ஆப்பிள் பாக்ஸில் ஏறி நின்று வில்லனுடன் நடித்த சிவகார்த்திகேயன்

ஆப்பிள் பாக்ஸில் ஏறி நின்று வில்லனுடன் நடித்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள “டாக்டர்” திரைப்படம், ரசிகர்களிடையேயும் வர்த்தக வட்டாரங்களிடையேயும் இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கபடும் படங்களில் ஒன்றாக உள்ளது. இப்படத்தை Sivakarthikeyan Productions உடன் இணைந்து, KJR Studios சார்பில் கோட்டபாடி J ராஜேஷ் தயாரித்துள்ளார். உலகமெங்கும் அக்டோபர் 9 ஆம் தேதி, இப்படம் வெளியாகவுள்ள நிலையில், பட வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வில்

நடிகர் சுனில் ரெட்டி பேசியதாவது….

இந்தப்படத்தில் ரௌடியாக நடிக்கிறாயா என்று இயக்குநர் கேட்டார். நான் தயக்கத்தில் தான் ஓகே என்றேன். தாடி வளர்க்க சொன்னார் வளர்த்துக்கொண்டே இருந்தேன். படத்தில் மிக அழகாக என்னை பயன்படுத்தியுள்ளார்.
நான் பார்க்க தான் டெரர், உண்மையில் மிக பயந்த சுபாவம் தான். இந்தப்படம் ஒரு அழகான பொழுதுபோக்கு படம், அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகர் ரெடின் பேசியதாவது…

இந்தப்படம் மிக கலகலப்பாக இருந்தது. நான் நடித்த காட்சிகள் நிர்மல் கட் பண்ணிவிடுவாரோ என்ற பயம் இருந்தது. நெல்சன் என்னை வித்தியாசமாக காட்டியிருக்கிறார். படம் முழுக்க பிரமாண்ட செட் போட்டு தான் படம் எடுத்திருக்கிறோம். பாருங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகை அர்ச்சனா பேசியதாவது…

இந்த மகிழ்ச்சியை தெரிவிக்க வார்த்தைகளே இல்லை. எனக்கும் என் மகளுக்கும் ஒரு சேஃபான உணர்வை தந்தார்கள். இந்தப்படத்தில் ஒரு குடும்பமாக தான் வேலை பார்த்தோம் மிக அழகான படமாக, அனைவருக்கும் பிடிக்கும் படமாக இப்படம் இருக்கும். கண்டிப்பாக அனைவரும் தியேட்டரில் போய் படம் பாருங்கள் நன்றி.

நடிகர் வினய் பேசியதாவது….

நெல்சன், சிவா உங்கள் இருவருக்கும் நன்றி. இந்த 15 வருடத்தில் 15 படங்கள் பன்ணியிருக்கிறேன். அனைவருடனும் இன்றும் நல்ல உறவு இருக்கிறது. இந்தப்படத்தில் வாய்ப்பு கிடைத்ததே ஒரு கனவு நிறைவேறியது போலவே இருந்தது. இந்தப்படம் முழுதுமே ஒரு இனிமையான பயணமாக இருந்தது. அனைவருக்கும் இப்படம் பிடிக்கும். உங்களுடன் மீண்டும் இணைந்து பணிபுரிய காத்திருக்கிறேன் நன்றி.

நாயகி பிரியங்கா அருள் மோகன் பேசியதாவது ….
இப்படம் எனக்கு கிடைத்ததை ஆசிர்வாதமாகத்தான் பார்க்கிறேன். என்னுடைய அறிமுக படமே பெரிய படமாக கிடைத்தது மகிழ்ச்சி. SK நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என வளர்ந்துகொண்டே போகிறார் அவருக்கு நன்றி. என்னை அறிமுகப்படுத்திய இயக்குநருக்கு நன்றி. அனிருத் இசை அட்டாகாசமாக இருகிறது. அருண் எனக்கு அண்ணாவாக நடித்தார் உண்மையிலும் அண்ணாவாக இருந்தார். இப்படம் மிகப்பெரிய புகழை பெற்று தந்திருக்கிறது. மிகப்பெரிய சந்தோஷத்தை தந்துள்ளது. படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் நன்றி.

இயக்குநர் நெல்சன் பேசியதாவது….
முதலில் சிவகார்த்திகேயன் வழக்கமாக அவரது படங்கள் போல் இல்லாமல் இருக்க வேண்டும் என்று அவரிடம் பேசி தான் இப்படம் எடுக்கலாம் என முடிவு செய்தோம். அவரிடம் இரண்டு ஐடியா சொன்னேன் இரண்டுமே நல்லாருக்கு நீங்களே முடிவு பண்ணுங்கள் என்றார். என் கடமை அதிகமாகிவிட்டது. படம் எடுக்க ஆரம்பித்த இரண்டு வாரத்தில் இது நன்றாக வந்துவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. படம் நினைத்தது போலவே ஒரு நல்ல படமாக வந்துள்ளது. சிவகார்த்திகேயனே படத்தயாரிப்பாளர் என்பதால், அது எனக்கு உதவியாக இருந்தது. என்னை கேள்வி கேட்காமல் முழு சுதந்திரம் இருந்தது. விஜய் கார்த்திக் ஒவ்வொரு ஷாட்டுக்கும் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார். ஆனால் நினைத்ததை கொண்டு வந்து விடுவார். முழுப்படத்தையும் எடிட் பண்ணியதற்குப்புறம், எனக்கே தெரியாமல் எடிட் செய்துவிட்டார் நிர்மல். அந்தளவு படத்துடன் ஒன்றியிருப்பார். ப்ரியங்கா அவரது முழுத்திறமை இந்தப்படத்தில் வெளிப்படவில்லை, அவருடன் மீண்டும் படங்கள் செய்வேன். வினய் பார்த்து பழகும் போது அப்பாவியாக இருந்தார் ஆனால் படத்தில் வில்லனாக அசத்தியுள்ளார். அருணை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். அவரை எல்லாப்படத்திலும் வைத்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன் அவர் இல்லாதது மிகப்பெரும் வருத்தம். அனிருத்தை வைத்து தான் திரைக்கதையே எழுதுவேன் அவர் இப்படத்திற்கு மிகப்பெரிய பலம். படமும் நினைத்தது போல அழகாக வந்திருக்கிறது. படம் பாருங்கள் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் பேசியதாவது

நான் ஒரு படத்திற்கு நோ சொல்லியிருக்கிறேன் அதையும் தாண்டி இந்தப்படத்திற்கு அழைத்ததற்கு சிவகார்த்திகேயனுக்கு நன்றி. படம் மிகப்பெரிய பொழுதுபோக்கு படமாக இருக்கும். நிறைய காட்சிகளில் நான் சிரித்து, கேமரா ஆடி, டேக் கட்டாகியிருக்கிறது. அந்த அளவு ரசிகர்களை இந்தப்படம் சிரிக்க வைக்கும்.

நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது….

இரண்டு வருடங்கள் கழித்து அனைவரையும் சந்தித்தது மகிழ்ச்சி. எனக்கு பாட்டு எழுதும் நம்பிக்கை எல்லாம் இருந்தது இல்லை. நெல்சன் தான் அவரது முதல் படத்தில் ஆரம்பித்து வைத்தார். இப்படத்தில் செல்லம்மா பாடல் எளிதாக இருந்தது. ஆனால் ஓ பேபி பாடல் கொஞ்சம் கஷ்டமாக பயமாக இருந்தது. அதிலும் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. மக்களுக்கு பிடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப்படத்தில் எனக்கு டயாலாக்கே இல்லை. மொத்தமாகவே ஒரு பத்து டயலாக் தான். எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும் போது நான் படத்தில் பேசாமல் இருந்தது கஷ்டமாக இருந்தது. ஆனால் நெல்சன் எப்படி என்னை இப்படி யோசித்தார் என்று தோன்றியது. வினய் உன்னாலே உன்னாலே படம் பார்த்ததில் இருந்து பிடிக்கும். நான் உயரமாக இருக்கிறேன் என்று நினைத்து கொண்டிருந்தேன் ஆனால் வினய் முன்னால் நடிக்கும் போது எனக்கே ஆப்பிள் பாக்ஸ் போட்டு தான் நின்றேன். மனுஷன் மிகப்பெரிய உயரமாக இருந்தார். அவரது குரலும் பாடியும் படத்திற்கு மிகப்பெரிய பலம். ப்ரியங்காவிற்கு தமிழ் தெரிந்தது மிகப்பெரிய உதவியாக இருந்தது. தமிழ் தெரிந்த நடிகையுடன் நடிக்கும் போது, படப்பிடிப்பிலேயே காட்சி எப்படி வரும் என்ற தெளிவு இருக்கும். ரெடின், யோகிபாபு இப்படத்தில் கலக்கியுள்ளனர். அருண் ப்ரோ அவர் இப்படத்தில் செய்தது காலாகாலத்திற்கும் பேசப்படும், அவரை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். விஜய் கார்த்திக் ஒளிப்பதிவு படத்தில் அட்டகாசமாக இருக்கும், தியேட்டரில் பார்த்தால் உங்களுக்கு புரியும். அனிருத் தான் இந்தப்படத்தை அறிவித்ததிலிருந்தே, இதற்கு அடையாளமாக இருந்தவரே அவர்தான். இந்தப்படம் நடித்த அனைவருக்குமே முக்கியமான படமாக இருக்கும். இந்தப்படம் எல்லாருக்கும் பிடிக்கும் ஒரு படமாக இருக்கும் நன்றி.

நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்கியுள்ள “டாக்டர்” திரைப்படத்தை , சிவகார்த்திகேயனின் Sivakarthikeyan Productions உடன் இணைந்து, KJR Studios சார்பில் கோட்டபாடி J ராஜேஷ் தயாரிக்கிறார். சிவகார்த்திகேயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை விஜய் கார்த்திக் செய்துள்ளார். R. நிர்மல் எடிட்டிங் செய்துள்ளார். அக்டோபர் 9 ந்தேதி இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Sivakarthikeyan speech at Doctor press meet

சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து…; மாமனாருக்கு ரசிகர்கள் வாழ்த்து

சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து…; மாமனாருக்கு ரசிகர்கள் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர்.

இவர்களின் திருமண வாழ்க்கை 4 ஆண்டுகள் கூட நீடிக்காத நிலையில் தன் கணவரை பிரிவதாக சமூக வலைதளத்தில் அறிவித்தார் நடிகை சமந்தா.

இது இவர்களின் தென்னிந்திய ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விவாகரத்து பற்றி நாக சைதன்யாவின் தந்தையும் பிரபல தெலுங்கு நடிகருமான நாகர்ஜுனா ட்வீட் செய்தார்.

அதில்…

சாம் மற்றும் சைய் இடையே நடந்தது துரதிர்ஷ்டவசமானது. கணவன், மனைவி இடையே நடந்தது பர்சனலானது.

சாமுடன் செலவிட்ட நேரத்தை என் குடும்பம் என்றும் மறக்காது. அவர் எப்பொழுதுமே எங்களுக்கு நெருக்கமானவர் தான். கடவுள் அவர்களுக்கு தெம்பை அளிக்கட்டும் என ட்வீட் செய்திருந்தார்.

மருமகள் சமந்தா பிரிந்து சென்ற போதிலும் அவரை உயர்வாக பேசும் (மாமனார்) உங்கள் மனசு தான் அண்ணய்யா கடவுள் என நாகர்ஜுனாவை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

South indian fans reaction on Chay – Sam divorce

30 வருடங்கள் கடந்தும் கலையுலகில் கலக்கும் நடிகர் விச்சு விஸ்வநாத்

30 வருடங்கள் கடந்தும் கலையுலகில் கலக்கும் நடிகர் விச்சு விஸ்வநாத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நவரசமான நடிப்புடன் நகைச்சுவை கலந்து நடித்த பல படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் விச்சு விஸ்வநாத்.

குணச்சித்திர வேடங்களிலும் நகைச்சுவை நடிகராகவும் பல படங்களில் நடித்தவர் இவர்.

30 வருடங்களுக்கு மேலாக இந்த திரையுலகில் ஒரு நடிகராக நிலை நிறுத்தி கொண்டுள்ள நடிகர் விச்சு விஸ்வநாத் கூறுகையில்…

“30 ஆண்டுகளுக்கும் மேலாக பல படங்களில் நடித்துள்ளேன்.

நாம் சந்தோஷமாக இருந்தால் அந்த உணர்வு நம்மை சுற்றி உள்ளவர்களிடம் அதனுடைய ஆதிக்கத்தை செலுத்தும் என்று நம்புபவன் நான்.

அதனால் தானோ என்னவோ நான் குணசித்திரம் கலந்த நகைச்சுவை வேடங்களை தேர்ந்தெடுக்கிறேன்.

தற்போது இயக்குனர் சுந்தர்.C இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரண்மனை 3’ படத்தில் நடித்துள்ளேன். அவர் இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை 2 படத்திலும் நடித்துள்ளேன்.

அரண்மனையின் முதல் இரண்டு படங்களிலும் வித்தியாசமான தோற்றித்தில் நடித்ததை தொடர்ந்து தற்போது அரண்மனை 3 படத்திலும் அதே போல் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளேன்.

எனக்கு இந்த வாய்ப்பை அளித்த இயக்குனர் சுந்தர்.C அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி ‘அரண்மனை 3’ படம் அமைந்துள்ளது.” என்றார்.

Actor Vichu Viswanath completes 30 years in cine industry

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் ‘உடன் பிறப்பே’ பட ட்ரைலர் ரிலீஸ் அப்டேட்

சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் ‘உடன் பிறப்பே’ பட ட்ரைலர் ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகி வரும் நான்கு திரைப்படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

அதன்படி ’ஜெய்பீம்’, ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’, ‘ உடன் பிறப்பே‘, ‘ ஓ மை டாக் ‘ உள்ளிட்ட படங்களின் வெளியீட்டு உரிமையை அமேசான் பிரைம் பெற்றுள்ளது.

இதில் ஒன்றான ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படம் ஓடிடியில் ரிலீசாகிவிட்டது.

சூர்யா நடித்துள்ள ‘ஜெய்பீம்’ படம் தீபாவளி விருந்தாக நவம்பர் 2ல் வெளியாகிறது.

மற்றொரு படமான ‘உடன்பிறப்பு’ படம் ஜோதிகாவின் 50 வது படமாக தயாராகி உள்ளது.

இந்தப் படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் ஜோதிகா நடித்துள்ளார்.

மாதங்கியும், வைரவனும் உடன்பிறப்புகள். மாதங்கியின் கணவன் சற்குணத்தால் இவர்கள் உறவில் விரிசல் விழுகிறது.

அண்ணனா,? கணவனா? என்ற இரு துருவங்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு தவிப்பவராக மாதங்கியின் கேரக்டர் எழுதப்பட்டுள்ளது.

இதில் மாதங்கியாக ஜோதிகாவும், உடன்பிறந்த சகோதரன் வைரவனாக சசிகுமாரும், மாதங்கியின் கணவன் சற்குணமாக சமுத்திரக்கனியும் நடித்துள்ளனர்.

முக்கிய வேடத்தில் கலையரசன் மற்றும் சூரி நடித்துள்ளனர்.

இமான் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் படம் தயாராகி உள்ளது. சரவணன் என்பவர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

இவர் 2015ல் வெளியான கத்துக்குட்டி படத்தை இயக்கியவர்.

வருகிற அக்டோபர் 14ல் ஆயுதபூஜை ஸ்பெஷலாக அமேசானில் ‘உடன்பிறப்பு’ வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று அக்டோபர் 4ஆம் தேதி மாலை 5 மணிக்கு இப்பட ட்ரைலர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

உடன் பிறப்பு…
தயாரிப்பு – 2 டி என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – இரா.சரவணன்
இசை – இமான்
நடிப்பு – சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, கலையரசன், சூரி மற்றும் பலர்.
பிஆர்ஓ – யுவராஜ்

The trailer of Udan Pirappe is dropping today at 5PM

‘சீன் நம்பர் 62’ படத்தின் மூலம் அறிமுகமாகும் மலையாள பாடகி நஞ்சியம்மா

‘சீன் நம்பர் 62’ படத்தின் மூலம் அறிமுகமாகும் மலையாள பாடகி நஞ்சியம்மா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல மலையாள பாடகி நஞ்சியம்மா ‘சீன் நம்பர் 62’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

‘ஐயப்பனும் கோஷியும்’ படத்தில் அவர் பாடிய ‘கலக்காத…’ பாடல் மிகப்பெரிய வெற்றி அடைந்து யூடியூபில் 4 கோடி பார்வைகளை நெருங்கி வருகிறது.

‘சீன் நம்பர் 62’ திரைப்படத்திற்காக உயிரோட்டமுள்ள பாடல் ஒன்றை அவர் பாடியுள்ளார்.

மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த பாடல் விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், பிக் பாஸ் புகழ் ஆஜீத் காலிக்கும் இப்படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார்.

திரைப்படத்துறை குறித்து தமிழில் ஏற்கனவே படங்கள் வெளியாகி உள்ள போதிலும், இது வரை யாரும் தொடாத ஒரு கதைக்களத்தில் உருவாகி வருகிறது, திகில் கலந்த கிரைம் திரில்லரான ‘சீன் நம்பர் 62’.

‘ஆதாம்’ திரைப்படத்தின் மூலம் மலையாள திரை உலகில் தடம் பதித்த ‘ஆதாம்’ சமரின் இயக்கத்தில் வளர்ந்து வரும் ‘சீன் நம்பர் 62’ திரைப்படத்தை வேணு ஜி ராமின் நவமுகுந்தா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

பவன்புத்ரா பிலிம் புரொடக்ஷனின் நிகில் ஆர் இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் ஆவார்.

பௌதிஷ், அமல்தேவ், கோகிலா கோபால், ஜாய்ஸ் எலிசபெத், வி ஜே வைத்தி, ஐஸ்வர்யா நாயர் மற்றும் ராகந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சென்னை, புதுச்சேரி, கொடைக்கானல் மற்றும் பொள்ளாச்சியில் ‘சீன் நம்பர் 62’ படமாக்கப்பட்டுள்ளது.

தமிழில் ‘இரட்டையர்’ மற்றும் தெலுங்கில் ‘ஓய் இடியட்’ ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஜிகேவி, ‘சீன் நம்பர் 62’-க்கு இசை அமைக்கிறார்.

விஜய் வெங்கட் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘சதுரங்க வேட்டை’, ‘பாம்பு சட்டை’, ‘ஜோதி’ மற்றும் ‘டைரி’ ஆகிய திரைப்படங்களின் படத்தொகுப்பாளரான எஸ் ஆர் ராஜா சேதுபதி ‘சீன் நம்பர் 62’-ன் எடிட்டர் ஆவார்.

பரப்பரப்பான சண்டைக் காட்சிகளை ‘மிரட்டல்’ செல்வா மற்றும் ஹைப்ரிட் களரி அர்ஜுன் வடிவமைத்துள்ளனர். கலை இயக்கத்தை டி கே தினேஷ்குமார் கையாண்டுள்ளார்.

அன்சாரி இஸ்மாக் ஒப்பனையையும், சோஹிப் ஜயி உடைகளையும், விளம்பர வடிவமைப்பை சரோவ்வும் கையாண்டுள்ளனர்.

ரஜீஷ் பதம்குளம் மற்றும் ரினீஷ் திட்ட வடிவமைப்பாளராக பொறுப்பேற்றுள்ளனர். மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் கவனிக்கிறார்.

ரசிகர்களை கவரும் பல்வேறு அம்சங்களோடு ‘சீன் நம்பர் 62’ விரைவில் வெளியாகவுள்ளது.

Malayali singer Nanjiyamma sung one song in scene no 62

சதீஷை அடுத்து ‘கோமாளி’ இயக்குனரையும் ஹீரோவாக்கிய ‘நாய் சேகர்’ படக்குழு

சதீஷை அடுத்து ‘கோமாளி’ இயக்குனரையும் ஹீரோவாக்கிய ‘நாய் சேகர்’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘கோமாளி’.

ப்ரதீப் ரங்கநாதன் இயக்கிய இந்த படம் 2019ல் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க இசையமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி ஆகியோர் பணிபுரிந்து இருந்தனர்.

‘கோமாளி’ படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றதால் பிரதீப்பின் அடுத்த படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு உருவானது.

இந்த நிலையில் ப்ரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தில் அவரே நாயகனாக நடித்து இயக்கவுள்ளார்.

இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சதீஷ் ஹீரோவாக நடிக்கும் ‘நாய் சேகர்’ படத்தையும் இதே நிறுவனம் தான் தயாரிக்கிறது.

விஜய் நடித்த ‘பிகில்’ & ஜெயம் ரவி நடித்த ‘தனி ஒருவன்’ உள்ளிட்ட படங்களை இந்த நிறுவனம் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனத்தின் 22வது படமாக இது உருவாகவுள்ளது.

Comali director turns hero for his next film

More Articles
Follows