இளையராஜா இசையில் உருவமாக… எனக்குள் இருக்கும் வேறொரு நடிகன்..; பூரிப்பில் சூரி

இளையராஜா இசையில் உருவமாக… எனக்குள் இருக்கும் வேறொரு நடிகன்..; பூரிப்பில் சூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி, கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘விடுதலை’.

இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி பேசியதாவது…

“எத்தனையோ முறை காமெடியனாக மேடை ஏறி உள்ளேன். ஆனால் முதல் முறையாக கதை நாயகனாக மேடை ஏறும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இளையராஜாவை இசை கடவுள் என்றே சொல்வேன். அவரது இசையில் பாடலில் நான் ஒரு உருவமாக இருப்பது மகிழ்ச்சி.

சூரி

கதாநாயகர்களுக்கு இணையாக அதிக அளவு ரசிகர்களை கொண்ட இயக்குநர்களில் வெற்றிமாறனும் ஒருவர். அவர் படத்தில் நான்கு காட்சிகளாவது நடிக்க மாட்டோமா என்று பல சமயங்களில் ஏங்கி இருக்கிறேன். அவரை நேரில் சந்தித்து பேசிய பொழுது இந்த கதை குறித்து சொன்னார்.

ஒவ்வொரு கதாபாத்திரம் பற்றி சொல்லி வரும் பொழுது எல்லாவற்றிற்கும் நடிகர்களை கமிட் செய்து விட்டார். அப்போது லீட் ரோல் யார் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது நீங்கள் தான் அதை செய்கிறீர்கள் என்று சொன்னார்.

நான் சந்தோஷத்தில் எழுந்த போது அந்த வானத்தில் முட்டி இருப்பேன்.

பிறகு ‘வடசென்னை’, ‘அசுரன்’ படங்கள் வெளியாகி வெற்றி பெற்ற பிறகு வாய்ப்பு வருமா என்று எதிர்பார்த்து இருந்தேன். என் நம்பிக்கை வீண் போகாமல் வெற்றிமாறன் அழைத்து வாய்ப்பு கொடுத்தார். எனக்குள் இருக்கும் வேறொரு நடிகனை தட்டி எழுப்பினார். அவருக்கு நன்றி”.

விடுதலை

Soori talks about his experience with ilaiyaraja and Vetrimaran

வசதியாய் பழகிய நடிகர்களுக்கு ‘விடுதலை’ சிரமம்.. நன்றியோடு மன்னிப்பு கேட்கிறேன்.. – வெற்றிமாறன்

வசதியாய் பழகிய நடிகர்களுக்கு ‘விடுதலை’ சிரமம்.. நன்றியோடு மன்னிப்பு கேட்கிறேன்.. – வெற்றிமாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி, கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘விடுதலை’.

இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது…

“இந்தப் படம் எல்லா வகையிலும் எல்லாருக்கும் சவாலானதாக இருந்தது. இந்தப் படத்தில் வேலை பார்த்த என்னுடைய அணி, தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் என அனைவருக்குமே நன்றி அனைவரும் மிக கடினமான உழைப்பை கொடுத்துள்ளனர்.

இந்த கதையை கொடுத்த ஜெயமோகன் சாருக்கு நன்றி. எந்த ஏரியாவில் கேட்டாலும் அவரிடம் ஏற்கனவே ஒரு கதை இருக்கும். அந்த அளவுக்கு எழுதி குவித்து இருக்கிறார். ராஜா சாரிடம் வேலை பார்த்தது முன்பே சொன்னது போல மிகப்பெரிய அனுபவம்.

நான் அடிக்கடி கோபப்படுவேன். கோபம் என்பது என்னுடைய இயலாமை தான். அந்த நேரத்தில் அந்த கோபம் எல்லாம் என்னுடைய உதவி இயக்குநர்கள் மேல்தான் திரும்பும்.

இந்த சமயத்தில் அவர்களுக்கு நன்றியோடு சேர்த்து மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். இந்த படத்துக்கு முதலில் நான்கு கோடி ரூபாய் பட்ஜெட் தான் தயாரிப்பாளர் எல்ரெட் குமாரிடம் பற்றி சொன்னேன்.

வெற்றிமாறன்

ஆனால், அதையும் தாண்டி மூன்று மடங்கு வரை போய்விட்டது. அதை எல்லாம் கேட்காது இந்த படத்தின் மீது அவர் ஒரு பார்வையும் நம்பிக்கையும் வைத்திருந்தார். அது முக்கியமானது.

சூரியை வைத்து ஒரு எளிய படம் எடுத்துக்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர் உள்ளே வந்த பிறகு இன்னும் படம் பெரிதானது. சேதுவை வைத்து கிட்டத்தட்ட 65 நாட்கள் படம் பிடித்தோம். முதல் பாகத்தில் அவருடைய காட்சிகள் குறைவாக இருந்தாலும், அவரைப் பற்றி தான் பேசி இருப்போம். இரண்டாம் பாகத்தில் படம் முழுக்க வருகிறார்.

சில அரசியல் சிந்தனைகளை எல்லாம் படமாக்குவதற்கு விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் இருப்பது மிகவும் நம்பிக்கை கொடுத்தது. 25 பக்க காட்சிகளை எல்லாம் இரண்டு மணி நேரத்தில் எடுத்து இருக்கிறோம்.

வசதியாக இருந்து பழகிய நடிகர்களுக்கு ‘விடுதலை’ போன்ற படத்தில் நடிப்பது மிகவும் சிரமமானது. கௌதம் மேனன் நடிக்க உள்ளே வந்ததை விட ராஜீவ் நடிக்க ஒத்துக் கொண்டதுதான் ஆச்சரியமாக இருந்தது. அவரும் எளிதாக இந்த கதையில் ஒன்றிப் போனார்.

இந்த கதை என்னுடைய விருப்பம் தான். அதற்கு ஒத்துழைத்து வந்த அனைவருக்கும் நன்றி. என்னுடைய உழைப்பையும் வெற்றியையும் என்னுடைய குரு பாலு மகேந்திராவுக்கும் என்னுடைய அசிஸ்டன்ட்ஸ்க்கும் சமர்ப்பிக்கிறேன்” என்றார்.

விடுதலை

Viduthalai movie is tough for few actors says Vetrimaaran

என் மன உணர்வை உள்வாங்கி பாடலாக்கி அதே உணர்வை இளையராஜா கொடுத்தார் – வெற்றிமாறன்

என் மன உணர்வை உள்வாங்கி பாடலாக்கி அதே உணர்வை இளையராஜா கொடுத்தார் – வெற்றிமாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி, கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘விடுதலை’.

இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது…

“‘விடுதலை’ படத்தின் தொடக்கம் ராஜா சார்தான். 45 நிமிடங்கள் படம் எடுத்து விட்டுதான் அவரிடம் காண்பித்தேன். அந்த காட்சிகளைப் பார்த்துவிட்டு ராஜா சார் இசையமைத்த பாடல்தான் வழி நெடுக காட்டுமல்லி பாடல்.

இந்த பாடலுக்கு இசைமைக்கும்போதே, இந்தப் பாடலை நான் எழுதுகிறேன் என்று சொல்லிதான் எழுதினார். பின்னணி இசையும் கேட்டேன்.

என் மனதில் ஒரு உணர்வு இருக்கிறது என்று அதை அவரிடம் விவரித்தேன். அதை அவர் உள்வாங்கி பாடல் ஆக்கி ஒலியாக அதை எனக்கு கொடுத்த போது மீண்டும் அந்த உணர்வு எனக்கு கிடைத்தது. அது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது.

ராஜா சாரின் மியூசிக்கல் மைண்ட் எப்படி வேலை செய்கிறது என்பதை அருகில் இருந்து பார்ப்பது எனக்கு மிகப்பெரிய பரிசு என்று சொல்வேன். அவர் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள் எனக்கு மிகப்பெரிய கற்றல். நாங்கள் எல்லோருமே உங்கள் பாடல்களை கேட்டு வளர்ந்தவர்கள் தான் அதை சந்தோஷத்தோடு உங்களை இசையை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம்” என்றார்.

விடுதலை

We grown up with ilaiyaraja music says Vetrimaran

1500 படங்களுக்கு இசையமைத்த பிறகு சொல்கிறேன்.. வெற்றிமாறன் முக்கியமானவர்.. – இளையராஜா

1500 படங்களுக்கு இசையமைத்த பிறகு சொல்கிறேன்.. வெற்றிமாறன் முக்கியமானவர்.. – இளையராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எல்ரெட் குமார், ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடியத் திரைப்படம் ‘விடுதலை’.

இசைஞானி இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (08.03.2023) நடைபெற்றது.

இசைஞானி இளையராஜாவின் பாடல்களோடு விழா தொடங்கியது.

விழா நாயகன் இளையராஜா பேசியதாவது,..

” இந்தப்படம் திரையுலகம் இதுவரை சந்திக்காத களத்தில் நடக்கும். அவருடைய ஒவ்வொரு கதையும் வெவ்வேறு திரைக்கதை. 1500 படங்களுக்கு இசையமைத்த பிறகு சொல்கிறேன்.

வெற்றிமாறன் திரையுலகிற்கு முக்கியமான இயக்குநர். இந்தப் படத்தில் இதுவரை நீங்கள் கேட்காத இசையை கேட்பீர்கள்” என்றார்.

விடுதலை

Vetrimaaran is important director in Cinema says ilaiyaraaja

BIG BREAKING ரஜினிக்காக காத்திருந்த தேசிங்கு.; தட்டி தூக்கிய கமல் – சிம்பு கூட்டணி

BIG BREAKING ரஜினிக்காக காத்திருந்த தேசிங்கு.; தட்டி தூக்கிய கமல் – சிம்பு கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

துல்கர் சல்மா ரக்சன் ரித்து வர்மா நடித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற படத்தை இயக்கியவர் தேசிங்கு பெரியசாமி.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இந்த படம் அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து தூள் கிளப்பியது.

இந்த படத்தைப் பார்த்து அனைவரும் பாராட்டிய வேளையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் பாராட்டுகளை தெரிவித்தார்.

அப்போது தனக்கும் ஒரு கதை இருந்தால் ரெடி பண்ணுங்க என ரஜினி தெரிவித்து இருந்தார்.

மேலும் தேசிங்கு பெரியசாமி தீவிர ரஜினி ரசிகர் என்பதால் இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது.

ஆனால் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ரஜினி நடிக்காமல் நெல்சன் இயக்கத்தில் நடிப்பது முடிவானது.

அதன் பின்னர் தன் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ஒரு படம், ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்த படங்களை கமிட்டானார்.

ரஜினிக்காக காத்திருந்த தேசிய பெரியசாமி வெறுத்துப் போனார்.

இந்த நிலையில் சிலம்பரசன் நடிக்கும் அவரின் 48வது படத்தை தேசிங்கு இயக்குவார் என சற்று முன் அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தை கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார்.

Kamal and Desinghu Periysamy combo for STR 48

மேலும் இது குறித்து பக்கத்தில் கமல் கூறியதாவது…

சினிமா, தலைமுறைகளை இணைக்கிறது; இடைவெளிகளைக் குறைக்கிறது. இளமைக்கும் திறமைக்கும் வாழ்த்துகள்! @SilambarasanTR_ @desingh_dp

#STR48 #BLOODandBATTLE #RKFI56_STR48

#Mahendran @RKFI @turmericmediaTM @magizhmandram https://t.co/nIcmVjrBHk

‘சப்தம்’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்த லைலா

‘சப்தம்’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்த லைலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி நடித்து வரும் படம் ‘சப்தம்’.

இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

‘சப்தம்’ படத்தின் முதல் ஷெட்யூல் சில வாரங்களுக்கு முன்பு மூணாறில் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

நடிகை லட்சுமி மேனன் தினங்களுக்கு முன் ‘சப்தம்’ படப்பிடிப்பில் இணைந்தார்.

இந்நிலையில், தற்போது நடிகை லைலா ‘சப்தம்’ படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

நடிகை லைலா ‘சப்தம்’ படத்தில் இணைந்ததை இயக்குனர் அறிவழகன் தனது ட்விட்டர் பக்கத்தில், “புதிய பரிமாணத்தில் சப்தம் படத்தொகுப்பில் இணைந்த பசுமையான நடிகை லைலா அவர்களை வரவேற்கிறோம்” என்று எழுதி இருந்தார்.

லைலா

Laila joined the shooting of ‘Sabdam’ movie

More Articles
Follows