிம் என எல்லாம் கலந்த மாஸ் எண்டர்டெய்னர் திரைப்படம்’ என தெரிவித்தார்.

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் கோப்ரா. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் லலித்குமார் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முதல் வெளியாகிறது.

தமிழகமெங்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் இந்த திரைப்படத்தை மேலும் பிரபலப்படுத்துவதற்காக சீயான் விக்ரம் தலைமையிலான படக்குழுவினர் திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் கல்லூரிகளிலும், முன்னணி வணிக வளாகங்களிலும் ரசிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். அந்த வகையில் இன்று கோவையிலுள்ள ஜி ஆர் டி கல்லூரியின் மாணவ மாணவிகளின் முன்னிலையில் ‘கோப்ரா’ படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் சீயான் விக்ரம், நடிகைகள் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Cobra

சீயான் விக்ரம் பேசுகையில்…

“ திருச்சிக்குச் சென்றோம். மதுரைக்குச் சென்றோம். அங்கு ரசிகர்களின் வரவேற்பு எதிர்பாராத வகையில் இருந்தது. அந்த வரவேற்பை உங்களால் கடக்க முடியுமா..! முடியும் என்பதை உங்களுடைய கரவொலி நிரூபித்தது. அதற்கு நன்றி. ரசிகர்கள் அனைவர் மீதும் எனக்கு எப்போதும் மாறாத அன்பு உண்டு.

‘கோப்ரா’ படத்தை ஒட்டுமொத்த குழுவினரும் அனுபவித்து உழைத்தோம்.‌ இந்தத் திரைப்படத்தில் மீனாட்சி, மிருணாளினி, ஸ்ரீநிதி ஆகிய மூவரும் தங்களுடைய பங்களிப்பை அளித்திருக்கிறார்கள்.

இதில் மீனாட்சி, கல்லூரி பெண் வேடத்தில் நடித்திருக்கிறார். அவர் துருதுருவென்று இருப்பார். அனைத்து புதிர்களுக்கும் விடை காணக்கூடிய தூண்டுகோலாக இருப்பார். அவர் படத்தில் பாதி மலையாளம்.. பாதி தமிழ்.. பேசும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

நடிகை மிருணாளினியும் அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காதலியாக உணர்வுபூர்வமான வேடத்தில் தன் மொத்த உழைப்பையும் வழங்கி இருக்கிறார்.

நடிகை ஸ்ரீநிதி, ‘கே ஜி எஃப்’ படத்தின் முதல் பாகம் வெளியாவதற்கு முன், இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் கடும் உழைப்பாளி.

படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து, ‘கோப்ரா’ படத்தினை அறிவிக்கப்பட்ட தேதியில் வெளியிடவேண்டும் என்பதற்காக இறுதி கட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். அதனால் அவர் அவரால் இங்கு வர இயலவில்லை. அவருடைய இயக்கத்தில் வெளியான ‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ என ஒவ்வொன்றும் வித்தியாசமான திரைக்கதையுடன் வெளியானது. அதேபோல் ‘கோப்ரா’ படமும் வித்தியாசமான ஜானரில் தயாராகி இருக்கிறது. அனைவருக்கும் பிடிக்கும்.‌

இந்தப் படத்தில் நான் ஏழு கெட்டப்புகளில் நடித்திருக்கிறேன். அதுவும் இந்த படத்தின் திரைக்கதையில் முக்கியமான அம்சம். இதை கடந்து இந்த திரைப்படம் ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர், எமோஷனல் டிராமா, சயின்ஸ் ஃபிக்சன், ஹை ஆக்டேன் ஆக்சன் சினிமா. என எல்லாமே கலந்து இருக்கும்.

படத்தின் முன்னோட்டம் நாளை வெளியாகும். ‘கோப்ரா’ ஆகஸ்ட் 31ம் தேதி அன்று வெளியாகும். அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ஆதரவளிக்க வேண்டும். ” என்றார்.

இப்படத்தில் இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாணவ மாணவிகளிடம் சீயான் விக்ரம் நடத்திய கலந்துரையாடலில் இடம்பெற்ற சுவராசியமான அம்சங்கள்…

• அந்நியன் படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இந்த படம் ஆனியனைப் போல் உரிக்க உரிக்க வெவ்வேறு லேயர்களை கொண்டிருக்கும்.

• நான் வாலிப வயதில் சைட் அடித்திருக்கிறேன். வேறு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. ஆரோக்கியமான வாழ்க்கையை முறையைத்தான் பின்பற்றி வருகிறேன்.

• இந்த பூமி பெரியது. இதனை எங்கள் தலைமுறையை சேர்ந்தவர்கள் சற்று சொதப்பி விட்டனர். இதனை இன்றைய இளம் தலைமுறையினரான நீங்கள் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். நேர்மறையான அதிர்வுகளால் சுற்றுப்புற சூழலில் உள்ள மாசுகளை அகற்றி, ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க வேண்டும்.

• ‘மகான்’ படத்தில் இடம்பெற்ற காரில் செல்லும் காட்சியில், நானும் துருவ் விக்ரமும் பேசிக்கொண்டே பயணிக்கும் காட்சி…

ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது. அந்த காட்சி படமாக்கப்படும் போது தான், அவருக்குள் இருக்கும் நடிகனை… நடிப்பாற்றலை… கண்டேன். ரசித்தேன்.

• கல்லூரி மாணவ, மாணவிகளின் விருப்பத்திற்கு ஏற்ப பாடலையும் பாடிய விக்ரம், ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற பஞ்ச் டயலாக்கை, தன் பாணியில் பேசி பாராட்டைப் பெற்றார். அத்துடன் மாணவ மாணவிகளின் கேள்விகளுக்கு உடனடியாக பதிலளித்து சீயான் விக்ரம் அசத்தினார்.

Cobra

• “மாணவர்களாகிய நீங்கள் உங்களுக்கு எந்த துறையில் விருப்பம் இருக்கிறதோ… அந்த துறையில் முழுமையான மனதுடன் பணியாற்றினால், நீங்களும் சாதனையாளர் தான். உங்களையும் ஒரு நாள் உலகம் திரும்பி பார்க்கும்.” என சீயான் விக்ரம் தன்னுடைய எண்ணத்தை மாணவர்களின் மத்தியில் பகிர்ந்துக் கொண்ட போது, அவர்களின் கரவொலி விண்ணைப் பிளந்தது.

கோவையிலுள்ள ஜி. ஆர். டி கல்லூரியைத் தொடர்ந்து, ப்ரோஸோன் மால் எனும் கோவையின் பிரபலமான வணிக வளாகத்தில் ‘கோப்ரா’ படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் சீயான் விக்ரம் தலைமையிலான படக்குழுவினர் கலந்து கொண்டனர். அவர்களின் முன்னிலையில் ‘கோப்ரா படத்திற்கு ஆதரவு தாருங்கள்’ என பணிவன்புடன் சீயான் விக்ரம் கேட்டுக் கொண்டார்.

Cobra

Vikram and Cobra team at Coimbatore for promotion

ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படம் ‘கனா’ பட காப்பியா.? நெல்சனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படம் ‘கனா’ பட காப்பியா.? நெல்சனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படத்தை இயக்கி வருகிறார் நெல்சன் திலீப்குமார்.

ஜெயிலர்

இந்த படத்திற்கு ‘ஜெயிலர்’ என்று பெயரிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஓரிரு தினங்களுக்கு முன் படக்குழு வெளியிட்டது.

ஜெயிலர்

இந்த படத்தின் போஸ்டரும் சிவகார்த்திகேயன் நடித்த ‘கனா’ பட போஸ்டரும் ஒரே போல உள்ளது என நெட்டிசன்கள் கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

அதன் விவரத்தை இப்போது இந்த வீடியோவில் பார்க்கலாம்…

Fans comparing Rajinis Jailer and Sivakarthikeyans Kanaa movie

*1 NEWS 1 MIN*: JAILER KANAA போஸ்டர் மட்டும்தான் காப்பியா? நெல்சனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் Rajini filmistreet

https://youtube.com/shorts/XQzTqTZq9YE?feature=share

மதுரைக்காரங்கே பாலா அமீர் என் ஃப்ரெண்ட்ஸ்.; மதுரைன்னாலே மீசை முறுக்குது – விக்ரம்

மதுரைக்காரங்கே பாலா அமீர் என் ஃப்ரெண்ட்ஸ்.; மதுரைன்னாலே மீசை முறுக்குது – விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சீயான் விக்ரம்‘ நடிப்பில் Seven Screen Studio சார்பில் S லலித்குமார் தயாரிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’.

சயின்ஸ்பிக்சன் கதையில் பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 31 உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறது.

இப்படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் இன்று மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ரசிகர்களை சந்தித்தனர். கோலகலமாக ரசிக்ரகளின் ஆராவராத்துடன் இச்சந்திப்பு இனிதே நடந்தேறியது.

கோப்ரா

இவ்விழாவினில்…

நடிகை மீனாட்சி பேசியதாவது…

இப்படத்தில் நான் ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தப்படத்தின் புரமோசனை இன்று தான் துவங்கினோம். மதுரையில் உங்களுடன் அதை துவங்கியது மிகுந்த மகிழ்ச்சி.

ஆகஸ்ட் 31 உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. விக்ரம் சாருக்காக எல்லோரும் படம் பார்ப்பீர்கள் என நம்புகிறேன் எல்லோருக்கும் நன்றி.

நடிகை மிருணாளினி பேசியதாவது…

மதுரைக்கு வந்தது மிகுந்த சந்தோசம் அளிக்கிறது. நீங்கள் தரும் அன்பு பிரமிக்க வைக்கிறது. ‘கோப்ரா’ படத்தில் எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளோம்.

இந்தப்படம் நன்றாக வந்துள்ளது எல்லோரும் தியேட்டரில் போய் படம் பாருங்கள் நன்றி.

நடிகை ஶ்ரீனிதி ஷெட்டி பேசியதாவது…

ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. தமிழில் எனது அறிமுகம் பிரமாண்டமாக அமைந்துள்ளது. ‘கோப்ரா’ படத்தை எல்லோரும் திரையரங்கில் பார்த்து ரசியுங்கள் நன்றி.

கோப்ரா

நடிகர் விக்ரம் பேசியதாவது…

மதுரை வந்தாலே மீசை தானாகவே முறுக்குகிறது உங்கள் அன்பு தான் காரணம். இங்கு நீங்கள் தரும் பிரமிப்பு தருகிறது. அஜய் ஞானமுத்து உங்கள் ஊர்க்காரர் அவர் இயக்கியுள்ள படம் அவரால் படவேலைகளால் வர முடியவில்லை.

‘கோப்ரா’ விக்ரமை பார்த்து சீறிய ரசிகர்கள்.. போலீஸ் தடியடி.; வைரலாகும் வீடியோ

இந்த கல்லூரியில் தான் என் தந்தை படித்தார். மதுரையில் தான் நான் ஹாலிடே கொண்டாடுவேன். என் நண்பர்கள் பாலா அமீர் எல்லாம் இங்கு தான் இருந்துள்ளார்கள். அமீர் மதுரையில் இருந்து ஸ்பெஷலாக உணவுகள் கொண்டு வருவார்.

இன்று மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா சாப்பிட்டேன். கோப்ராவிற்கு வருவோம்.

கோப்ரா படம் பொறுத்தவரை நிறைய புதுமைகள் இதில் இருக்கிறது. எமோஷன் காமெடி ஆக்சன் எல்லாம் கலந்து இருக்கும். எனக்கு படம் மிகவும் பிடித்துள்ளது உங்களுக்கும் பிடிக்கும். படத்தை எல்லோரும் தியேட்டரில் பாருங்கள் நன்றி.

கோப்ரா

இப்படத்தில் இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறது.

Cobra promotion in full swing Vikram Speech at Madurai

நடிகர் தனுஷை பெருமையாக உணர்ந்தேன்.; பாமக தலைவர் அன்புமணி் பாராட்டு

நடிகர் தனுஷை பெருமையாக உணர்ந்தேன்.; பாமக தலைவர் அன்புமணி் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அவெஞ்சர்ஸ்’ பட புகழ் ஜோ ருஸ்ஸோ, அந்தோனி ருஸ்ஸோ சகோதரர்கள் இயக்கிய திரைப்படம் ‘தி கிரே மேன்‘.

கடந்த ஜூலையில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது.

இப்படத்தில் நம்ம தமிழ் நடிகர் தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இவருடன் ரையான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.

தனுஷின் நடிப்பை ரசிகர்களும் ரூஸ்ஸோ சகோதாரர்களும் பாராட்டி இருந்தனர்.

இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி இது குறித்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில்…

மகனுக்காக ஒன்றிணைந்த தனுஷ் & ஐஸ்வர்யா ரஜினி.; இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

“நேற்று ‘தி க்ரேமேன்’ படம் பார்த்து மகிழ்ந்தேன். ஒரு ஹாலிவுட் படத்தில் நடித்த நடிகர் தனுஷ் நடித்ததை பற்றி பெருமையாக உணர்ந்தேன்.

அவரின் அனைத்து முயற்சிகளும் தமிழ்நாடு மற்றும் இந்தியாவிற்கு பல விருதுகளை கொண்டு வரவேண்டும். எனது வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார் அன்புமணி.

Anbumani Ramadoss appreciates Actor Dhanush

Enjoyed watching the movie #TheGrayMan yesterday. Felt proud about Actor @dhanushkraja, acting in a Hollywood movie. My best wishes to Actor Dhanush in all his future endeavours & to bring more laurels to TN & India. @Russo_Brothers

‘கோப்ரா’ விக்ரமை பார்த்து சீறிய ரசிகர்கள்.. போலீஸ் தடியடி.; வைரலாகும் வீடியோ

‘கோப்ரா’ விக்ரமை பார்த்து சீறிய ரசிகர்கள்.. போலீஸ் தடியடி.; வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் , ஸ்ரீநிதி , மீனாட்சி , மிருணாளினி உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ‘கோப்ரா’.

ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படம் அடுத்த வாரம் ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தின் ப்ரோமோஷன் பணிகளை துவங்கியுள்ள பட குழு இன்று திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Vikram fans gathered to welcome Cobra team at Trichy

More Articles
Follows