இசையால் வருடும் ‘லிட்டில் மேஸ்ட்ரோ’ RS ரவிப்ரியன்.; புதுவசந்தம் தோழியாக தோள் கொடுக்கும் செண்பா

இசையால் வருடும் ‘லிட்டில் மேஸ்ட்ரோ’ RS ரவிப்ரியன்.; புதுவசந்தம் தோழியாக தோள் கொடுக்கும் செண்பா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாபெரும் இசை கலைஞர் பாலகிருஷ்ணனின் பேரன் வழித்தோன்றலாய் வந்து இசையை முறையாக கற்றுக் கொண்டவர் ஆர் எஸ் ரவிப்பிரியன்.

இவரது பூர்வீகம் தமிழ்நாடு என்றாலும் கனடா நாட்டில் வளர்ந்தார். சைக்காலஜி பயின்ற இவர் படிக்கும்போதே இசை ஆல்பங்களை வெளியிட்டவர்.

நாள்களும் வருடங்களும் செல்ல செல்ல இசை வெறியும் இவருக்குள் ஊறிக் கொண்டே ஆற்றாய் பெருக்கெடுத்துள்ளது.

எனவே மீண்டும் தன் இசைப்பணி தாகம் தீர்க்க தமிழகம் வந்துள்ளார்.

மெட்டுக்கு பாட்டு எழுதுவதை விட பாட்டுக்கு மெட்டு போடுவதே ஒரு இசைக்கலைஞனின் உயர்ந்த செயலாகும் என தெரிவிக்கிறார் இவர்.

சினிமா பாடகர்கள் பலரின் பாராட்டையும் பெற்ற இசையமைப்பாளராக வளர்ந்திருக்கிறார் இவர்.

மேகம் , சாந்தன், உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் ரவிபிரியன்.

ஏ எல் ராஜா இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் சூரியனும் சூரியகாந்தியும், கரிமூட்டம், வடசேரி மற்றும் Hi5 உள்ளிட்ட படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

சில வருடங்களுக்கு முன் இவர் இசையமைத்து வெளிவந்த ”காற்று” என்ற ஆல்பம் பெரியளவில் வரவேற்பைப் பெற்றது.

ரவிப்பிரியன்

11 பாடல்கள் கொண்ட இந்த பிரம்மாண்ட ஆல்பத்தில் சுமார் 22 முன்னணி பாடகர்களை பாட வைத்து சாதனை படைத்துள்ளார் இசையமைப்பாளர் ஆர் எஸ் ரவிபிரியன்.

புகழ்பெற்ற எஷிதா மீடியா நிறுவனத்தால் ஆர் எஸ் ரவிபிரியனுக்கு லிட்டில் மாஸ்ட்ரோ என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், 2022ம் ஆண்டிற்கான ‘திரையிசை காவலன்’ விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

திருக்குறள் பாட்டரங்கம் சார்பில் “திருக்குறள் இசைக்கவி விருது” என்ற விருதும் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்திருக்கும் இவர், பல ஆல்பங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

இசைஞானி இளையராஜா ஏ ஆர் ரகுமான் ஆகியோர் தன் மனம் கவர்ந்த இசை அமைப்பாளர்கள் என்று தெரிவித்த இவர் மறைந்த எஸ்.பி பாலசுப்ரமணியம் தான் தன் காட்பாதர் எனவும் தெரிவித்தார்.

இசை குடும்பத்தில் தோன்றி ஒரு இமாலய வெற்றிக்காக காத்திருக்கும் ரவி பிரியனுக்கு இனி வாழ்நாளெல்லாம் புதுவசந்தம் மலர வாழ்த்துக்கள்.

‘புது வசந்தம்’ படத்தில் தன் ஆண் நண்பர்களுக்கு உதவி செய்ய வருபவராக சித்தாரா கேரக்டர் இருக்கும்.

தற்போது பல சித்தாராக்கள் உருவெடுத்து ஒன்றாகி செண்பவாக வந்து என் வாழ்வில் புது வசந்தம் கொடுக்க தோளோடு தோள் நிற்கும் தோழியாக இருக்கிறார் என ரவி பிரியன் தங்கள் நட்பை பற்றி தெரிவித்து இருக்கிறார்.

செண்பா ஒரு முழு நேர கவிஞர் என்றாலும் தன்னுடைய வெற்றிக்காகவும் உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரை தோழியாக பெற்றது நான் செய்த பாக்கியம் எனவும் ரவி பிரியன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ரவிபிரியன்

Journey of Music Composer RS Ravi Priyan

மோகன்லால் நடிகராக இல்லையென்றால் ஜெயிலில் இருப்பார்.; ஐகோர்ட் அதிருப்தி

மோகன்லால் நடிகராக இல்லையென்றால் ஜெயிலில் இருப்பார்.; ஐகோர்ட் அதிருப்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2012ஆம் ஆண்டில் மலையாள நடிகர் மோகன்லால் வீட்டில் வருமான வரித்துறை சோதனை செய்தனர்.

அப்போது அவரது வீட்டில் நான்கு ஜோடி யானை தந்தங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து மோகன்லால் மீது கேரள வனத்துறை வழக்கு பதிவு செய்தது.

இதனையடுத்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என கேரள அரசு கேட்டுக் கொண்டது.

ஆனாலும் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

பின்னர் அடுத்த கட்ட விசாரணையில்.. “மோகன்லால் வீட்டில் வளர்க்கப்பட்ட யானை இறந்து விட்டதால் அதனுடைய தந்தங்களை அவர் வைத்திருப்பதாக கேரள அரசு வழக்கு விசாரணை தெரிவித்தது.

இந்த நிலையில்.. “ஒரு சாமானியனுக்கு இதுபோன்று கேரள அரசு சிபாரிசிக்காக முன் வரவில்லை. ஆனால் ஒரு நடிகருக்காக வந்துள்ளது.

ஒருவேளை மோகன்லால் நடிகராக இல்லாவிட்டால் அவர் நிச்சயம் ஜெயிலில் இருந்திருப்பார் என அதிருப்தி கருத்தை தெரிவித்துள்ளது ஐகோர்ட்.

இது கேரளா மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகருக்கு ஒரு சட்டம்.? மக்களுக்கு ஒரு சட்டமா? என மலையாளிகள் மனம் கொதித்துள்ளனர்.

Ivory case Kerala HC reserves Mohanlals petition updates

லோகேஷ் இயக்கும் விஜய் படத்தில் நடிக்க மறுத்தது ஏன்.? விஷால் விளக்கம்

லோகேஷ் இயக்கும் விஜய் படத்தில் நடிக்க மறுத்தது ஏன்.? விஷால் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ‘வாரிசு’ படம் 2023 பொங்கல் தினத்தில் வெளியாகிறது.

இதனையடுத்து லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார்.

வழக்கம் போல லோகேஷின் இந்த படமும் கேங்ஸ்டர் கதையாக உருவாக உள்ளதால் இதில் இரண்டு மூன்று வில்லன்கள் நடிப்பதாக கூறப்பட்டு வருகிறது.

சஞ்சய்தத் அர்ஜுன் பிரித்திவிராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில் முக்கிய வேடத்தில் விஷால் நடிப்பதாகவும் தகவல்கள் வந்தன.

தற்போது இது குறித்து விஷால் கூறியுள்ளதாவது…

“நான் விஜய் படத்தில் நடிப்பதை விட அவரது படத்தை இயக்க ஆவலாக உள்ளேன்.

தற்போது மார்க் ஆண்டனி, துப்பறிவாளன் 2 ஆகிய பட பணிகளில் பிஸியாக இருப்பதால் விஜய் படத்தில் நடிப்பது சாத்தியமும் இல்லை.

2024 விஜய் படத்தை நான் இயக்குவேன் அதற்கான கதையுடன் அவரை அணுகுவேன்” என விஷால் தெரிவித்துள்ளார்.

விஷால்

Why Vishal refuse to be part of Thalapathy 67

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சரத்குமார்…?

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சரத்குமார்…?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சரத்குமார் தற்போது நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.

அவருக்கு வயிற்றுப்போக்கு காரணமாகவும், நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது மனைவி ராதிகா மற்றும் மகள் வரலட்சுமி அவரை கவனித்து வருகின்றனர்.

சரத்குமார் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.

Actor Sarathkumar admitted to hospital

ரஜினியின் ‘பாபா’ ரீ ரிலீஸ் முதல் நாள் வசூல் அப்டேட்

ரஜினியின் ‘பாபா’ ரீ ரிலீஸ் முதல் நாள் வசூல் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2002 ஆண்டில் ஆகஸ்ட் 15ஆம் தேதி பெரும் பரபரப்பை கிளப்பி வெளியான திரைப்படம் ‘பாபா’.

கதை திரைக்கதை எழுதி இந்த படத்தை ரஜினிகாந்த் தயாரித்து இருந்தார்.

தற்போது சரியாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று டிசம்பர் 10ஆம் தேதி ‘பாபா’ படம் ரீ ரிலீஸ் ஆனது.

இப்படத்தை ரசிகர்கள் புதிய படம் போல் மாபெரும் அளவில் கொண்டாடியுள்ளனர்கள்.

இந்நிலையில், பாபா ரீ ரிலீசான திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாள் மட்டுமே ரூ. 80 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Baba Re-Release First Day Collection Update

தனுஷின் அடுத்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கும் சஞ்சய் தத்…

தனுஷின் அடுத்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கும் சஞ்சய் தத்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யஷ் நடித்த ‘கேஜிஎஃப் 2’ படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் சஞ்சய் தத்.

இவர் தற்போது, தனுஷ் படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இயக்குனர் சேகர் கம்முலுடன் தனுஷ் நடிக்கும் படத்தில் வில்லன் வேடத்தில் சஞ்சய் தத் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது வில்லன் கதாபாத்திரத்திற்கு 10 கோடி ரூபாய் கொடுக்க தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு 2023 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரித்து வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

மேலும், விஜய்யின் ‘தளபதி 67’ படத்திலும் சஞ்சய் தத் வில்லன் வேடத்தில் நடிக்க உள்ளார்.

Sanjay Dutt to play the villain in Dhanush next movie

More Articles
Follows