தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் காமெடி மன்னனாக கலக்கியவர் கவுண்டமணி. 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்த இவர் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.
இறுதியாக கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான 49 ஓ என்ற படத்தில் நடித்திருந்தார்.
பிறகு உடல் நலக்குறைபாடு காரணமாக ஓய்வில் இருந்தார் கவுண்டமணி.
தற்போது மீண்டும் ‘பழனிச்சாமி வாத்தியார்’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
பேயை காணோம் படத்தை இயக்கிய அன்பரசன் இப்படத்தை இயக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் மாணவனாக சிறப்பு தோற்றத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக தகவல்கள் வந்தன. ஆனால் இதை சிவகார்த்திகேயன் தரப்பு மறுத்துள்ளது.
Sivakarthikeyan as Goundamani’s student in palanisamy vaathiyar?