மீண்டும் நாயகனாகும் கவுண்டமணி.; யோகிபாபு & 11 தயாரிப்பாளர்களுடன் கூட்டணி

மீண்டும் நாயகனாகும் கவுண்டமணி.; யோகிபாபு & 11 தயாரிப்பாளர்களுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் மதுரை செல்வம் பிரமாண்டமாக தயாரிக்கும் 2வது படம் ” பழனிச்சாமி வாத்தியார் ”

அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் ரசிகர்கள் மனதில் தனி சிம்மாசனமிட்டு இருப்பவர் காமெடி கிங் கவுண்டமணி.

சமூக அக்கறைகொண்ட விஷயங்களைகூட போகிற போக்கில் தனது வசனத்தால், உடல்மொழியால் விதைத்து செல்லும் வித்தை கவுண்டமணிக்கு கைவந்த கலை.

தமிழக மக்களின் நகைச்சுவை விருந்தாகவும் மருந்தாகவும் எப்போதும் தனது பங்களிப்பை செய்துவரும் கவுண்டமணி நகைச்சுவை அரசன் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

அவருடன் யோகி பாபு, கஞ்சா கருப்பு இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

மற்றும் ராதாரவி, சித்ரா லட்சுமணன், T.சிவா, மனோபாலா, J.S.K. சதீஷ் குமார்,நந்தகோபால், R.K. சுரேஷ், மதுரை டாக்டர் சரவணன், மங்கை அரிராஜன், திருச்சி சுரேந்தர், சாந்தகுமார், ஆகிய 11 தயாரிப்பாளர்களும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள்.

மற்ற நடிகை நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

wide angle ரவிசங்கர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

கவிப்பேரரசு வைரமுத்து வரிகளுக்கு
தனித்த இசை, மனதில் நிற்கும் பாடல்களை தந்த இசையமைப்பாளர் K இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இவர் ஏற்கனவே கவுண்டமணி நடித்த 49 ஓ படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அ.நாகராஜ் எடிட்டிங் செய்ய , கலை இயக்குனராக ராஜா பணியாற்றுகிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – திரைப்பட கல்லூரி மாணவரான செல்வ அன்பரசன்.

Executive Producer & Pro – மணவை புவன்

தயாரிப்பு – மதுரை செல்வம்

இந்த படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது. படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது.

இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்காக பிரபல கதாநாயகன் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Goundamani is hero again.; Yogibabu & 11 Producers joins the film

தனது பாலிவுட் படத்தின் பணியை மீண்டும் தொடங்கிய சமந்தா

தனது பாலிவுட் படத்தின் பணியை மீண்டும் தொடங்கிய சமந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை சமந்தா உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

சில நாட்களுக்கு முன்பு அவர் மும்பை விமான நிலையத்தில் வெள்ளை உடையில் காணப்பட்டார். வலுவாக மீண்டு வந்ததற்காக அவரது ரசிகர்கள் பலர் மகிழ்ச்சியடைந்தனர்.

தனது முழு வெள்ளை உடையில் அனைவரையும் முற்றிலும் திகைக்க வைத்தார். அவள் ஒரு வெள்ளை நிற பேன்ட்-சூட்டை அணிந்து, அதே நிறத்தில் ஒரு பிளேசர் அணிந்து தனது ஃபேஷன் விளையாட்டை அதிகரிக்க கருப்பு கண்ணாடிகளை அணிந்திருந்தார் மற்றும் எப்போதும் போல் அழகாக இருந்தார்.

கூடிய விரைவில் தனது பட வேலைகளை ஆரம்பிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Samantha’s indirect hint on resuming work for her Bollywood project

OFFICIAL முதன்முறையாக ரஜினிகாந்துடன் இணையும் தமன்னா

OFFICIAL முதன்முறையாக ரஜினிகாந்துடன் இணையும் தமன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்தியாவின் மூன்று சூப்பர் ஸ்டார்கள் ரஜினிகாந்த் மோகன்லால் சிவராஜ்குமார் ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் ”ஜெயிலர்’.

நெல்சன் இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் சுனில், ரம்யா கிருஷ்ணன் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் தமன்னா ரஜினி உடன் இணைவார் என நாம் FILMISTREET தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

இந்த நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் தமன்னா இணைவதாக அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ரஜினி உடன் தமன்னா இணைவது இதுதான் முறை முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tamannaah is on board for Rajinikanth’s jailer

விக்ரம் பிரபுவின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படம் விரைவில் ரிலீஸ்…

விக்ரம் பிரபுவின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படம் விரைவில் ரிலீஸ்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் அத்வைத் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’.

இப்படத்தில் வாணி போஜன் நாயகியாக நடிக்க, கன்னட நடிகர் தனஞ்சயா மற்றும் நகைச்சுவை நடிகர் விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.

இசையமைப்பாளர் மணி சர்மாவின் மகன் மஹதிர் ஸ்வர சாகரும் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இப்படத்தை மகாலட்சுமி ஆர்ட்ஸ் தயாரிக்க, தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், இசையமைப்பாளர் சாகர், படத்தொகுப்பு கோத்தகிரி வெங்கடேஸ்வரராவ்.

இறுதியாக இப்படம் விரைவில் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.

Vikram Prabhu’s ‘Paayum Oli Nee Yenakku’ is released soon

உலக பணக்காரர்கள் பட்டியலில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களை பின்னுக்கு தள்ளிய ஷாருக்கான்

உலக பணக்காரர்கள் பட்டியலில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களை பின்னுக்கு தள்ளிய ஷாருக்கான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகின் பணக்கார நடிகர்கள் பட்டியலில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களான டாம் குரூஸ் மற்றும் ஜாக்கி சான் ஆகியோரை ஷாருக்கான் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

பாலிவுட் பாட்ஷா என்று போற்றப்படும் அவரது நிகர மதிப்பு சுமார் 770 மில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உலக புள்ளிவிவரங்கள் சமீபத்தில் வெளியிட்ட தரவுகளில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஷாருக்கான் நடிப்பு மட்டுமின்றி, திரைப்பட தயாரிப்பு, விஎஃப்எக்ஸ் மற்றும் கேம்ப்ளே உள்ளிட்ட பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டுள்ளார்.

Shah Rukh Khan overtakes top Hollywood superstars in world’s richest list

ஜஸ்ட் ரூ 20000 கூட செலுத்தாத ஐஸ்வர்யா ராய்..; வருவாய்த்துறை நோட்டீஸ்

ஜஸ்ட் ரூ 20000 கூட செலுத்தாத ஐஸ்வர்யா ராய்..; வருவாய்த்துறை நோட்டீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து பலரின் பாராட்டையும் பெற்று இருந்தார்.

தற்போது அஜித்துக்கு ஜோடியாக ஏகே 62 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மஹாராஷ்ட்ரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள சின்னாரில் ஐஸ்வர்யா ராய் பெயரில் ஒரு ஹெக்டேர் நிலம் உள்ளது.

இந்த நிலத்திற்கு கடந்த ஓராண்டாக அவர் நில வரி செலுத்தவில்லை என கூறப்படுகிது.

இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது நாசிக் மாவட்ட வருவாய்த்துறை.

அந்த நோட்டீஸில் 10 நாட்களுக்குள் Rs 21,960 தொகையை நில வரியாக செலுத்தவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என (under section 174 of the Maharashtra Land Revenue Act, 1966) சட்டப்படி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Aishwarya Rai got notice for non payment of land tax in Nashik

More Articles
Follows