தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
போர் வரும்போது சந்திப்போம் என தன் அரசியல் பிரவேசத்தை முறைமுகமாக தெரிவித்துவிட்டு படத்தில் நடிக்க சென்றுவிட்டார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
அவர் ஸ்டைலில் சொன்னால் பத்த வச்சிட்டியே பரட்டை என்பதுபோல அவரின் பேச்சு இன்றுவரை அரசியல் உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காமெடி நடிகர் சிங்கமுத்து அவர்கள் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பேசியிருப்பதாவது..
“இளமையாக இருக்கும்போது நடிக்க சென்றுவிட்டார் ரஜினிகாந்த்.
இப்போது வயதாகி விட்டது. இனி அவர் அரசியலுக்கு வந்து எந்த பலனும் இல்லை.
இப்போது முடிந்தால் மக்களுக்கு சேவை செய்வேன் என்கிறார்.
மக்களுக்காக அவர் இதுவரை என்ன செலவு செய்துள்ளார்?
ரஜினி நடிக்கலாம்; சம்பாதிக்கலாம்; ஆனால் ஆட்சி செய்ய ஆசைப்படக்கூடாது.
தனது சொத்துகளை எல்லாம் ஏழைகளுக்கு எழுதி வைத்து விட்டு ரஜினி அரசியலுக்கு வரட்டும்” என சிங்கமுத்து கூறியுள்ளார்.