தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நேற்று நவம்பர் 22ல் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வாக்கு செலுத்த வந்திருந்தார் சிவகார்த்திகேயன்.
அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்தாவது…
“கொரோனா காலத்தில் நாம் எல்லோரும் பாரம்பரிய காலத்துக்கு திரும்பிவிட்டோம்.
கை கழுவி விட்டு தான் எல்லோரும் சாப்பிடுகிறோம். யாரை பார்த்தாலும் கைகூப்பி வணக்கம் சொல்கிறோம்.
தியேட்டர்கள் திறந்தவுடன் மக்கள் வர ஆரம்பித்துள்ளனர்.
அனைத்து வியாபாரங்களும் இப்போதுதான் கொஞ்சம் சகஜ நிலைக்கு வருகின்றன.
‘டாக்டர்’ படத்தில் ஒரு பாடல் மட்டும் படமாக்கப்படாமல் இருந்தது. அதை அரசு சொன்ன வழிகாட்டுதலுடன் இப்போது படமாக்கினோம்.
புதிய படத்தினை ஓடிடியில் வெளியிட வேண்டுமா அல்லது திரையரங்கில் வெளியிட வேண்டுமா என்பது தயாரிப்பாளர்களின் விருப்பம்.
என்னைப் பொறுத்தவரை ஒரு படம் அனைத்து மக்களிடமும் சென்று சேர வேண்டும்”
இவ்வாறு சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.
Sivakarthikeyan speech at TFPC election