தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு வெண்டிலேட்டா், எக்மோ கருவிகளுடன் ஐசியூ பிரிவில் தொடா்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளது. முழுமையாக நினைவு திரும்பியுள்ளது.
எஸ்.பி.பி.யின் உடல்நிலையைத் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா் என்று எம்ஜிஎம் மருத்துவமனை சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து அவருடைய மகனும் பாடகருமான எஸ்.பி. சரண் கூறியதாவது…
கொரோனா சோதனையில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது.
எஸ்.பி.பிக்கு பொருத்தப்பட்ட வெண்டிலேட்டர் நீக்கப்பட்டுள்ளது.
அவர் ஐபேடில் கிரிக்கெட்டென்னிஸ் போட்டிகளை பார்த்து வருகிறார்.
தான் பேச நினைப்பது எல்லாம் பேப்பரில் எழுதி காண்பிக்கிறார். இவ்வாறு எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் எஸ்.பி.பி அவர்களுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
25 நாட்களாக தொடர்ந்து செயற்கை சுவாச சிகிச்சையும், எக்மோ கருவியும் பொருத்தப்பட்டதால் அவர் நுரையீரல் குணமடைய தாமதம் ஏற்பட்டுள்ளதாம்
இதேநிலை நீடித்தால் நீண்ட நாட்கள் சிகிச்சையை தொடர முடியாது என்பதால், அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
Legendary singer SPB latest health updates