தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிகிச்சைக்கு MGM மருத்துவமனையில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தகவல்கள் வந்தன.
எனவே இதற்கு விளக்கமளிக்க மருத்துவமனை நிர்வாகிகள் மருத்துவர்கள் & எஸ்பிபி மகன் சரண் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது எஸ்பிபி சிகிச்சைக்கான பில் கட்டணம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு எஸ்பி சரண் பதிலளித்தாவது…
” MGM மருத்துவமனைக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நல்ல புரிதல் உள்ளது.
சிகிச்சைக் கட்டணத்தைப் பற்றியே ஏன் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? 10 கோடி ரூபாயாக இருந்தால் கூட நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? ரூ. 50 லட்சமாக இருந்தால் என்ன செய்வீர்கள்.?
நாங்கள் என் அப்பாவை இழந்திருக்கிறோம்.
அதிலிருந்து மீள எங்களுக்கு அவகாசம் கொடுங்கள்.
தொடர்ந்து எழும் வதந்திகளை குறித்து தொடர்பு கொண்டு விசாரிக்காதீர்கள்.
நான் சினிமாக்காரன்.. சினிமா எடுக்க வருவேன். உங்களை சந்திப்பேன்” என பேசினார்.
SP Charan refutes rumours about father’s unpaid hospital bills