தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
செப்டம்பர் 25 இன்று மதியம் 1.04 நிமிடங்களுக்கு பிரபல பாடகர் SP பாலசுப்பிரமணியம் அவர்கள் உயிர் பிரிந்தது.
அவரது மறைவுக்கு ரசிகர்கள், அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
மேலும் பாடகர் எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஐபிஎல் போட்டியில் கருப்பு பேண்ட் அணிந்து விளையாடி வருகின்றனர் சென்னை, டெல்லி அணி வீரர்கள்.
சென்னை நுங்கம்பாக்கத்திலிருந்து
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்திலுள்ள பண்ணை வீட்டுக்கு எஸ்பிபியின் உடல் கொண்டு செல்லப்படுகிறது.
கொரோனா தொற்று காரணமாக தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்பிபி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை என திருவள்ளூர் எஸ்பி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம்
செய்யப்படும்.
தமிழகம் மட்டுமின்றி இந்திய மக்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் எஸ்.பி.பி.
அவரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் காவல்துறை மரியாதை என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
Singer SPB’s Funeral With Full State Honours on Saturday