தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சீனியர் நடிகர்கள் தங்கள் வாரிசுகளை களத்தில் இறக்கி அழகு பார்த்து வருவது நெடுங்காலமாகவே நடந்து வரும் ஒன்றுதான்.
சிவாஜி கணேசன் தன் மகன் பிரபுவை சினிமாவில் இறக்கினார். அதன் பின்னர் பிரபு தன் மகன் விக்ரமை சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.
அதுபோல் முத்துராமன் மகன் கார்த்தி, கார்த்திக் மகன் கௌதம் ஆகியோரும் சினிமாவில் கலக்கி வருகின்றனர்.
இதுபோல் பலரும் தங்கள் வாரிசுகளை சினிமாவுக்கு கொண்டு வந்து அவர்களை வழி நடத்தி செல்கின்றனர்.
சில நேரங்களில் அவர்களுக்கு சரியான படங்கள் இல்லையென்றால் தாங்களே தயாரிப்பாளராக மாறிவிடுவார்கள்.
தற்போது காமெடி நடிகர் சிங்கமுத்துவும் இந்த பாணியில் இறங்கியுள்ளார்.
அவர் தயாரிக்கும் ‘பாசக்கார கூட்டம்’ படத்தில் அவரது மகன் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார்.
இதில் அனைத்து பாடல்களையும் சிங்கமுத்துவே எழுதி இருக்கிறார்.
இந்த படத்துக்கு, ஸ்டீபன் ராயல் இசையமைத்துள்ளார்.
இசையமைப்பாளர் ஸ்டீபன் ராயல் இந்த படம் பற்றி கூறியதாவது…
“சிங்கமுத்து தயாரிக்கும் தயாரிக்கும் ‘பாசக்கார கூட்டம்’ படத்தில் 50 இசை கலைஞர்களை வைத்து வித்தியாசமான பாடல் ஒன்றை பதிவு செய்திருக்கிறேன்.
சின்மயி ஹரிசரண் பாடியுள்ள ‘எங்க குலசாமி…மல்லிகைப்பூ’ பாடல் மிகுந்த வரவேற்பை பெறும்.
ஒரு பாடலின் வெற்றிக்கு இசை அமைப்பாளர் மட்டும் காரணம் அல்ல. பாடல் ஆசிரியர், பாடகர், சவுண்டு என்ஜினீயர் என்று பலருடைய திறமையும் அதில் இருக்கிறது.
இந்த படம் தவிர ‘குற்றாலம்’, ‘ஆனந்தமழை’ ஆகிய படங்களுக்கும் இசையமைத்துள்ளேன்” என்று கூறினார்.