தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரின் உடல்நிலை குறித்து எஸ்பி. சரண் அவ்வப்போது வீடியோவில் பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் இன்று மாலை ரஜினி, கமல், பாரதிராஜா, இளையராஜா உள்ளிட்ட திரை பிரபலங்கள் இணைந்து கூட்டுப்பிரார்த்தனை செய்ய மக்களிடம் வேண்டுகோள் விடுத்த்னர்.
இன்றைய வீடியோவில் சரண் அவர்கள் எஸ்பிபி.யின் உடல்நிலை குறித்து பேசியுள்ளார்.
அதில்.. எஸ்பிபி உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை எனவும் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்துள்ள ஒவ்வொருவருக்கும், பிரார்த்திக்கும் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
அனைவரது பிரார்த்தனையும் எஸ்பிபியை மீட்டெடுக்கும் என நம்புகிறேன் என உருக்கமாக பேசியுள்ளார்.