Breaking: காலா கதை திருட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

Breaking: காலா கதை திருட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Supreme Court rejected case against Rajinis Kaala movie story theft issueசூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ‘காலா’ திரைப்படம் நாளை (7-ந் தேதி) வெளியாகிறது.

உலகம் முழுக்க ரஜினிக்கு ரசிகர்கள் உள்ளதால் படத்துக்கு வரவேற்பு எழுந்துள்ளது.

ஆனால் காவிரி விவகாரத்தில் ரஜினி தமிழகத்திற்கு ஆதரவாக பேசியதால், கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் ‘காலா’ படத்துக்கு தடை விதிக்க கோரி ராஜசேகரன் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், “காலா என்ற கரிகாலன் படத்தின் கதையும், தலைப்பும் என்னுடையது. எனவே ‘காலா’ படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும்” என அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு இன்று (ஜீன் 6) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை ஏற்க முகாந்திரம் இல்லை என்று கூறி மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

‘காலா’ படத்துக்கு தடை விதிக்க கோரி ராஜசேகரன் ஏற்கெனவே சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ‘காலா’ படத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது என்பது இங்கே ஹைலைட்.

Supreme Court rejected case against Rajinis Kaala movie story theft issue

Exclusive : கர்நாடகாவில் காலா கன்பார்ம்; போலீஸ் பாதுகாப்புடன் 130 தியேட்டர்களில் ரிலீஸ்

Exclusive : கர்நாடகாவில் காலா கன்பார்ம்; போலீஸ் பாதுகாப்புடன் 130 தியேட்டர்களில் ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Official Kaala movie releasing in 130 theatres in Karnatakaரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ திரைப்படம் நாளை ஜீன் 7 அன்று உலகமெங்கும் வெளியாகிறது.

இதனிடையில் காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினி பேசியதால், காலா படத்தை கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என்று கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.

இந்நிலையில் நேற்று கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சாரா கோவிந்த், காவிரி மேலாண்மை ஆணையம் வேண்டாம் என ரஜினிகாந்த் தெரிவிக்க வேண்டும், காவிரி விவகாரத்தில் இரு மாநில அரசுகள் – விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ரஜினிகாந்த் கூற வேண்டும் என நிபந்தனை விதித்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது காவிரி மேலாண்மை பிரச்சனையில் தீர்ப்பு என்ன இருக்கோ அதை செயல் படுத்த சொன்னேன். அதில் என்ன தவறு உள்ளது.

இதற்காக காலா படத்தை எதிர்ப்பது சரியல்ல என்று பேசினார்.

மேலும் காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நம்பிக்கை உள்ளது. கன்னட மக்கள் காலா படத்தை ஆதரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் காலா படத்தை கர்நாடகாவில் சி நிறுவனம் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

மேலும் கர்நாடகாவில் 130 தியேட்டர்களில் வெளியிட திட்டம் இருப்பதாகவும் சி நிறுவன உரிமையாளர் கனகபுரா சீனிவாஸ் அறிவித்துள்ளார்.

Official Kaala movie releasing in 130 theatres in Karnataka

Big News: பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற விஜய்யிடம் ரஜினி கத்துக்கனும்.. – அமீர்

Big News: பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற விஜய்யிடம் ரஜினி கத்துக்கனும்.. – அமீர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth must learn from Vijay says Director Ameerதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர்களில் ரஜினி, கமல் உள்ளிட்டோர் நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இவர்கள் தூத்துக்குடிக்கு சென்ற போது ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் கூடினர். வரவேற்பும் அதிகளவில் கொடுக்கப்பட்டது.

மேலும் ரஜினி சென்றபோது விமான நிலையத்தில் பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் இன்று அதிகாலை யாருக்கும் தெரிவிக்காமல் நடிகர் விஜய் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுக்கே சென்று ஆறுதல் கூறினார். 1 லட்சம் நிதியுதவியும் அளித்தார்.

போட்டோக்களை தவிர்க்க கூறினார். அப்படியிருந்தும் அவரின் உத்தரவை மீறி படங்கள் வெளியானது.

தற்போது விஜய்யின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகீன்றனர்.

இந்நிலையில், “பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறுவது எப்படியென்று விஜய்யிடம் ரஜினி கற்றுக்கொள்ள வேண்டும்!” என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

Rajinikanth must learn from Vijay says Director Ameer

கபாலி-தெறி படத்தயாரிப்பாளருடன் மீண்டும் இணையும் சிம்பு

கபாலி-தெறி படத்தயாரிப்பாளருடன் மீண்டும் இணையும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor simbuமணிரத்னம் இயக்கி வரும் செக்கச் சிவந்த வானம் என்ற படத்தை எந்த பிரச்சினையும் இல்லாமல் முடித்துக் கொடுத்துவிட்டார்.

இதனையடுத்து அதிரடி அறிவிப்பாக 4 படங்களை அறிவித்துள்ளார்.

அதில் தனது 37வது படத்தில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுடன் இணைகிறார்.

ரஜினி நடித்த கபாலி, விஜய் நடித்த தெறி ஆகிய படங்களை அண்மையில் தயாரித்திருந்தார் தாணு. இந்த இரு படங்களும் மாபெரும் வெற்றி பெற்றது.

விரைவில் இவர் சிம்பு நடிக்கவுள்ள படத்தை தயாரிக்கவுள்ளார்.

இதற்கு முன்பே துரை இயக்கிய சிம்புவின் தொட்டி ஜெயா படத்தை தாணு தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லைகா தயாரிப்பில் VTV Part 2 படத்தில் நடிக்கும் சிம்பு

லைகா தயாரிப்பில் VTV Part 2 படத்தில் நடிக்கும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbuமணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

இதற்கு முன்பே ஓவியா நடிக்கும் `90ml’ படத்துக்கு இசையமைத்து வருகிறார் என்பதை பார்த்தோம்.

இதனிடையில் பெரியார் குத்து என்ற ஆல்ப பாடலுக்கு பாடி நடனமாடவும் திட்டமிட்டுள்ளார்.

சில வருடங்களுக்கு முன் சிம்பு, த்ரிஷா நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா படம் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்றது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் மாதவன் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது சிம்புவே நடிக்கவுள்ளார். ஆனால் படத்தின் தலைப்பை சற்று மாற்றியுள்ளனர்.

`விண்ணைத்தாண்டி வருவேன்’ என்று தலைப்பிட்டு அதன் இரண்டாம் பாகமாக உருவாக்கவுள்ளனர்.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, கவுதம் மேனன் இயக்க, ஏஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

தனது 35வது படத்தை தானே இயக்கி நடிக்கும் சிம்பு

தனது 35வது படத்தை தானே இயக்கி நடிக்கும் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

STR aka Simbu will direct and act in his 35th filmபீப் பாடல் என்ற சர்ச்சையில் சிக்கிய போது திடீரென ஒரு இங்கிலீஷ் படத்தை இயக்கி நடிக்க போவதை அறிவித்தார் சிம்பு.

அந்த படத்திற்கு இடைவேளை கிடையாது என்பதையும் அப்போதே தெரிவித்திருந்தார்.

இடையில் என்ன ஆனதோ? அதுப்பற்றிய தகவல்கள் இல்லாமல் போனது.

தற்போது அப்பட குறித்த தகவல்கள் வந்துள்ளது.

அந்த படத்தை விரைவில் சிம்பு ஆரம்பிக்கவுள்ளதாகவும் அது அவரின் 35வது படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

STR aka Simbu will direct and act in his 35th film

More Articles
Follows